Friday, March 5, 2021

நுனியில் அமர்ந்து முன்புறம் வெட்டும் முட்டாளாய்....

கொத்தனாரை

தோட்ட வேலை செய்யவும்

தோட்டக்காரனை

வீடு கட்டவும் 

விட்டக் கதையாய்


சர்வரை 

சமையல் வேலை செய்யவும்

சமையல்காரரை

நின்று பரிமாற 

வைத்தக் கதையாய்


அரசனை 

ஆலோசனை வழங்கச் செய்தும்

மந்திரியை

பெரும் போருக்கு 

அனுப்பும் முறையாய்


எல்லாவற்றையும்

மாற்றி மாற்றிச் செய்து

மாற்றம் இல்லையென

நொந்துச் சாகிறோம்


ஆப்பசைத்து

மாட்டிக் கொண்ட குரங்கு

நுனி அமர்ந்து

முன்புறம் வெட்டிய முட்டாள்

முதலான கதைகளைச் சொல்லியபடி..


வருகிற தேர்தலில்

தனக்கும் தன் வாரீசுகளுக்கும்

சேவை செய்யத் துடிப்பவர்கள்

நமக்கும் செய்வார்கள் என

வழக்கம்போல் நம்பியபடி...

5 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஏ மாற்றம்...

ராமலக்ஷ்மி said...

நிதர்சனம்.

ஸ்ரீராம். said...

நம்பும் நிலை வந்தாலே ஏமாற்றம்தான்!

இனிய பிறந்த நாள் வாழ்த்துகள்.

வெங்கட் நாகராஜ் said...

கவிதை நன்று.

கரந்தை ஜெயக்குமார் said...

உண்மை
அருமை

Post a Comment