Tuesday, May 29, 2012

யானைப்பசியும் பூனைப்பசியும்

என் நண்பன் தன் மகனை
குச்சியால் விளாசிக்கொண்டிருந்தான்
தடுத்து நிறுத்திக் காரணம் கேட்டேன்

"எத்தனைமுறை சொல்லியபோதும்
கேட்காது தொடர்ந்து
பக்கத்து பையனிடம்
பேனா பென்சில்
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்

கூடியிருந்த பக்தர்களை நோக்கி
கைகளை மிக உயர்த்தி
"கதவுகளைத் திறவுங்கள்
காற்று வரட்டும் "என்றார்
காவியில் இருந்த இளைய துறவி

தனித்து ஆசிரமத்திருக்கையில்
கதவருகில் இருந்த
ஆத்ம சீடனை நோக்கி
"கதவை மூடிப் போ
அவள் மட்டும் இருக்கட்டும்"ஏன்றார்
ஜாலியில் இருந்த அதே துறவி

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

75 comments:

பால கணேஷ் said...

நகைச்சுவைகள் என்று சிரிக்கத் தோன்றினாலும் யதார்த்தங்களை எண்ணி வருந்தவும் வைக்கிறது. உண்மையில் பசி என்பது ஒன்றுதான். சரியாகச் ‌சொன்னீர்கள். மீள் பதிவு என்றாலும் காரம் குறையாமல்...! அருமை! (த.ம.2)

Seeni said...

haa haa!
sariyaa sonneemga!

முனைவர் இரா.குணசீலன் said...

உண்மைதான் ஐயா..

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

ஐயா!உங்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோன்றுகிறதோ? அருமை! சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.
த.ம. 4

ஆத்மா said...

ஐயா...நல்ல பதிவு..சிந்திக்க தூண்டுவது மட்டுமல்ல ஒரு சில இடங்களில் நடப்பவையும் கூட...தொடருங்கள்..TM5

மகேந்திரன் said...

கவிதையைப் படித்து சில கணங்கள் சிரித்துக்கொண்டே இருந்தேன்.
சிரித்து முடிந்ததும் சிந்தனை சில்லிட்டுப் போயிற்று நண்பரே...

கவிதையில் சிரிப்பும் சிந்தனையும் கலந்து கொடுக்கும்
தங்களுக்கு
"கவியுலக கலைவாணர்"
என்ற பட்டம் கொடுக்கலாம்...

தன்னை ஒழுக்கமாக வைத்திருக்காத ஒருவன்
மற்றவரிடம் ஒழுக்கத்தை எதிர்பார்க்கிறேன்...

சின்னப்பயல் said...

அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல்

மனோ சாமிநாதன் said...

தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாயம் என்பதையும் மனிதர்களின் இரு முகங்களைப்பற்றியும் மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!!

Unknown said...

போலிகளுக்குக் கொடுக்கப் பட்ட சவுக்கடி!
அருமை இரமணி!

சா இராமாநுசம்

Unknown said...

த ம ஓ 7

சா இராமாநுசம்

துளசி கோபால் said...

நம்மாளுங்க ரெண்டும் தலைப்பில் இருக்கேன்னு ஓடோடி வந்தேன்!

ஏமாற்றலை நீங்க.:)

வாசித்தால் அத்தனையும் அருமை!
தமிழர் பண்பாடு, அதிலும் அருமை

வை.கோபாலகிருஷ்ணன் said...

/பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்/

எங்கள் பசியறிந்து, ஜீரணிக்கும் திறன் அறிந்து, அளவாகக் கொடுத்துள்ள அருமையான படையல். பாராட்டுக்கள்.

குறையொன்றுமில்லை. said...

பசி எனச் சொன்னால்
யானைப்பசியும்
பூனைப்பசியும் ஒன்றுதான்
ஆனால்
அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் குறைச்சல்

ரொம்ப சரியான வார்த்தைகள்.

MANO நாஞ்சில் மனோ said...

தமிழ் தலைவனுக்கு மூன்று பொண்டாட்டி ஹா ஹா ஹா ஹா குரு சரியான உள்குத்து....!!!

MARI The Great said...

தந்தையை பார்த்தே அனைத்தையும் கற்றுக்கொள்கிறது குழந்தை என்கின்ற கருத்தை ஆழமாய் பதித்து விட்டு சென்றது முதல் கவிதை ..!

ஸாதிகா said...

சிரிக்க சிந்திக்க வைத்த அருமையான பகிர்வு!

சத்ரியன் said...

//நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்//

ரிஷிமூலம்!

செய்தாலி said...

படிச்சபோது
சிரிப்புதான் வந்துச்சு சார்
அதே சமயம் சிந்திக்கவும் வைத்தது

அருமை சார்

சென்னை பித்தன் said...

ஊருக்கு உபதேசம் செய்யும் நபர்களை ஒரு குத்து குத்தியிருக்கீங்க!
த.ம.10

தி.தமிழ் இளங்கோ said...

நாட்டு நடப்பே இப்போது “ ஊருக்குத்தான்டி உபதேசம்! உனக்கு இல்லை என் கண்ணே! “ என்றுதான் இருக்கிறது. இதனை நகைச் சுவையோடு பதிவில் எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.

அருணா செல்வம் said...

சின்ன பிள்ளைக்கு யாருக்கும் தெரியாமல் திருடத் தெரியாது இல்லையா? பாவம் உங்களின் நண்பரின் மகன்!!

அருமையான பாகிர்வு.
தத்துவம் சூப்பர்ங்க ரமணி ஐயா.

Avargal Unmaigal said...

நாட்டு நடப்பை மிக அழகாக பிட்டு பிட்டு கவிதை முறையில் நீங்கள் சொன்ன விதம் மிக அருமை

Anonymous said...

ஹா ஹா ஹா ... சிரிப்பு + சிந்திப்பு = மிக அருமை ரமணி சார்...

ஹேமா said...

மிகவும் அருமையாக மனிதர்களின் இரு முகங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் !

அம்பாளடியாள் said...

தமிழர்களின்
பண்பாடு குறித்து
கலாச்சார பெருமை குறித்து
கோடை மழையென
மேடையில்
கொட்டித் தீர்த்தார்
மக்கள் தலைவர்

கேட்டுக்கொண்டிருந்த
மக்கள் மட்டுமல்ல
முன் வரிசையில் அமர்ந்திருந்த
தலைவரின்
மூன்று மனைவியர் மட்டுமின்றி
அவரது வாரீசுகளும்
வாய்பிளந்து கேட்டுக்கொண்டிருந்தனர்

வணக்கம் ஐயா நாட்டு நடப்பை
மிகத் தெளிவாகவும் சிந்திக்கும் வகையிலும்
திறம்படச் சொல்லியுள்ளீர்கள் அருமை!..
வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு.

வேலணை-வலசு said...

//
திருடிக்கொண்டு வருகிறான்
நான் அவனுக்குத்
தேவைப்பட்டதையெல்லாம்
ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்
இவனுக்கு எதுக்கு இந்த
திருட்டு புத்தி " என்றான்
//

அப்பன் புத்தி பையனுக்கு

Unknown said...

கதவைதிற காற்று வரட்டும்....சென்னவரு அதை பின்பற்றாம கதவை மூடியதால்தான் மானம் போனது!
பசி எல்லாருக்கும் பொதுதான்.....!ஆனால் உண்ணாவிரதம் இருப்பவனுக்கு வரக்கூடாதல்லவா
நல்ல நையாண்டி கவிதை!

கீதமஞ்சரி said...

நையாண்டிபோல் நடைமுறையை எடுத்துரைக்கும் வீரிய வரிகள். தலைப்பும் எடுத்துக்கொண்ட கருவும் வியப்பிலாழ்த்தின. மீண்டும் மீண்டும் மக்களை சுயபரிசோதனை செய்யத் தூண்டும் வகையிலான பதிவுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் மீள்பதிவிடலாம். பகிர்வுக்கு நன்றி ரமணி சார்.

ஞா கலையரசி said...

நல்ல கருத்துக்களை நகைச்சுவை கலந்து கொடுத்த விதம் அருமை! பாராட்டுக்கள்!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கருத்துகளை தன்னகத்தில் கொண்ட கவிதை.... மீள் பதிவு என்றாலும் இப்போதும் ரசிக்க முடிகிறது.

மோகன்ஜி said...

சுகமான கவிதை. முன்னமே படித்திருந்த நினைவு வந்தது.

ஸ்ரீராம். said...

இப்புறமும் அப்புறமும்!

அன்புடன் மலிக்கா said...

அகம் புறம் இரண்டும்
அலசிய அலசல் அருமை.

Anonymous said...

Aaha!...''..ஆபீஸில் இருந்து கொண்டு வந்தும்....''
நீங்கள் எழுதிய விதம் எனக்கும் சிரிப்பு வந்தது.
உலகம் போற போக்குத் தானே தங்கமே ஜில்லாலே..
நல்லாகச் சிந்திக்கலாம் ஆனால் சனம் திருந்த வேணுமே!...
பாராட்டுகள்.
வேதா. இலஙங்காதிலகம்.

G.M Balasubramaniam said...

முன்பே படித்திருந்தாலும் , இன்னொரு முறை படிக்கும்போதும் சுவை குன்றவில்லை.

Yaathoramani.blogspot.com said...

பா.கணேஷ் //

. உண்மையில் பசி என்பது ஒன்றுதான். சரியாகச் ‌சொன்னீர்கள். மீள் பதிவு என்றாலும் காரம் குறையாமல்..//

முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //

haa haa!
sariyaa sonneemga!//

முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

முனைவர்.இரா.குணசீலன் //
..
உண்மைதான் ஐயா..//

முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //
..
ஐயா!உங்களுக்கு எப்படித்தான் இதெல்லாம் தோன்றுகிறதோ? அருமை! சிரிக்கவும் சிந்திக்கவும் வைத்த பதிவு.//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிட்டுக்குருவி //
.
ஐயா...நல்ல பதிவு..சிந்திக்க தூண்டுவது மட்டுமல்ல ஒரு சில இடங்களில் நடப்பவையும் கூட...தொடருங்கள்//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

கவிதையில் சிரிப்பும் சிந்தனையும் கலந்து கொடுக்கும்
தங்களுக்கு
"கவியுலக கலைவாணர்"
என்ற பட்டம் கொடுக்கலாம்...//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சின்னப்பயல் //

அளவும் ஐயிட்டமும் மட்டும்தான்
கொஞ்சம் கூடுதல் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனோ சாமிநாதன் //

தனக்கொரு நியாயம், பிறருக்கொரு நியாயம் என்பதையும் மனிதர்களின் இரு முகங்களைப்பற்றியும் மிக அழகாய்ச் சொல்லியிருக்கிறீர்கள்!!//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

புலவர் சா இராமாநுசம் //
.
போலிகளுக்குக் கொடுக்கப் பட்ட சவுக்கடி!
அருமை இரமணி!//


தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

துளசி கோபால் //


வாசித்தால் அத்தனையும் அருமை!
தமிழர் பண்பாடு, அதிலும் அருமை //


தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

அப்பாதுரை said...

எதிர்பாராத ஆழம். நன்று.

Yaathoramani.blogspot.com said...

வை.கோபாலகிருஷ்ணன் //

எங்கள் பசியறிந்து, ஜீரணிக்கும் திறன் அறிந்து, அளவாகக் கொடுத்துள்ள அருமையான படையல். பாராட்டுக்கள்.//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

ரொம்ப சரியான வார்த்தைகள்.//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

MANO நாஞ்சில் மனோ //

ஹா ஹா ஹா குரு சரியான உள்குத்து....//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வரலாற்று சுவடுகள் //

தந்தையை பார்த்தே அனைத்தையும் கற்றுக்கொள்கிறது குழந்தை என்கின்ற கருத்தை ஆழமாய் பதித்து விட்டு சென்றது முதல் கவிதை //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

sir, I am very impressed by your writtings. It is induced me to learn more and also to write. your all writings are like sugar cane. thanking u r.chockalingam

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா ..//
.
சிரிக்க சிந்திக்க வைத்த அருமையான பகிர்வு!//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //

ரிஷிமூலம்!//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

படிச்சபோது சிரிப்புதான் வந்துச்சு சார்
அதே சமயம் சிந்திக்கவும் வைத்தது
அருமை சார் //

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //

ஊருக்கு உபதேசம் செய்யும் நபர்களை ஒரு குத்து குத்தியிருக்கீங்க!//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //
.
நாட்டு நடப்பே இப்போது “ ஊருக்குத்தான்டி உபதேசம்! உனக்கு இல்லை என் கண்ணே! “ என்றுதான் இருக்கிறது. இதனை நகைச் சுவையோடு பதிவில் எடுத்துச் சொல்லி விட்டீர்கள்.//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //

அருமையான பாகிர்வு.
தத்துவம் சூப்பர்ங்க ரமணி ஐயா.//


தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

நாட்டு நடப்பை மிக அழகாக பிட்டு பிட்டு கவிதை முறையில் நீங்கள் சொன்ன விதம் மிக அருமை//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரெவெரி //
.
ஹா ஹா ஹா ... சிரிப்பு + சிந்திப்பு = மிக அருமை ரமணி சார்...//

தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா //

மிகவும் அருமையாக மனிதர்களின் இரு முகங்களைச் சொல்லியிருக்கிறீர்கள் //

!தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அம்பாளடியாள் //

வணக்கம் ஐயா நாட்டு நடப்பை
மிகத் தெளிவாகவும் சிந்திக்கும் வகையிலும்
திறம்படச் சொல்லியுள்ளீர்கள் அருமை!..
வாழ்த்துக்கள் மிக்க நன்றி பகிர்வுக்கு.//

!தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேலணை-வலசு /

அப்பன் புத்தி பையனுக்கு//

!தங்கள்வரவுக்கும் //
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வீடு சுரேஸ்குமார் //

நல்ல நையாண்டி கவிதை //!

!தங்கள்வரவுக்கும் வாழ்த்துக்கும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி

மீண்டும் மீண்டும் மக்களை சுயபரிசோதனை செய்யத் தூண்டும் வகையிலான பதிவுகளை எத்தனை முறை வேண்டுமானாலும் மீள்பதிவிடலாம். பகிர்வுக்கு நன்றி ரமணி சார் //.

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கலையரசி //
.
நல்ல கருத்துக்களை நகைச்சுவை கலந்து கொடுத்த விதம் அருமை! பாராட்டுக்கள்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான விரிவான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //

நல்ல கருத்துகளை தன்னகத்தில் கொண்ட கவிதை.... மீள் பதிவு என்றாலும் இப்போதும் ரசிக்க முடிகிறது./


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மோகன்ஜி //
.
சுகமான கவிதை. முன்னமே படித்திருந்த நினைவு வந்தது.//

!தங்கள்வரவுக்கும் //
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸ்ரீராம். //
.
இப்புறமும் அப்புறமும்!//

!தங்கள்வரவுக்கும் //
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அன்புடன் மலிக்கா //
...
அகம் புறம் இரண்டும்
அலசிய அலசல் அருமை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //d...

நீங்கள் எழுதிய விதம் எனக்கும் சிரிப்பு வந்தது.
உலகம் போற போக்குத் தானே தங்கமே ஜில்லாலே..
நல்லாகச் சிந்திக்கலாம் ஆனால் சனம் திருந்த வேணுமே!...பாராட்டுகள்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

யுவராணி தமிழரசன் said...

மத்தவங்கள குறை சொல்லற பலர் அவங்க அந்த தப்ப பண்றாங்களான்னு யோசிச்சு ஒத்துக்க மறந்துடறாங்க! மனிதர்களோட இயல்பே அதுதான Sir! ஆழமான கருத்து கொண்ட பதிவு Sir!

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //
.
முன்பே படித்திருந்தாலும் , இன்னொரு முறை படிக்கும்போதும் சுவை குன்றவில்லை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

அப்பாதுரை //

எதிர்பாராத ஆழம். நன்று.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

.chockalingam//

sir, I am very impressed by your writtings. It is induced me to learn more and also to write. your all writings are like sugar cane. thanking u //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

யுவராணி தமிழரசன் //
.
மத்தவங்கள குறை சொல்லற பலர் அவங்க அந்த தப்ப பண்றாங்களான்னு யோசிச்சு ஒத்துக்க மறந்துடறாங்க! மனிதர்களோட இயல்பே அதுதான Sir! ஆழமான கருத்து கொண்ட பதிவு Sir!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும்
உற்சாகமூட்டிப்போகும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment