Friday, April 8, 2016

நாட்டுமேல நமக்கெல்லாம் அக்கறையே இருக்குதுண்ணா....

பொறந்தநாள  மறந்துகூட
இருந்திடலாம் மச்சான்-தேர்தல்
நடக்கும்நாள மறந்துநாம
இருக்கலாமோ மச்சான் ?-குழந்த

பொறந்தநாள மறந்துகூட
இருந்திடலாம் மச்சான்-மே
பதினாற மறந்துநாம
இருக்கலாமோ மச்சான் ?-

வருஷமெல்லாம் விழுந்துவிழுந்து
படிச்சபுள்ள மச்சான்-பரிச்சை
நாளுபாத்து தூங்கிபுட்டா
வெளங்கிடுமா மச்சான் ?- அஞ்சு

வருஷமாக எதிர்பாத்து
இருந்தநாளை மச்சான்-லேசா
வெறும்நாளா நினைசுப்புட்டா
நஞ்சிடுவோம் மச்சான்

சீர்செனத்தி நூறுவகை
ஊரறிய வச்சாலும்-தாலி
கட்டினாத்தான் கல்யாணக்
கணக்காகும் மச்சான்

நாட்டுமேல நமக்கெல்லாம்
அக்கறையே இருக்குதுண்ணா-ஓட்டுப்
போட்டாத்தான் உண்மையாகும்
சரிதானா மச்சான் ?

6 comments:

ஸ்ரீராம். said...

சரிதான்!

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மைதான்

வை.கோபாலகிருஷ்ணன் said...

நம்ப வோட்ட நம்பளே
போடணும்னா மச்சான் ....
விடியற்காலமே எழுந்து
வெரசாவேப் போயிடணும் மச்சான்.

Yarlpavanan said...

ஓட்டுப் போட்டாத்தான்
நல்ல அரசு தோன்றும் - அப்ப தான்
நல்லபடி உண்டுறங்கலாம் மச்சான்!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஜனநாயகக் கடமையை ஆற்ற தூண்டும் பதிவு அருமை.

Thulasidharan V Thillaiakathu said...

சரிதான்...

Post a Comment