Saturday, April 30, 2016

எங்கள் "வேண்டுதல் வேண்டாமை "

சோறு வேண்டும் எங்களுக்கு
சொர்க்கம் வேண்டாம் - வீண்
வார்த்தைகளைச் சொல்லியெம்மை
ஏய்க்க வேண்டாம்

ஆடை வேண்டும் எங்களுக்கு
"அணிகள்" வேண்டாம்
மேடையேறி பொய் உதிர்த்து
"நடிக்க" வேண்டாம்

வீடு வேண்டும் எங்களுக்கு
"கோட்டை" வேண்டாம் - எம்மை
மன்னரெனச் சொல்லி நீங்கள்
சுருட்ட வேண்டாம்

வாழ்வு வேண்டும் எங்களுக்கு
"ஆறுதல்" வேண்டாம் - எல்லாம்
ஆண்டவனின் லீலை என்று
"அளக்க" வேண்டாம்

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!!!!!!!!!!

6 comments:

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

வேண்டுபவையும் வேண்டாதவையும் தெளிவாகச் சொல்லிவிட்டீர்கள். நன்றி ஐயா

வை.கோபாலகிருஷ்ணன் said...

"வேண்டுதல் வேண்டாமை" அருமை.

அனைவருக்கும் மே தின நல்வாழ்த்துகள்!

சோழ நாட்டில் பௌத்தம் Buddhism In Chola Country said...

அரசியல்வாதிகளுக்கு நல்ல தண்டனை கொடுப்பத போலுள்ளதே.

Unknown said...

மாற்றம் வேண்டும் ஏமாற்றம் வேண்டாம்!

KILLERGEE Devakottai said...

கவிதை நன்று மே தின வாழ்த்துகள் கவிஞரே
த.ம. 3

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

வித்தியாசமான தலைப்பில் கவிதை படைப்பு அருமை

Post a Comment