Friday, December 23, 2011

நெடும் பயணம்

நாடு விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் பாஸ் போர்ட் தேவையில்லை

ஊரை விட்டுத்தான் போகிறோம்
ஆயினும் ஆடை அணிகலங்களோ
பெட்டி படுக்கைகளோ தேவையில்லை

போகாத ஊர்தான்
ஆயினும் ஊர் பற்றிய தகவல்களோ
வரை படங்களோ தேவையில்லை

பார்க்காத ஊர்தான்
ஆயினும் யாரும் உடன் வந்து
வழிகாட்டத் தேவையில்லை

உடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்
என்வே சுமை கூலிப் பிரச்சனை
நிச்சயமாய் இல்லை

சாப்பாட்டுப் பிரச்சனையில்லை
பஸ் கட்டணப் பிரச்சனையில்லை
போக்குவரத்துப் பிரச்சனையில்லை
காசுப் பிரச்ச்னையில்லை
சக பயணிப் பிரச்சனையில்லை

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை

79 comments:

தமிழ் உதயம் said...

உங்களால் மட்டும் இவ்வளவு சிறப்பாக எழுத முடியும்.

Avargal Unmaigal said...

மிக அருமையான பதிவு
///புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை///

நீங்கள் சொன்ன பயணத்தை மேற்கொள்ள நான் இந்த நொடியிலும் ரெடியாக இருக்கிறேன்

Avargal Unmaigal said...

ரமணி சார் ஏனென்று தெரியவில்லை இதை படித்ததும் என் கண்ணில் இருந்து நிஜமாக கண்ணிர் வந்து கொண்டிருக்கிறது.

Anonymous said...

இதைத்தானே கடைசியில் அனைவரும் விரும்புகிறோம் .
கிட்டினால் பாக்கியமே ! ஏன் சார் சோக கீதம் ?
ஆனாலும் முஹாரி இனிக்கிறது.

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தமிழ் உதயம் //

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரவாணி //

நவரஸங்களும் கலந்திருந்தால் தானே சுவாரஸ்யம் ?
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

சசிகுமார் said...

சார் மிக அருமையான வரிகள் மற்றும் உட்கருத்து.. வாழ்த்துக்கள் சார்.

MANO நாஞ்சில் மனோ said...

ம்ஹும் வாழ்க்கை இம்புட்டுதான், மரித்தபின் யாருக்கு யாரோ, உயிரோடு இருக்கும் மனிதா நீ சிந்திக்க வேண்டும்....!!!

MANO நாஞ்சில் மனோ said...

அருமையான படைப்பு குரு, மனதை கனக்க செய்துவிட்டது...!!!

G.M Balasubramaniam said...

//புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை//------- இருந்தால் மட்டும் தெரியவாபோகிறது, இல்லை தெரிவிக்கத்தான் முடியுமா. ?புறப்படும் கணமே அறியாமல் போனால் மிக நன்று.

Yaathoramani.blogspot.com said...

சசிகுமார் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஸ்ரீராம். said...

பயண விவரம் ஜோர். தத்துவ விசாரம்.

மகேந்திரன் said...

எப்போது என் சவத்திற்கு நான்
சவப்பெட்டி செய்ய என்னால் அளவெடுக்கும்
அளவுக்கு பக்குவப்படுகிறேனோ
அப்போதுதான் ...
என் வாழ்விற்கு ஓர் பொருள் பிறக்கும்.

அருமை அருமை.

ராஜி said...

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை
>>
இறுதி பயணத்தில் இவ்வளவு நன்மைகளா!?

RAMA RAVI (RAMVI) said...

//புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை .//

ஆம் ரமணி சார். மிக அற்புதமாக எழுதியிருக்கீங்க.

Yaathoramani.blogspot.com said...

நண்டு @நொரண்டு -ஈரோடு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராஜி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

துரைடேனியல் said...

Ungal Kavithaiyai padithathum enakku Pattinathaar thaan Ninaivukku varugiraar. Intha Marana Sinthanai Nam ovvoridamum irunthaal oru paavamum seyya maattom. Manam kavarntha pathivu Sir.

TM 8.

Yaathoramani.blogspot.com said...

துரைடேனியல் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

இதென்ன இப்போது என்ன அவசரம் வந்தது இதற்கு! என்று தான் வாசித்ததும் தோன்றியது. இப்படித் தோன்றியது பிழை. எப்பவும் வரலாம் என்றும் எண்ணினேன். அப்போ எதற்காகப் பிறந்தோம்! சிந்தனைக்கு வாழ்த்துகள் சகோதரா.
வேதா. இலங்காதிலகம்.

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்!

//உடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்//

அருமை! அருமை! இருந்தாலும் நீங்கள் ஆல் போல் தழைத்து அருகு போல் வேரோடி வாழ வேண்டும். வாழ்த்துக்கள்!

Admin said...

சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை..

மறுக்க முடியாத ஒன்று..


வாக்கு (TM-10)
அன்போடு அழைக்கிறேன்..

மௌனம் விளக்கிச் சொல்லும்

kowsy said...

இந்தப் பயணம் பற்றி இப்போது என்ன கவிதை. என்றோ நடப்பதை இன்று சிந்தித்தீர்களா? சக பயணி பிரச்சினை இல்லை என்பதை யாருக்குத்தெரியும் இருக்கும் போது தொந்தரவு தருபவர்கள் இந்தப் பயணத்தின் போதும் வரமாட்டார்கள் என்று என்ன நிச்சயம். கவிஞனுக்குத்தானே எதையும் கற்பனை பண்ண முடியும் .//புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை// இதைத் தானே எல்லோரும் விரும்புகின்றார்கள் . அதுவும் விதி என்றே சொல்லவேண்டும். அண்மையில் என் உறவு ஒன்றின் நீள் பயணம் என்னை பெரிதும் பாதித்தது. அப்போதும் உங்கள் இந்த வரிகளைத்தான் நினைத்துப் பார்த்தேன். அழகு வடிவம் அடங்கிப் போன நினைவு இன்றும் என் நினைவில் . உங்கள் பதிவுக்கு வாழ்த்துகள்

சுதா SJ said...

நல்லா இருக்கு பாஸ்.... கவிதைக்கடவுளின் ஆசீர்வாதம் பெற்றவர் நீங்கள் :)

கவி அழகன் said...

இத தான் செத்த பயணம் எண்டு சொல்லுவாங்களா

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கவி அழகன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துஷ்யந்தன் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மதுமதி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

விச்சு said...

இறுதிப்பயணத்தைபற்றி நாசுக்காகவும் அழகாகவும் கூறியுள்ளீர்கள்.

Yaathoramani.blogspot.com said...

விச்சு //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

சசிகலா said...

சாப்பாட்டுப் பிரச்சனையில்லை
பஸ் கட்டணப் பிரச்சனையில்லை
போக்குவரத்துப் பிரச்சனையில்லை
காசுப் பிரச்ச்னையில்லை
சக பயணிப் பிரச்சனையில்லை
அழகாக கூறியுள்ளீர்கள்.

சக்தி கல்வி மையம் said...

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை // உண்மை..

மிகச் சிறப்பான படைப்பு..

இராஜராஜேஸ்வரி said...

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை


பெருமையுடைய புகழுடம்பு பயணம் இனிமைதான்!

Yaathoramani.blogspot.com said...

sasikala //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேடந்தாங்கல் - கருன் *! //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

வெங்கட் நாகராஜ் said...

//புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை //

நல்ல வரிகள்... இந்த சிறந்த பயணம் போவது மட்டும் நம் கையில் இல்லை! நேரம் வரும்போது தானாகவே பயணம் அமைந்துவிடுகிறதே....

நல்ல கவிதை.....

பால கணேஷ் said...

நான் இந்தத் தடவை ரொம்ப லேட் போலருக்கு... நிதர்சனமான வரிகள். வலியின்றி இப்படி நிகழ்வதைத் தான் ‘கல்யாண சாவு’ என்பார்கள் என்று கேள்விப் பட்டதுண்டு. சோக ரசமாக இருந்தாலும் மனதுக்குப் பிடித்த வரிகள். உங்களுக்கு அட்வான்ஸ் புத்தாண்டு வாழ்த்துக்கள்.

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ADHI VENKAT said...

//புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை //
அருமையான உண்மையான வரிகள் சார். பயணத்திற்கான பயமும் இல்லாதிருந்தால்...... சுகமானதே..
த.ம - 16

Yaathoramani.blogspot.com said...

கோவை2தில்லி //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கதம்ப உணர்வுகள் said...

இறைவன் வாடகையாய் நம் ஆத்மாவுக்கு தந்த உடலை நாம் சுமக்கிறோம்....

இந்த உடல் பலவித உபாதைகளை உணர்கிறது....
சந்தோஷங்களில் உடல் சுமையை மறக்கிறது.....
துக்கம் மனதை அடைக்கும்போது உடலை வெறுக்கிறது....இறந்துவிட உயிரை விட்டுவிட துடிக்கிறது....

வாழ்வதில் இருக்கும் அசௌகர்யம் இறப்பதில் இல்லை என்று மனதில் சம்மட்டி அடிகளாய் அடித்து புரியவைத்த மிக அற்புதமான வரிகள் ரமணி சார்...

வாழும்போது மனிதன் சுயநலத்துடன் வாழ்கிறானா? அல்லது தன் உடலை பேணி காப்பது போல் தன் மனதை தூய்மையாய் வைத்திருக்கிறானா? நல்ல சிந்தனைகளால் உடலுக்கு ஆசுவாசம் தருகிறானா?

சிந்தனைகளும் தூய்மை...
மற்றவருக்கு நன்மை செய்வதில் இருக்கும் சந்தோஷம்...
அன்பை எல்லோருக்கும் பகிர்வதில் இருக்கும் மனநிறைவு...

இப்படியெல்லாம் இருந்துவிட்டு உடலை துறக்கும் சமயம் வரும்போது...

நீங்கள் சொன்ன அத்தனையும் சாத்தியமே...
உடலை ஒட்டி உறவாடி இத்தனை காலம் இருந்த உயிர் பிரிய இஷ்டமில்லாமல் பிரிவதால் தான் :( அத்தனை துன்பப்பட்டு பிரிகிறது.... அது தான் மரண அவஸ்தை என்று நீங்கள் சொன்னது மனதை ஆணித்தரமாய் அழுத்தவைக்கிறது.....

உண்மையே ரமணி சார்...

ஜனனம் சந்தோஷம் எல்லோருக்கும்.... ஜனித்த உயிர் அறிவதில்லை அந்த சந்தோஷம்....

மரணம் துக்கம் எல்லோருக்கும்.... மரணித்த உயிர் அறிவதில்லை அந்த துக்கத்தை மீளாத்துயரில் ஆழ்த்திவிட்டு அமைதியாய் கிடக்கிறது என் பணி முடிந்தது என....

என்னவோ செய்கிறதே ரமணி சார் மனதை :(
கவிதை வரிகள் உங்களுடையதை எப்போது படித்தாலும் மனதில் என்னவோ ஒரு தாக்கம் நான் உணர்வதுண்டு... இப்போதும் அப்படியே...

அன்புடன் என்றும் எங்கும் என்னை அழைத்து நலம் விசாரிக்கும் உங்கள் உயர்ந்த பண்பை நான் என்றும் மறக்கவே மாட்டேன் ரமணி சார்...

அருமையான மனிதன் உணரவேண்டிய வரிகளை எளிய நடையில் கவிதையாய் தந்தமைக்கு அன்பு நன்றிகள் ரமணி சார்..

மழை said...

அருமையான பதிவு:) தொடர்ந்து எழ்ழுதுங்கள்..

ஹேமா said...

இறுதிப்பயணத்தை இப்படித் தத்துவமாய்ச் சிந்தித்திருக்கிறீர்களே !

Yaathoramani.blogspot.com said...

மஞ்சுபாஷிணி

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மழை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

படிக்கத் தொடங்கும்போது புலம் பெயரும் பறவைகள் பற்றியது என்றே நினைத்தேன். போகப் போகத்தான் அது உடல் பெயரும் உயிர்ப்பறவை பற்றியது என்னும் உண்மை புரிந்தது. எங்கள் தாத்தா அடிக்கடி சொல்வார்கள். படுக்கக்கூடாது, பொட்டுனு போயிடணும் என்று. அப்படித்தான் ஒருநாள் பட்டென்று பறந்துவிட்டது அந்த முதுப்பறவை. எத்தனைப பேருக்கு அந்தக் கொடுப்பினை கிடைக்கும்.

பயணிக்கு இங்கே பாரமேதுமில்லை. வழியனுப்புவோருக்கே வாழ்நாளெல்லாம் துக்கம். அருமையான படைப்பு ரமணி சார்.

Yaathoramani.blogspot.com said...

கீதா //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Matangi Mawley said...

"என்ன ஒரு சுகமான பயணம்! "-- என்று நினைக்க வைத்து விட்டது, இந்த கவிதை!
Brilliantly thought and worded!

Yaathoramani.blogspot.com said...

Matangi Mawley //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

தீபிகா(Theepika) said...

சுகமான மரணத்தை வரவேற்கிற அழகில்
வாழ்ந்து பார்த்த வாழ்க்கையின் வலி தெரிகிறது.
ஆகாலும்...
வாழ்க்கை என்னவோ சுகமான சுமைதானே..

இளமையில் துள்ளிக் குதித்துவிட்டு
உடல் பற்றிய அக்கறையின்றி வாழ்ந்துவிட்டு
முதுமையில் தானே சுதாகரித்துக் கொள்கிறோம்.
நடைப்பயிற்சி ஆரம்பிக்கிறோம்.
ஆண்மீகத்தில் ஆர்வம் காட்ட
தொடங்குகின்றோம்.

இது இன்னும் வாழ்வதற்கான
மனவிருப்பின் வெளிப்பாடா அல்லது
சுகமான பயணத்துக்கான தயார்ப்படுத்தலா?

எல்லா போராட்டங்களையும்
எதிர் கொண்டபடி.
நிச்சயமாய்..
வாழத்தான் விரும்புகிறது மனசு


இத்தனை வலிகளை இதயத்தில்
தாங்கிய பிறகும் இன்னும்
வாழவே விருமபுகிறோம்
நானும் என் தமிழீழ மக்களும்.

தங்கள்
இயல்பான எளிமையான எழுத்துநடை
மிகவும் பிடித்திருக்கிறது.

தீபிகா
http://theepikatamil.blogspot.com/

ம.தி.சுதா said...

ஃஃஃஃஉடலையே சுமையென விட்டுத்தான் போகிறோம்
என்வே சுமை கூலிப் பிரச்சனை
நிச்சயமாய் இல்லைஃஃஃஃ

எம் பெயரை சுமக்கக் காத்திருக்கும் இப்புவிக்கு எக் கூலி கொடுப்போமோ...

அன்புச் சகோதரன்...
ம.தி.சுதா
எனக்கு ஏன் போர் பிடிக்காமல் போனது - அனுபவ விபரிப்பு

குறையொன்றுமில்லை. said...

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை

மிகவும் உண்மையான வரிகள்.

Yaathoramani.blogspot.com said...

theepika //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

♔ம.தி.சுதா♔ //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

நிலாமகள் said...

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை //

ப‌ய‌ண‌ம் உறுதி. முன்னேற்பாடுக‌ளாய் ந‌ம‌க்கான‌ க‌ட‌ப்பாடுக‌ள்! காத்துக் கிட‌க்காம‌ல் இய‌ங்கிக் கொண்டிருப்போம். நேர‌ம் வ‌ரும்போது வ‌ர‌ட்டும்.

Yaathoramani.blogspot.com said...

நிலாமகள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

ஔவை said...

நிதர்சனம் சொல்லும் கவிதை.

புறப்படுகிற கணத்தில் மட்டும்
வலியோ உணர்வோ மட்டும் இல்லாது போயின்
பெரும் பயணம்போல் ஒரு சிறந்த பயணம்
சத்தியமாய் உலகினில் இல்லை

அப்படி வலி இருந்தால் தான் என்ன? நம் கையில் என்ன உண்டு?

Yaathoramani.blogspot.com said...

ஔவை //

போகிற போதாவது அவஸ்தையில்லாமல் போகவேண்டும் என்பதுதான்
அவதிப்படுபவர்கள் அனைவரும் வேண்டிக் கொள்வது
அதைத்தான் சொல்ல முயன்றிருக்கிறேன்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Marc said...

தடம் தெரியாமல் பறக்கும் பறவைகளின் பயணம் தங்கள் கவிதை. அருமை வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

dhanasekaran . //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

எப்படித் தெரியும்? :)

எதிர்பார்ப்புகள் அற்ற பயணத்தில் ஒரு ஈர்ப்பும் அச்சமும் இருக்கத்தான் செய்கிறது. முதல் கலவியின் அச்சத்தை மரண அச்சத்துக்கு ஒப்பிட்ட ஒரு பிரெஞ்சு கவிதை நினைவுக்கு வருகிறது.

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
மற்றுமொரு கவிதைக்கு கரு கொடுத்துப் போகும்
அழகான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

radhakrishnan said...

''பார்க்காத ஊர்தான்,யாரும் உடன் வந்து வழிகாட்டத் தேவையில்லை''.
அருமையான கருத்து. புதிய ஊருக்குப் போவதறகு
மகிழ்ச்சியான எதிர் பார்ப்பைக் கொடுக்கிறது. கவிதை
அவ்வளவாகப் பிடிக்காத,புரியாத எனக்கும் கவிதையில்
ஆர்வம் ஊட்டிய இனிய கவிதை. நன்றி சார்

Yaathoramani.blogspot.com said...

radhakrishnan //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
விரிவான அழகான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

Anonymous said...

sir, I am very impressed. r.chockalingam

Unknown said...

அய்யா, பெறும் பயணம் சிறப்பு பயணமாக அமைய ,வாழக்கை பயணத்தில் எண்ணம் தெளிந்த நீரோடையாக வேண்டும்

Post a Comment