Monday, October 12, 2015

சுற்றுச் சூழல் விழிப்புணர்வுப் பேரணி

மதுரையில் மிகவும் பொல்லாதபுரமாக இருந்த
வில்லாபுரத்தை எங்கள் வில்லாபுரம் புது நகர்
குடியிருப்போர் சங்கத்தின் மூலமாக
எங்கள்பகுதி காவல்துறை ஆய்வாளர்
திரு சேதுமணிமாதவன் அவர்களின்
வழிகாட்டுதலின்படி அறுபது கண்காணிப்புக்
காமிராக்களைப்  பொருத்தி
மதுரை நகரிலேயே குடியிருக்கப் பாதுகாப்பான
பகுதி என மாற்றம் செய்தோம்

அதன் தொடர்ச்சியாய் இந்தப் பகுதியில்
சுற்றுச் சூழலைப் பாதுகாக்கும் பொருட்டு
ஒரு விழிப்புணர்வுப் பேரணியை  எங்கள்
குடியிருப்போர் சங்கம்,மற்றும் இப்பகுதியில்
மிகச் சிறப்பாக இயங்கி வரும் புது நகர்
அரிமா சங்கம் மற்றும் எங்கள்
அண்டைப் பகுதியில்மிகச் சிறந்த
பெண்கள் கல்லூரியான
சேர்மத்தாய் வாசன் மகளிர் கல்லூரி
நாட்டு நலப் பணிக்குழுவின் முலமாகவும்
ஏற்பாடு செய்தோம்

இந்த நிகழ்வுக்கு முக்கிய காரணமாக இருந்த
காவல்துறை ஆய்வாளர்
திரு, சேதுமணிமாதவன் அவர்களே
இந்த மூன்று அமைப்புக்கும் ஒரு இணைப்பை
 ஏற்படுத்திக்கொடுத்ததோடு இந்தப் பேரணி
மிகச் சிறப்பாக நடைபெறஅனைத்து பாதுகாப்பு
ஏற்பாடுகளையும் செய்து கொடுத்துச்
சிறப்புச் செய்தார்கள்

எங்கள் பகுதி மாநகராட்சி  உதவிப் பொறியாளர்
திருமிகு இந்திரா அவர்கள்  துவக்க நிகழ்ச்சியில்
 கலந்து கொண்டு பிரச்சார வாசகங்கள்
அடங்கிய பிரதியை பொதுமக்களிடம்
விநியோகித்து பேரணியைத் துவக்கி வைத்தார்கள்

சேர்மத்தாய் கல்லூரி துணைப்பேராசிரியர்
நாட்டு நலப் பணிக்குழுத் தலைவர் திரு மிகு
ஜி. மீனலோசினிமற்றும் அவரது குழுவினரும்
 மிகச் சிறப்பாக இந்தப் பேரணி
நடைபெற அனைத்து பொறுப்புக்களையும்
எடுத்துக் கொண்டுஎங்களுக்கு  முழுமையாக
ஒத்துழைப்புக் கொடுத்தார்கள்

அவனியாபுரம் மாநகராட்சி  பகுதி அலுவலகத்தில்
துவங்கிய 200 மாணவிகள் மற்றும் 50 சமுக நல
ஆர்வலர்கள் கலந்து கொண்ட இந்தப் பேரணி
அவனியாபுரம் மற்றும் வில்லாபுரம் மீனாட்சி நகர்
மற்றும் வில்லாபுரம் குடியிருப்புப் பகுதியில் உள்ள
அனைத்து பொது மக்களிடமும் சுற்றுச் சூழல்
பாதுகாப்பின்அவசியத்தை விளக்கி
(சுமார் ஐந்து கிலோ மீட்டர் வரை )
துண்டுப் பிரசுரங்கள்  கொடுத்துப் பிரச்சாரம்  செய்தது

இந்தப் பேரணி மிகச் சிறப்பாக நடைபெற
 நிதிப் பொறுப்புமுழுவதையும் தானே ஏற்றுக் கொண்ட
 புது நகர் அரிமாசங்க துணைத் தலைவரும்
குடியிருப்போர் சங்கபகுதித் தலைவர்
லயன்.சக்திவேல் அவர்களுக்கும்
(முதல் புகைப்படத்தில் இடது ஓரம்
தொப்பியுடன் இருப்பவர் )

புது நகர் அரிமா சங்கத் தலைவர்
மற்றும் புது நகர் குடியிருப்போர் சங்கச்  செயலாளர்
ஏ.இப்ராஹிம் சுல்தான் சேட்

செயலாளர்.ஜி.சரவணன் பொருளாளர்.எஸ்.சீனிமுகமது
மற்றும் உறுப்பினர்களுக்கும்

புது நகர் குடியிருப்போர் சங்கத் தலைவர்
எஸ் கே.எஸ் காதர் மைதீன், பொருளாளர்
எஸ் கே பிரகாஷ் மற்றும் உறுப்பினர்கள்
அனைவருக்கும்அரிமா வட்டாரத் தலைவர்
என்கிற முறையில் எனது நன்றியையும்
வாழ்த்துக்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்

அது குறித்த புகைப் படங்கள் சில தங்கள் மேலான
பார்வைக்காக இணைத்துள்ளேன்

வாழ்த்துக்களுடன்..

எஸ்.வெங்கட சுப்ரமனியன் என்ற ரமணி
அரிமா சங்க வட்டாரத் தலைவர்






9 comments:

G.M Balasubramaniam said...

பொது மக்களுடன் அதிகாரிகளும் தன்னார்வத் தொண்டு நிறுவனங்களும் இணைந்து செயல் பட்டால் பலன் கூடும் வாழ்த்துகள்

KILLERGEE Devakottai said...

பாராட்டுக்குறியதே புகைப்படங்கள் நன்று நன்றி
தமிழ் மணம் 3

S.Venkatachalapathy said...

மிகச் சிறந்த முயற்சி. நல்வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

வாழ்த்துகள்......

தொடரட்டும் சேவைகள்!

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

...அப்படித்தான் இந்தப் பேரணிக்கும்
ஏற்பாடு செய்தோம்
நல்ல ஆலோசனைக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

KILLERGEE Devakottai //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

Venkat S //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த
நல்வாழ்த்துக்கள்

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
சிறக்கட்டும் பணி வாழ்த்துக்கள்
தீபாவளி சிறப்பு கவிதைப் போட்டி கலந்து கொள்ளுங்கள்
ரூபனின் எழுத்துப்படைப்புக்கள்: தீபாவளித் திருநாளை முன்னிட்டு உலகம் தழுவிய மா பெர...:  

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Post a Comment