சுவையான கனிகளை
இரசித்து உண்ட பின்
அது உண்டான மரம் பார்க்கும் ஆசை
வெக்கைப் போக
அந்த இதமான சூழலைத் தந்த
கருமேகங்களைக் காண ஆசை
நல்ல விருந்தினை
இரசித்துப் புசித்தப் பின்
அதைச் சமைத்தவனைப் பார்க்கும் ஆசை
மணக்கும் மல்லிகையைப்
நுகர்ந்ததும்
மதுரையைப் பார்க்கும் ஆசை
மொறுமொறு முறுக்கினை
கடித்து முடித்ததும்
மணப்பாறைப் பார்க்கும் ஆசை
நாவைக் குளமாக்கும் அல்வாவை
உண்டு முடித்ததும்
நெல்லையைக் காணும் ஆசை
விடாது தொடருதல் போல
சிறந்தப் பதிவுகளைப் படித்ததும்
அதைப் படைத்தவனைப்
பார்க்கும் ஆசை
விடாது தொடருதல் என்னுள்
நடந்து முடிந்த சந்திப்புக்கள்
தொடர்ந்து ஓடுது கண்ணுள்
என்று ?
எங்கு ?
எப்போது ?
என்னும் கேள்விகளோடு
வழக்கம்போல்
ஊதுகிற சங்கை ஊதிவைக்கிறேன்
விதைக்கிற விதையை விதைத்து வைக்கிறேன்
சரணங்களும்
அனுசரணங்களும்
பல்லவியைத் தொடரும்
என்கிற அதீத நம்பிக்கையுடன்
இரசித்து உண்ட பின்
அது உண்டான மரம் பார்க்கும் ஆசை
வெக்கைப் போக
அந்த இதமான சூழலைத் தந்த
கருமேகங்களைக் காண ஆசை
நல்ல விருந்தினை
இரசித்துப் புசித்தப் பின்
அதைச் சமைத்தவனைப் பார்க்கும் ஆசை
மணக்கும் மல்லிகையைப்
நுகர்ந்ததும்
மதுரையைப் பார்க்கும் ஆசை
மொறுமொறு முறுக்கினை
கடித்து முடித்ததும்
மணப்பாறைப் பார்க்கும் ஆசை
நாவைக் குளமாக்கும் அல்வாவை
உண்டு முடித்ததும்
நெல்லையைக் காணும் ஆசை
விடாது தொடருதல் போல
சிறந்தப் பதிவுகளைப் படித்ததும்
அதைப் படைத்தவனைப்
பார்க்கும் ஆசை
விடாது தொடருதல் என்னுள்
நடந்து முடிந்த சந்திப்புக்கள்
தொடர்ந்து ஓடுது கண்ணுள்
என்று ?
எங்கு ?
எப்போது ?
என்னும் கேள்விகளோடு
வழக்கம்போல்
ஊதுகிற சங்கை ஊதிவைக்கிறேன்
விதைக்கிற விதையை விதைத்து வைக்கிறேன்
சரணங்களும்
அனுசரணங்களும்
பல்லவியைத் தொடரும்
என்கிற அதீத நம்பிக்கையுடன்








