Thursday, March 17, 2016

அழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......

 புரியாது எனப்  புலம்பித் திரிந்ததைவிட
புரிந்து கொள்ள முயன்றது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது

கிடைக்காது எனச்  சோம்பித் திரிந்ததைவிட
தேட முயன்றதில்
கொஞ்சம் கிடைக்கத்தான் செய்தது

முடியாது என முடங்கிக் கிடந்ததைவிட
அடைய முயன்றது
கொஞ்சம் முடித்துத்தான் கொடுத்தது

மாறாது என மறுகித் திரிந்ததை விட
மாற்ற முயன்றது
கொஞ்சம் மாற்றம்தான் காட்டியது

இல்லையென  என அவநம்பிக்கைகொண்டதை விட
நமபத் துவங்கியதில்
கொஞ்சம் உண்டெனத்தான் புரிந்தது

பொய்த்து எரிக்கும் வானத்தைப் பார்த்து
அழுது கொண்டிருந்ததை விட

நாளைய மழையை எதிர்பார்த்து
உழுது வைத்தது
கொஞ்சம் பலன் தரத்தான் செய்தது

11 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எல்லாம் ஒரு நம்பிக்கை தான்...

ஸ்ரீராம். said...

பாஸிட்டிவ்!

Unknown said...

நம்பிக்கைதான் வாழ்கையை முன்தோக்கி நகர்த்தும்!

G.M Balasubramaniam said...

இந்தப் பதிவில் உங்கள் அடையாளம் சற்று தூக்கலாகவே தெரிகிறது

வலிப்போக்கன் said...

புரிந்து கொள்ள முயன்ற போது
கொஞ்சம் புரியத்தான் வைத்தது அய்யா

கரந்தை ஜெயக்குமார் said...

நம்பிக்கை
வெல்லும்

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழுது கொண்டிருப்பதற்குப் பதில் .......
சிரிக்க வைக்கும் சிறிய செயல்களாகப் பட்டியல் இட்டு நம்பிக்கையை விதைத்துள்ளீர்கள்.

பாராட்டுகள்.

விசு said...

அருமை நண்பரே.. வாழ்த்துக்கள்.

தனிமரம் said...

நம்பிக்கைத்தான் வாழ்க்கை ஐயா!

வெங்கட் நாகராஜ் said...

நம்பிக்கை.... அது தானே எல்லாம்...

த.ம. +1

Thulasidharan V Thillaiakathu said...

நம்பிக்கை அதுவும் நேர்மறை எண்ணம் நம்பிக்கையுடன் துணைபோகும்..

Post a Comment