Monday, February 22, 2021

சொல்வனம்....

 சொல்ல நினைத்தை

சொல்லவில்லை என்ற போதும்


சொல்லிச் சென்றது

தனக்கே புரியவில்லை என்ற போதும்


சொல்லியது புரியாததாலேயே

சிறப்படைகிறது எனப் புரிந்து...


அவன் படைப்பை அனுப்பி வைக்க..


எத்தனை முறை

படித்துத் தொலைத்த போதும்...


ஒவ்வொரு சொல்லாய்ப்

பிரித்துப் படித்த போதும்...


புரியாப் புதிராய் இருப்பதுவே

தரத்திற்கான தகுதி எனக் கருதி 


அவன் வெளியிட்டுத் தொலைக்க...


எப்படிப் படித்தும்

புரியவில்லை என்றாலும் கூட...


மீண்டும் மீண்டும் அதை

வாசித்தபடியே இருக்கிறேன் 


அதன் நாடிப் பிடித்து

சூட்சுமம் அறிய முயல்கிறேன் 


நானும் கவியாகிச் சிலிர்க்க...


( இவ்வார ஆனந்த விகடன் சொல்வனம் படிக்க

சட்டெனக் குதித்தக் கவிதை )

6 comments:

Post a Comment