Sunday, February 16, 2020

தேவ இரகசியம்..

பசியா தூக்கமா தன் அசௌகரியத்திற்கு எது காரணம் என அறிந்து கொள்ளத் தெரியாது தன் அசௌகரியம் தாய்க்குத் தெரிந்தால்  மட்டும் போதும் அது எதுவெனத் தெரிந்து அவள் உடன் தீர்த்து வைப்பாள் என்கிற நம்பிக்கையில் அழமட்டுமே செய்கிறது கைக்குழந்தை அக்குழந்தையின் அழுகையின் தொனியைக் கொண்டே அசௌகரியத்திற்கான காரணம் புரிந்து உடன் அதைச்சரிசெய்து குழந்தையை சிரிக்க வைத்துவிடுகிறாள் தாய்                                                          ஆசையா தேவையா தன் மனக்குழப்பத்திற்குக் காரணம் எது என மிகச் சரியாக அனுமானிக்க முடியாத ஆன்மீகவாதியும் குழப்பத்தைப் பிரார்த்தனையாய் ஆண்டவனிடம் சமர்ப்பித்துவிட்டு தன் அன்றாடக் கடமைகளில் மூழ்கிவிடுகிறான். குழப்பத்திற்கான மூலத்தை சரிசெய்து ஆன்மீகவாதியை சமநிலைப் படுத்திவிடுகிறான் ஆண்டவனும்...                ..................கைக்குழந்தைக்கு மட்டும் தெரிந்த தேவ இரகசியம்..வளர்ந்த பிள்ளைகளுக்குத் தெரிவதில்லை...ஆன்மீகவாதிகளுக்குப் புரிந்த இந்தச் சூட்சுமம் மதவாதிகளுக்குப் புரியவாய்ப்பில்லை என்பதைப் போலவே..

6 comments:

சிகரம் பாரதி said...

நல்ல கருத்து. உணர்ந்து நடந்தால் சிறப்பு.

தமிழ்மணத்துக்கு மாற்றாக வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை .
----- முதல் ஓலை பதிவில் பரீட்சார்த்தமாக தங்கள் வலைத்தளம் உட்பட ஆறு வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன. அத்துடன், அடுத்த மாதம் முதல் தமிழ்மணம் போல தனிப்பதிவுகளாக அனைத்து வலைத்தளங்களையும் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம். உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன்.

கோமதி அரசு said...

தேவ ரகசியம் அருமை.

திண்டுக்கல் தனபாலன் said...

மதம் மிகப்பெரிய அழிவைத்தரும் ஆயுதம்...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான ஒப்பீடு.

ராமலக்ஷ்மி said...

அருமை.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Post a Comment