Sunday, November 1, 2015

நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

நான் சீராக ஓடிக் கொண்டிருக்கிறேன்

என் முன் கடந்து செல்பவனின்
முகத்தில் வெற்றிப்  புன்னகை
இதழ்களில் ஒரு அலட்சியச்  சுழிப்பு

நான் எப்போதும் போல் ஓடிக் கொண்டிருக்கிறேன்

என்னிலிருந்து பின் தங்கத் துவங்குபவன்
முகத்தினில் கவலை ரேகைகள்
விழிகளில் தெறிக்கும் பொறாமைப் பொறி

நான் என் வேகத்தில் ஓடிக் கொண்டிருக்கிறேன்

உடன் வருபவன் அதிசமாய்க் கேட்கிறான்
" அவனது அலட்சியப் புன்னகையும்
இவனது பொறாமைப் பார்வையும்
உன்னைப் பாதிக்கவில்லையா "

"பாதிக்க வாய்ப்பே இல்லை
அவர்களின் இலக்கு நானானதால்
அவர்கள் குழப்பமடைகிறார்கள்
எனக்கு நான் மட்டுமே இலக்கு என்பதால்
எனக்கு எவ்வித குழப்பமுமில்லை "என்கிறேன்

கேட்டவன் குழப்பமடைகிறான்

சீரான வேகத்தில்
 நான் என்னைக் கடந்து கொண்டிருக்கிறேன்

16 comments:

ஸ்ரீராம். said...

அருமை. தெளிவான சிந்தனை.
தம +1

கரந்தை ஜெயக்குமார் said...

தெளிவான சிந்தனை
வெற்றியைத் தேடித்தரும்
அருமை ஐயா
தம +1

திண்டுக்கல் தனபாலன் said...

நமக்கு நாம் மட்டுமே இலக்கு... அருமை ஐயா...

தேன்மதுரத்தமிழ் கிரேஸ் said...

மிக மிக அருமை ஐயா..இந்த தெளிவுதான் அனைவருக்கும் தேவை.

joseph jeyabal said...

தெளிந்த சிந்தனை.. அருமையான வரிகள் ஐயா. மிக்க நன்றி..

Geetha said...

அருமை அடுத்தவரையே எண்ணியே அனைவரும் வீழ்கின்றனர்....இதை உணர்ந்தாலே போதும் சார்.

”தளிர் சுரேஷ்” said...

நாமே நமக்கு இலக்கு! சிறப்பான கருத்து! அருமையான கவிதை! வாழ்த்துக்கள்!

G.M Balasubramaniam said...

என்னையே நான் கடந்து இலக்கை மாற்றிக் கொண்டே இருக்கிறேனே

S.P.SENTHIL KUMAR said...

அருமையான இறுதி வரிகள்!
த ம 6

அன்பே சிவம் said...

வேகம் முக்கியமென்று
கருதுவது விடலைகளின் நினைப்பு...

விவேகமே முதன்மையானது என
விளக்குவதே சிறப்பு..

தங்கள் அனுபவத்தில் பார்த்தறியாததா?
இந்த பிள்ளைகளின் பரிகசிப்பு...

அவர்கள் அறியாதவர்கள்
அவர்கள் தவறை அறியும் வரை...!

ananthako said...

ஒவ்வொருவரும் தன்னைத்தானே அறிந்துகொள்ளவேண்டும்.

நான் யார் /?என்ற வினா ரமணனை ரமண ரிஷி ஆக் கியது.
நல்ல கருத்து.வாழ்க,

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

நல்ல கருத்தை பகிர்ந்துள்ளீர்கள்
எது நடக்கிறதோ அது நன்றாக நடக்கும்... கீதையில் சொல்வது போல.த.ம 7

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

அருமை அருமை! நல்ல நீரோடையைப் போன்று தெளிவான நீரோட்டம்...அதன் ஆழம் கூட தெரிகின்றதே!

சென்னை பித்தன் said...

பெரிய கருத்தைச் சுருக்கமாகச் சொல்லி விட்டீர்கள்.ஸ்வாமி பித்தானந்தாவிடம் சொன்னேன்;மகிழ்ச்சியடைந்தார்

அருணா செல்வம் said...

உங்களிடமிருந்து இதை எத்தனை முறை படித்தாலும் நிறைவாகத் தான் இருக்கிறது இரமணி ஐயா.

வெங்கட் நாகராஜ் said...

எனக்கு நானே இலக்கு......

நல்ல சிந்தனை.

Post a Comment