Thursday, August 29, 2013

பதிவர் சந்திப்பு கவுண்ட் டவுன்

தாமரைப் பூத்த தடாகம்
பார்க்கையில் கொள்ளை அழகுதான்
ஆயினும் அது தேக்கிவைத்திருக்கும் குளுமை
அதனினும் மிக அருமையானது
அது பார்வைக்குப் பிடிபடாதது
அந்த சொல்லுக்கு அடங்கா இனிமை
குளத்தினுள்  இறங்கிடத் துணிபவருக்குமட்டுமே
நிறைவாய் கிடைத்திட என்றும் சாத்தியம்

தத்தித் தவழும் குழந்தை
பார்க்கப் பார்க்க  அழகுதான்
ஆயினும் அது தன்னுள் கொண்டிருக்கும்
தெய்வீக மகிழ்வுப் பிரவாகம்
பார்வைக்குப் பிடிபடாதது
அதன் அருமை பெருமை
அதனை அள்ளிக் கொஞ்சத் தெரிந்தவர்கள் மட்டுமே
முழுதாய் அனுபவத் தறியச் சாத்தியம்

சன்னதிக்குள் காட்சிதரும் தெய்வம்
கண்கொள்ளா அருமைக் காட்சிதான்
அதனினும் அதன் அளவிடமுடியா அருட்திறம்
அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது
ஆயினும் அதன் அருளும் சக்தி
மாசற்ற நம்பிக்கை கொண்டவர்கள் மட்டுமே
அறிந்து உணர்ந்து பெறச் சாத்தியம்

எழுத்தில் அறிந்த பதிவர்களை
எதிரில் காணுதல் மகிழ்வுதான்
அதனினும் அவர்தம் பண்பு நலம்
நட்புக்கென உயிர்தரும் உயர்குணம்
பதிவில் அறிய முடியாததே
விளக்கியும் புரிய முடியாததே
ஆயினும் அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து  மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய்  முழுதாய் புரியச் சாத்தியம்

எனவே
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்

33 comments:

ஸ்ரீராம். said...

பதிவர் சந்திப்புக்கு முழு வீச்சில் தயாராகி விட்டீர்கள் என்று தெரிகிறது. எந்தப் பக்கம் திரும்பினாலும் இத் பற்றியே பதிவுகள்! வாழ்த்துகள்.

ராஜி said...

எழுத்தில் அறிந்த பதிவர்களை
எதிரில் காணுதல் மகிழ்வுதான்
>>
அப்படி சந்திக்க போகும் தருணத்தை நினைத்தாலே பரிட்சை எழுத போகும் மாணவன் நிலையில் இருக்கிறது என் மனம்

Anonymous said...

தித்திப்பான சந்திப்பு நிகழ இன்னும் இரு
நாட்களே . அதுவரை கண் துஞ்சாது ஊண்
உண்ணாது பொறுமை காப்போம்.

கோமதி அரசு said...

அவர்தம் அருமை பெருமைதனை
சந்திப்பில் சந்தித்து மகிழ்ந்திருப்போர் மட்டுமே
தெளிவாய் முழுதாய் புரியச் சாத்தியம்//

உண்மை. அழகாய் சொன்னீர்கள்.
பதிவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்.
வாழ்த்துக்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை. அழகாய் சொன்னீர்கள்.
பதிவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்.
வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

சந்திக்க தயாராக நானும்.....

சந்திப்போம்.

சீனு said...

//அறிவிற்குப் பிடிபடாததது
நிரூபிக்க இயலாதது// சத்தியமான உண்மை

பதிவர் சந்திப்பை எதிர்நோக்கி மிக ஆவலுடன்

திண்டுக்கல் தனபாலன் said...

பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்...
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்...

இளமதி said...

//பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்//

ஆமாம் ஐயா நீங்கள் யாவரும் சந்தித்து சக்தியை முழுதாய் உணருங்கள்
உங்கள் உணர்வினை நாம் ஒளிப்பதிவினூடாக கண்டு மகிழ்கின்றோம்!

விழா சிறக்கட்டும்!
பதிவர் புகழ் விரைந்து பரவட்டும்!!

வாழ்த்துக்கள் ஐயா!

அம்பாளடியாள் said...

அனைவரினது எண்ணம் போலும் பதிவர்கள் சந்திப்பு மிகச் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் .சிறப்பான இக் கவிதைக்கும் பாராட்டுக்கள் ஐயா .

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

தித்திப்பான சந்திப்பை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்.

சசிகலா said...

அழகாக சொல்லிவிட்டீர்கள் ஐயா.

குட்டன்ஜி said...

சும்மா அதிருதில்ல!

கவியாழி said...

வாங்சார்எங்களைவாழ்துங்கஅய்யா

G.M Balasubramaniam said...


எதிர்பார்ப்புகளைக் கூட்டும் பதிவு. வாழ்த்துக்கள்.

Manimaran said...

சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்...

Matangi Mawley said...

On one hand there is an excitement about the bloggers meet- whenever i read about it in your blog here.. on the other hand- there is a slight nervousness about going there. since i feel that i wouldn't know any one there. still- ambivalent about it...

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //.

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி said..//.

>>அப்படி சந்திக்க போகும் தருணத்தை நினைத்தாலே பரிட்சை எழுத போகும் மாணவன் நிலையில் இருக்கிறது என் மனம்

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி said...//
தித்திப்பான சந்திப்பு நிகழ இன்னும் இரு
நாட்களே . அதுவரை கண் துஞ்சாது ஊண்
உண்ணாது பொறுமை காப்போம்.//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி


Yaathoramani.blogspot.com said...

கோமதி அரசு said...
/
உண்மை. அழகாய் சொன்னீர்கள்.
பதிவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்.
வாழ்த்துக்கள்.//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி
//

Yaathoramani.blogspot.com said...

கரந்தை ஜெயக்குமார் said...//
உண்மை. அழகாய் சொன்னீர்கள்.
பதிவர்களை சந்தித்து மகிழ்ந்திருங்கள்.
வாழ்த்துக்கள்//


தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி




.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் said...//
சந்திக்க தயாராக நானும்....


தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி//


Yaathoramani.blogspot.com said...

சீனு said...//
/
பதிவர் சந்திப்பை எதிர்நோக்கி மிக ஆவலுடன்

/தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி///

Yaathoramani.blogspot.com said...

திண்டுக்கல் தனபாலன் said..//.
பதிவர் அனைவரும் அவசியம் வருவீர்...
சந்திப்பின் சக்தியை முழுதாய் உணர்வீர்./

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////


.

Yaathoramani.blogspot.com said...

இளமதி said...//
/
ஆமாம் ஐயா நீங்கள் யாவரும் சந்தித்து சக்தியை முழுதாய் உணருங்கள்
உங்கள் உணர்வினை நாம் ஒளிப்பதிவினூடாக கண்டு மகிழ்கின்றோம்!//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////

Yaathoramani.blogspot.com said...

Ambal adiyal said...//
அனைவரினது எண்ணம் போலும் பதிவர்கள் சந்திப்பு மிகச் சிறப்பாகத் தொடர வாழ்த்துக்கள் .சிறப்பான இக் கவிதைக்கும் பாராட்டுக்கள் ஐயா //

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/////


.

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN said...//
தித்திப்பான சந்திப்பை எதிர் நோக்கிக் கொண்டிருக்கிறேன்.//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////


Yaathoramani.blogspot.com said...

Sasi Kala said...//
அழகாக சொல்லிவிட்டீர்கள் ஐயா.//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி////


Yaathoramani.blogspot.com said...

கவியாழி கண்ணதாசன் said...//
வாங்சார்எங்களைவாழ்துங்கஅய்யா//

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam said...//

எதிர்பார்ப்புகளைக் கூட்டும் பதிவு. வாழ்த்துக்கள்./

/தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

Manimaran said...
சிறப்பாக நடைபெற நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள்..///

தங்கள் உடன் வரவுக்கும் உற்சாகமூட்டும்
அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி/


Yaathoramani.blogspot.com said...

Matangi Mawley //


பதிவர் சந்திப்பில் கலந்து கொண்டு
சிறப்பித்தமைக்கு மனமார்ந்த வாழ்த்துக்கள்




Post a Comment