Monday, November 9, 2015

வெறும் நாளும் திரு நாளும்...

தானும் மகிழ்ந்திராது
தன்னைச் சார்ந்தவர்களையும்
தன்னைச் சூழ்ந்தவர்களையும்
மகிழ்விக்க முயலாது
கடக்கிற நாளது
திரு நாள் ஆயினும்
அது வெறும் நாளே.

தானும் மகிழ்ந்து
தன்னைச் சார்ந்தவர்களையும்
தன்னைச் சூழ்ந்தவர்களையும்
மகிழ்விக்கச் செய்யும்
எந்த நாளதும்
வெறும் நாளாயினும்
அதுதான் திரு நாளே.

நம் வாழ்வில்
இனி வரும் நாளெல்லாம்
திரு நாளாகவே இருக்க
அருளவேணுமாய்
வாலறிவனை வேண்டி
என் வாழ்த்துக்களை
வழங்கி  மகிழ்கிறேன்

வாழ்த்துக்களுடன்....

16 comments:

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே.

தாங்கள் எழுதிய ஒவ்வொரு வரிகளும் உண்மையானவை. வெறும் நாட்களுக்கும், திரு நாட்களுக்கும் உள்ள வித்தியாசத்தை உணர்த்தியக் கவிதை அருமை..

என் தளம் வந்து கருத்திட்டு வாழ்த்துரைத்த தங்களுக்கு என் மனம் நிறைந்த நன்றிகள்.
தங்களுக்கும், தங்கள் குடும்பத்தினருக்கும் என் இனிய தீபாவளித் திருநாள் நல் வாழ்த்துக்கள்.

நன்றியுடன்,
கமலா ஹரிஹரன்.

அருணா செல்வம் said...

உண்மை.
தீபாவளி வாழ்த்துக்கள் இரமணி ஐயா.

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தீபாவளித் திருநாள் நல்வாழ்த்துகள்...

கரந்தை ஜெயக்குமார் said...

இனிய தீபஒளித் திரு நாள் நல் வாழ்த்துக்கள்
தம=1

அன்பே சிவம் said...

தங்களுக்கும் குடும்பத்தினருக்கும் இனிய
தீபாவளி வாழ்த்துகள்.

Avargal Unmaigal said...

உங்களுக்கும் உங்கள் குடும்பத்தினர் மற்றும்
உங்களது நண்பர்கள் அனைவருக்கும் எனது இனிய தீபாவளி நல்வாழ்த்துக்கள்
"தீப ஒளியினிலே தீயன மறைந்து நல்லன பிரகாசிக்கட்டும்"

இராஜராஜேஸ்வரி said...


நிறைவான இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துகள்..

மனோ சாமிநாதன் said...

இனிய தீபாவளித்திருநாள் வாழ்த்துக்கள்!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

மனம் நிறைந்த தீபாவளி நல்வாழ்த்துகள்.

KILLERGEE Devakottai said...

நல்ல கருத்து கவிஞரே...
தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும் இனிய தீபாவளித் திருநாள் வாழ்த்துகள்.
தமிழ் மணம் 6

S.P.SENTHIL KUMAR said...

அத்தனையும் உண்மை.
இனிய தீபாவளி வாழ்த்துகள்!

தி.தமிழ் இளங்கோ said...

நன்றி! தங்களுக்கும், தங்கள் குடும்பத்தாருக்கும் எனது உளங்கனிந்த தீபாவளி நல் வாழ்த்துக்கள்.

வெங்கட் நாகராஜ் said...

இனி வரும் எல்லா நாட்களும் திருநாட்களாகட்டும்.... நல்ல சிந்தனை.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய தீபாவளி திருநாள் நல்வாழ்த்துகள்.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா
உண்மையான வரிகள் வாழ்த்துக்கள் ஐயா
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

ananthako said...

திரு ஸ்ரீ நிவாஸ் இருக்கும் ஒருவர்

கொடுத்து மகிழும் நாள்
அழகிய திருநாள்
வாழ்த்துக்கள்

ananthako said...

திரு ஸ்ரீ நிவாஸ் இருக்கும் ஒருவர்

கொடுத்து மகிழும் நாள்
அழகிய திருநாள்
வாழ்த்துக்கள்

Post a Comment