Sunday, August 30, 2020

மாண்டிச்சோரி பிறந்தநாள்

 .ஆடிப்பாடி எல்லோரும் கொண்டாடுவோம்

ஆனந்தமாய் இந்தநாளைக் கொண்டாடுவோம்

கூடிப்பாடி மகிழ்வுடனே கொண்டாடுவோம்-மாண்டிச்சோரி

பிறந்த நாளைத் திருநாளாய் கொண்டாடுவோம்


குழந்தை மனம் பஞ்சுபோல மென்மையானது-அதை

அறிவதுதான் அனைத்திலுமே முதன்மையானது-இதை

உலகறிய சொல்லிவைத்த அன்னையல்லவா-அவர்

அவதரித்த நாளுமிந்த நாள்தான் அல்லவா


பள்ளியது ம் இன்னுமொரு வீடுபோலவே-இதை

குழந்தைகள் உணருமாறு செய்தல்வேண்டுமே -என

எல்லோரும் அறியவைத்த அறிஞர் அல்லவா-அவர்

பிறந்திட்ட நாளுமிந்த நாள்தான் இல்லையா


திணிக்கின்ற பண்டமல்ல கல்வியென்பது-எளிதாய்

புரிந்துகொள்ள உதவுவதே பள்ளியென்பது-இதை

அனைவருக்கும் புரியவைத்த மேதையல்லவா-அவ்ர்

வந்துதித்த இந்நாளே நன்நாள் அல்லவா


இரண்டுமுதல் ஆறுவரை ஈர்க்கும் பருவமே-இதைத்

தெளிவாகத் திட்டமிட முயல்தல் வேண்டுமே -என்ற

சிறப்புமிக்க சேதிசொன்ன தெய்வ மல்லவா-அவரை

இந் நாளில் நினைவுகூறல் கடமை அல்லவா


(மரியா மாண்டிச் சோரி 31.08.1870)(சிறு செடியை பிடுங்கி நட்டாலும் வேரைப்போலவே அது இருந்த மண்ணையும் சேர்த்தே எடுத்து நடப் பழகிய நமக்கு இவர் கூற்று புரிதல் கடினம் இல்லையே) 

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

மாண்டிசோரி அம்மையாரின் விளையாட்டு முறையிலான கல்வி குழந்தைகளுக்கு மிகவும் உகந்தது. அவரை நினைவு கூர்ந்தமைக்கு நன்றி ரமணி சார். சில பள்ளிகள் இந்த முறையில் சொல்லிக் கொடுக்கிறோம் என காசு பறிக்கவும் செய்கின்றன.

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

நினைவுகூர்ந்த விதம் அருமை. பெரும்பாலான இடங்களில் இந்த முறையை வணிக நோக்காகப் பயன்படுத்துவதைப் போல தெரிகிறது.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

நல்ல முறையாக இருந்தாலும், இன்றைய காலகட்டத்தில் பணம் ஈட்டுவதற்காக மட்டுமே இந்த முறையைப் பயன்படுத்துவது வேதனை.

Post a Comment