Thursday, May 28, 2020

கொடுப்பதன் மூலம் பெறுவோம்..

எதிர்படும் எல்லோருக்கும்
வாழ்க வாழ்க வென்று
வாழ்த்துச் சொல்லியபடி நகர்கிறேன்

அதுவரை
வாட்டமுற்றிருந்த முகமெல்லாம்
மலரத் துவங்குகிறது

அதுவரை
மலர்ந்திருந்த முகமெல்லாம்
கூடுதல் அழகு பெறுகிறது

எதிர்படும் எல்லோரையும்
வெல்க வெல்க வென்று
உற்சாகப்படுத்திச் செல்கிறேன்

அதுவரை
துவண்டு கிடந்தவர்கள் எல்லாம்
துள்ளி எழத் துவங்குகிறார்கள்

அதுவரை
ஜெயித்து கொண்டிருந்தவர்கள்  எல்லாம்
கூடுதல் எழுச்சி கொள்கிறார்கள்

"இதனால் உனக்கென்ன நன்மை "
எரிச்சல்படுகிறான் நண்பன்

வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

உவமைகளை இவ்வளவு அழகாகவும் எளிதாகவும் சொல்ல உங்களால் மட்டுமே முடியும்...

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

ஸ்ரீராம். said...

வாழ்த்தப்படுவதற்கு திறன் வேண்டும்.  மனதார அடுத்தவரை வாழ்த்துவதற்கு பெரிய மனம் வேண்டும்.

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமை. வழக்கம் போல மிக அழகுடன் தெளிவாக சொல்லியிருக்கிறீர்கள்.

/வரவேற்பாளராய் இருந்து
சந்தனமோ பன்னீரோ தெளித்துப் பார்
அதிக மணம் உன் மேல்தான் இருக்கும் என்கிறேன்

மிகச் சரியாக புரியாது விழிக்கிறான்
எப்போதும் வாழ்த்தப் படுவதையே விரும்பும் அவன்/

அருமையான வரிகள். எண்ணங்கள் இனிதானல், எல்லாவற்றிலும் தானாகவே இனிமை வந்தடையும். ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

வெங்கட் நாகராஜ் said...

எத்தனை சிறப்பான உவமை!

தொடரட்டும் சிந்தனைகள்.

Post a Comment