Sunday, January 28, 2018

இறுதிச் சுற்று ........

தேவையின்றி 
அலட்சியமாய்
உரச உரச
உதிர்ந்த
ஒடிந்த
தீக்குச்சிகளின்
அருமையை
உணரச் செய்து
பதட்டமேற்றிப் போகிறது....

அவசியமாய்
மிகக் கவனமாய்
உரச வேண்டிய
நிலையில்
எஞ்சிக்
கடைசியாய்
கையில் உள்ள
ஒரே ஒரு
தீக்குச்சி

4 comments:

ராமலக்ஷ்மி said...

அருமை.

G.M Balasubramaniam said...

அதுவும் எரியாமலே போக வாய்ப்பும் உண்டு

தனிமரம் said...

அருமையான கவிதை. இறுதி என்ற சிந்தனை எப்போதும் ஒரு பதட்டத்தை தருகின்றது ஐயா!

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சற்றே சிரமம்தான்.

Post a Comment