Sunday, May 14, 2017

நிகழ்காலமே நிஜமெனத் தெளிந்து.....

இதை
இன்று
இப்போது
இதனால்
இப்படி
இவர்கள் மூலம்

செய்யச் சாத்தியம் இருக்கையில்
எதனாலோ செய்யத் தவறுவீர்கள் ஆயின்

அதை
என்றும்
எப்போதும்
எதனாலும்
எப்படியும்
எவர் மூலமும்

செய்யமுடியாது போகவே
சாத்தியம் அதிகம்

அதனால்

இதை
இன்றே
இப்போதே
இதன் மூலமே
இப்படியே
இவர்கள் மூலமே

உடன் செய்து முடிக்க முயல்வோம்
என்றும் எப்போதும் எச்சூழலிலும்
நிகழ்காலமே நிஜமெனத்  தெளிந்து  உயர்வோம்

16 comments:

Avargal Unmaigal said...

அனுபமிக்க ஆசானிடம் இருந்து வந்த மிக சரியான அறிவுரை

கோமதி அரசு said...

அருமை.

KILLERGEE Devakottai said...

இரசித்தேன் கவிஞரே
த.ம.

Unknown said...

நேற்று என்பது கடந்துவிட்டது, நாளை என்பது நிச்சயம் இல்லாதது,இன்று என்பதே நிச்சயமான ஒன்று என்பதே உண்மை :)

வை.கோபாலகிருஷ்ணன் said...

என்றும் எப்போதும் எச்சூழலிலும் நிகழ்காலமே நிஜமென்பதே உண்மை.

சரியாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

ஸ்ரீராம். said...

செய்யத்தக்கன செய்யாததாலும் கெடும்!

Rajeevan Ramalingam said...

நாம் என்ன 1000 ஆண்டுகளா இந்த பூமியில் வாழப் போகிறோம்? இல்லையல்லவா?

எனவே வாழும் நாளில் மகிழ்ச்சியாகவும் ஒற்றுமையாகவும் வாழ்வதே சிறப்பு.


உங்கள் வரிகள் ஆழமும் அர்த்தமும் நிறைந்தவை ரமணி சேர்

வெங்கட் நாகராஜ் said...

அருமை.

செய்ய வேண்டிய நேரத்தில் செய்து முடிப்பது தானே நல்லது.

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தம். அருமை.

சென்னை பித்தன் said...

அப்படியே!
நான் ஏழாவது!

G.M Balasubramaniam said...

ஒன்றும் நன்றே செய் அந்த நன்றும் இன்றே செய்

kowsy said...

சிறப்பு

Unknown said...

ஒன்றே இன்றே நன்றே செய்க!

Thulasidharan V Thillaiakathu said...

ஆம்! நல்லதை இந்த நொடியே செய்க!! அருமை

ராமலக்ஷ்மி said...

உண்மையை அழுத்தமாகச் சொல்லியிருக்கிறீர்கள்.

Post a Comment