Thursday, May 3, 2012

ஆண்டவனுக்கு அருள்வோமா

அல்லாவும்
ஏசுவும்
சிவனும் பெருமாளும்
எப்படி மிகச் சரியாக
அவர் அவர்களுக்கானவர்களை
கண்டுபிடித்து அருளுகிறார்கள் ?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

நிலவைப் போல்
காற்றைப் போல்
சூரியக் கதிர்கள் போல்
அனைவருக்கும்
பொதுவாக இருப்பதே எளிது

தனித் தனியாக
அவர் அவர்களுக்கானவர்களைத்
 தேடிப்பிடித்து அருளுவது என்பது
இன்றைய காலச் சூழலில்
ஜ்ன நெருக்கடியில்
ஆண்டவனாயினும்
அதிகச் சிரமமே

நமக்காக இல்லையென்றாலும்
ஆண்டவனுக்காகவாவது
இது குறித்து கொஞ்சம் சிந்திப்போமா ?
அவர்களது நிம்மதிக்காவாவது
இது குறித்து சிந்திக்கத் துவங்கி
அவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா ?

73 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல யோசனை ரமணி சார்.... அவரும் பாவம்... எத்தனை எத்தனை வேலைகள் அவருக்கு!

நல்ல பகிர்வு சார்.

ராமலக்ஷ்மி said...

நல்ல சிந்தனை.

Anonymous said...

thaan pidiththa muyalukku moodru kaal ena ularum madhaveriyargalaana moodargalukku nalla pudhdhi
nandri
surendran

விழித்துக்கொள் said...

thaan pidiththa muyalukku moodru kaal ena ularum madhaveriyargalaana moodargalukku nalla pudhdhi varattum nandri.
surendran

சீனு said...

//அவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா ?// ஹா ஹா ஹா நம் நிமதியைப் பற்றி சிந்திக்கும் இந்தச் சூழலில் ஆண்டவனுகாக சிந்தனையா அருமையான சிந்தனை.

நேரம் இருந்தால் படித்துப் பாருங்கள்

ஆனந்தா...ஆனந்தா...சிரிப்பானந்தா...

குறையொன்றுமில்லை. said...

நல்ல கருத்துள்ள கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள். த. ம. 4

பால கணேஷ் said...

யாவரும் மனிதரே... அனைவருக்கும் அருள்பவனே இறைவன். அவன் ஒருவனே.. தெளிவைத் தரும் நல்ல சிந்தனையைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி. (த.ம.5)

ஸாதிகா said...

அருமையான ஆக்கம்!

சசிகலா said...

அவரவர் பார்வையில் வேறு வேறு கோணங்கள் . ஆண்டவன் இன்னும் பொதுவுடைமை ஆகவில்லை . ஆகும் நாள் நன்னாளே .
tha.ma.6

செய்தாலி said...

மனிதர்கள்
நாம்தான்
பெயரில் பிரிக்கிறோம்
இறைவனை

மனிதர்கள் கண்டிப்பா யோசிக்கணும் சார்
நல்ல சிந்தனை சார்

RAMA RAVI (RAMVI) said...

கடவுள் ஒருவர்தான். நாம்தான் அவரை வேறு வேறு பெயர்களில் அழைக்கிறோம்.

சிந்தனையை தூண்டும்விதமான பதிவு.

மகேந்திரன் said...

உங்களில் கவிக் கருவுக்கு எல்லையே இல்லை நண்பரே..
எவ்வளவு நுணுக்கமான செய்தியை இவ்வளவு அழகாய்
எளிதாய் உரைக்க உங்களால் மட்டுமே முடியும்...

எவ்வழி சென்றிடினும் சேரும் இடம் ஒன்றென
உள்ளூர உணர்தல் நன்று...

Seeni said...

ayya!

seythali sonnathai-
naanum aamothikkiren!

Unknown said...

//தனித் தனியாக
அவர் அவர்களுக்கானவர்களைத்
தேடிப்பிடித்து அருளுவது என்பது
இன்றைய காலச் சூழலில்
ஜ்ன நெருக்கடியில்
ஆண்டவனாயினும்
அதிகச் சிரமமே

நமக்காக இல்லையென்றாலும்
ஆண்டவனுக்காகவாவது
இது குறித்து கொஞ்சம் சிந்திப்போமா ?//

சிந்தனையை கிளரும் வரிகள்.. கேட்கப்போவது யார்?

சத்ரியன் said...

தன்னை வழிபடுபவனைக் கண்டுபிடிப்பது கடவுளுக்கும் கஷ்டம் தான்னு இப்ப தான் ஐயா யோசிக்கத்தோனுது.

அருணா செல்வம் said...

“ஆண்டவனுக்கு நாம் அருள்வோம்!!!“ வித்தியாசமான சிந்தனை ரமணி ஐயா!

சென்னை பித்தன் said...

என்ன வேணாச் செய்யட்டும்.சாதி மதங்களின் பெயரால் கலவரங்களை உருவாக்காமல் இருந்தாச் சரி
அருமையான கவிதை
பாருங்கள் என் பழைய பதிவு-
http://chennaipithan.blogspot.com/2011/08/blog-post_05.html

சென்னை பித்தன் said...

த.ம.8

Anonymous said...

''..தனித் தனியாக
அவர் அவர்களுக்கானவர்களைத்
தேடிப்பிடித்து அருளுவது என்பது
இன்றைய காலச் சூழலில்
ஜ்ன நெருக்கடியில்
ஆண்டவனாயினும்
அதிகச் சிரமமே..''
சரியான வரிகள். சிந்தனை நன்று. வாழ்த்துகள்.
வேதா. இலங்காதிலகம்.( சில வசதியீனங்களால் வருகை தாமதம்).

வேர்கள் said...

// அல்லாவும்
ஏசுவும்
சிவனும் பெருமாளும்
எப்படி மிகச் சரியாக
அவர் அவர்களுக்கானவர்களை
கண்டுபிடித்து அருளுகிறார்கள் ?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது//

இந்த ஆச்சரியம் எனக்கும் இருக்கிறது :)))

எதற்காக இதை சொல்கிறீர்கள் என்பது புரியவேண்டியவர்களுக்கு
புரிந்தால் சரி.....

Angel said...

//இது குறித்து கொஞ்சம் சிந்திப்போமா ?
அவர்களது நிம்மதிக்காவாவது
இது குறித்து சிந்திக்கத் துவங்கி
அவர்களுக்கு நிம்மதி தர முயல்வோமா ?//


அருமையான கருத்தை மிக அழகாக கூறியிருக்கீங்க அண்ணா .

G.M Balasubramaniam said...

தேடிப் பிடித்து அருள்கிறார்களா.? அருள்வார்கள் என்று நம்ப வைக்கப் படுகிறோம். நமக்கு முடிந்தால் அவர்களுக்கு அருளுவோம்.

S.Venkatachalapathy said...

இந்த சந்தேகம் எனக்குள்ளும் பல நாள் இருந்து வருகிறது. ஆனால் மிகச் சரியாக அருள் பெற்றவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பார்க்கிறேன். எவ்வளவு பேர் வந்தாலும் எல்லாக் கடவுள்களும் சமாளித்து விடுகிறார்கள்.எனவே அவர்கள் நிம்மதி குறித்து நாம் கவலைப் பட வேண்டியதில்லை. அவ்வப்பொழுது பிரசாதம் சரியாக வருகிறதா என்பது மட்டும் தான் நம் கவலை.

Unknown said...

கடவுள் ஒருவர்தான்! இறைவன் உணர்வின் ரூபம்! ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள் உணர்ந்த வகையில் இறைவனை வழிபடுகிறார்கள் என்பதே நிஜம்!

பதிவு நன்று! வாழ்த்துக்கள்!

சிவகுமாரன் said...

அட.
வித்தியாசமான சிந்தனை.
அருமை ரமணி சார்.
மிபப் பெரிய பிரச்சினைக்கு சுலபமான தீர்வு

ஹேமா said...

இது பற்றிக் கடவுளே சிந்திச்சுக்கொண்டுதானாம் இருக்கிறார்.மனிதன் தான் சுயநலமாய் வாழ என்னவோ எல்லாம் செகிறான்.அதில் மதவாதமும் ஒன்று !

Yaathoramani.blogspot.com said...
This comment has been removed by the author.
Yaathoramani.blogspot.com said...

வெங்கட் நாகராஜ் //
.
நல்ல யோசனை ரமணி சார்.... அவரும் பாவம்... எத்தனை எத்தனை வேலைகள் அவருக்கு!
நல்ல பகிர்வு சார்.

தங்கள் முதல் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ராமலக்ஷ்மி //
.
நல்ல சிந்தனை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விழித்துக்கொள் //

thaan pidiththa muyalukku moodru kaal ena ularum madhaveriyargalaana moodargalukku nalla pudhdhi varattum nandri.
surendran /

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சீனு //

அருமையான சிந்தனை.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Lakshmi //

நல்ல கருத்துள்ள கவிதை நல்லா இருக்கு வாழ்த்துகள்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

கணேஷ் //

தெளிவைத் தரும் நல்ல சிந்தனையைப் பகிர்ந்துள்ளீர்கள். நன்றி.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஸாதிகா //

அருமையான ஆக்கம்!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சசிகலா //

அவரவர் பார்வையில் வேறு வேறு கோணங்கள் . ஆண்டவன் இன்னும் பொதுவுடைமை ஆகவில்லை . ஆகும் நாள் நன்னாளே //

.வித்தியாசமான தீர்வைச் சொல்லி இருக்கிறீர்கள்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

செய்தாலி //

மனிதர்கள் கண்டிப்பா யோசிக்கணும் சார்
நல்ல சிந்தனை சார் //

மனிதர்கள் என்கிற ஒரு வார்த்தை அதிக அர்த்தம் தருகிறது
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

RAMVI //.

கடவுள் ஒருவர்தான். நாம்தான் அவரை வேறு வேறு பெயர்களில் அழைக்கிறோம்.//

இதை அனைவரும் உணர்ந்தால் உலகில்
பாதிப் பிரச்சனை முடிந்துவிடும்
தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மகேந்திரன் //

எவ்வழி சென்றிடினும் சேரும் இடம் ஒன்றென
உள்ளூர உணர்தல் நன்று...//

இதை அனைவரும் உணர்ந்தால் உலகில்
பாதிப் பிரச்சனை முடிந்துவிடும்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Seeni //
.
seythali sonnathai-
naanum aamothikkiren!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

sathish prabu //

சிந்தனையை கிளரும் வரிகள்.. கேட்கப்போவது யார்?//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சத்ரியன் //

தன்னை வழிபடுபவனைக் கண்டுபிடிப்பது கடவுளுக்கும் கஷ்டம் தான்னு இப்ப தான் ஐயா யோசிக்கத்தோனுது.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
வித்தியாசமான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

AROUNA SELVAME //
.
வித்தியாசமான சிந்தனை ரமணி ஐயா!//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சென்னை பித்தன் //
.
என்ன வேணாச் செய்யட்டும்.சாதி மதங்களின் பெயரால் கலவரங்களை உருவாக்காமல் இருந்தாச் சரி
அருமையான கவிதை //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

kovaikkavi //

சரியான வரிகள். சிந்தனை நன்று. வாழ்த்துகள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வேர்கள் //

எதற்காக இதை சொல்கிறீர்கள் என்பது புரியவேண்டியவர்களுக்கு
புரிந்தால் சரி....//

புரியவேண்டியவர்கள் கண்ணை மூடிக்கொண்டல்லவா படிக்கிறார்கள்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

angelin //

அருமையான கருத்தை மிக அழகாக கூறியிருக்கீங்க அண்ணா .//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் உற்சாகமூட்டும்
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam .//
.
தேடிப் பிடித்து அருள்கிறார்களா.? அருள்வார்கள் என்று நம்ப வைக்கப் படுகிறோம். நமக்கு முடிந்தால் அவர்களுக்கு அருளுவோம்.//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
வித்தியாசமான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

VENKAT //

இந்த சந்தேகம் எனக்குள்ளும் பல நாள் இருந்து வருகிறது. ஆனால் மிகச் சரியாக அருள் பெற்றவர்கள் நேர்த்திக்கடன் செலுத்துவதையும் பார்க்கிறேன். எவ்வளவு பேர் வந்தாலும் எல்லாக் கடவுள்களும் சமாளித்து விடுகிறார்கள் //

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
வித்தியாசமான பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ரமேஷ் வெங்கடபதி //
.
கடவுள் ஒருவர்தான்! இறைவன் உணர்வின் ரூபம்! ஒவ்வொரு பகுதியினரும் தாங்கள் உணர்ந்த வகையில் இறைவனை வழிபடுகிறார்கள் என்பதே நிஜம்!//


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சிவகுமாரன் //

அட.
வித்தியாசமான சிந்தனை.
அருமை ரமணி சார்.
மிபப் பெரிய பிரச்சினைக்கு சுலபமான தீர்வு //


தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

ஹேமா . //

இது பற்றிக் கடவுளே சிந்திச்சுக்கொண்டுதானாம் இருக்கிறார்.மனிதன் தான் சுயநலமாய் வாழ என்னவோ எல்லாம் செகிறான்.அதில் மதவாதமும் ஒன்று //

!மிகச் சரியான கருத்தை பின்னூட்டமாக வழங்கியமைக்கு
மனமார்ந்த நன்றி

விச்சு said...

sir,முதல் வரியிலேயே யோசிக்க வைத்துவிட்டீர்கள். எனக்குள்ளும் இந்த சிந்தனை இருந்துகொண்டே இருந்தது. அவர்களுக்கானவர்களுக்கு மட்டும் அருள் புரிந்தால் அது கடவுள்தானா?

Yaathoramani.blogspot.com said...

விச்சு //
.
sir,முதல் வரியிலேயே யோசிக்க வைத்துவிட்டீர்கள். எனக்குள்ளும் இந்த சிந்தனை இருந்துகொண்டே இருந்தது. அவர்களுக்கானவர்களுக்கு மட்டும் அருள் புரிந்தால் அது கடவுள்தானா? //

அதைத்தான் நானும் சொல்ல முயன்றிருக்கிறான்
ஒரு காலனிக்குள் தன் மதத்வனைத் தேடித் தேடி
அலைவதென்பது ஆண்டவனுக்கு எவ்வளவு பெரிய சிரமம்
தங்கள் வரவுக்கும் அருமையான பின்னூட்டத்திற்கும்
மனமார்ந்த நன்றி

கீதமஞ்சரி said...

நகைச்சுவைக்குள் புகுத்தியிருக்கும் நல்ல சிந்தனைக்குப் பாராட்டுகள் ரமணி சார். கடவுளின் சௌகரியம் குறித்தும் கவலைப்படும் மனம் கண்டு அசந்துபோகிறேன். நாசுக்காய் மத ஒருமைப்பாடு வலியுறுத்தும் விதம் கண்டும் வியந்துபோகிறேன்.

Avargal Unmaigal said...

நல்ல சிந்தனை & நல்ல பதிவு

எனக்குள்ள சந்தேகம் நீங்கள் சொல்ல வருவதை எத்தனை மக்கள் மிக நுட்பமாக் புரிந்து கொண்டிருபார்கள் என்பதுதான்

முத்தரசு said...

உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள்

valaiyakam said...

வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும்...
vanakkam plz add your post in http://www.valaiyakam.com/

தி.தமிழ் இளங்கோ said...

வணக்கம்! பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே என்று சொல்லுகிறது உங்கள் கவிதை!

Yaathoramani.blogspot.com said...

கீதமஞ்சரி //.

நாசுக்காய் மத ஒருமைப்பாடு வலியுறுத்தும் விதம் கண்டும் வியந்துபோகிறேன்.//

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

Avargal Unmaigal //

நல்ல சிந்தனை & நல்ல பதிவு
எனக்குள்ள சந்தேகம் நீங்கள் சொல்ல வருவதை எத்தனை மக்கள் மிக நுட்பமாக் புரிந்து கொண்டிருபார்கள் என்பதுதான் //

நியாயமான ஆதங்கம்

தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

வலைஞன் //

வணக்கம் உறவே உங்கள் இடுகைகளை எமது வலையகத்திலும் பதியவும் //

தங்கள் அழைப்புக்கு மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

தி.தமிழ் இளங்கோ //

வணக்கம்! பிரித்து வைத்துப் பார்ப்பதெல்லாம் மனித இதயமே என்று சொல்லுகிறது உங்கள் கவிதை //

!தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

மனசாட்சி™ //

உங்கள் சிந்தனைக்கு பாராட்டுக்கள் //

!தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Unknown said...

இறைவனுக்கே நிம்மதி தரும் கவிதை.....ஒற்றுமையே நல்லது என்பதை கூறுகிறது நன்று!

vimalanperali said...

காலங்கள் கடவுளை அடையாளம் காட்டாவிட்டாலும் கூட நாம் கடவுளசி அடையாளம் காணலாம்.நல்ல படைப்பு, நன்றி. வாழ்த்துக்கள்.

kowsy said...

அல்லாவும்
ஏசுவும்
சிவனும் பெருமாளும்
எப்படி மிகச் சரியாக
அவர் அவர்களுக்கானவர்களை
கண்டுபிடித்து அருளுகிறார்கள் ?
ஆச்சரியமாகத்தான் இருக்கிறது

சிரிப்பாக இருக்கின்றது . ரமணி சார். நீங்கள் எது எழுதினாலும் அதில் உள்ளார்ந்த சிந்தனை இருக்கும்

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

கவிதைக்கேற்ற நச்சுன்னு ஒரு தலைப்பு.

இராஜராஜேஸ்வரி said...

நிலவைப் போல்
காற்றைப் போல்
சூரியக் கதிர்கள் போல்
அனைவருக்கும்
பொதுவாக இருப்பதே எளிது

அப்படித்தான் அனைத்துக் கடவுள்களையும் எத்துணையும் பேதமுறாது வணங்கி அருள்பெறவேண்டும்..

Yaathoramani.blogspot.com said...

வீடு சுரேஸ்குமார் //

இறைவனுக்கே நிம்மதி தரும் கவிதை.....ஒற்றுமையே நல்லது என்பதை கூறுகிறது நன்று!//

!தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

விமலன் //

காலங்கள் கடவுளை அடையாளம் காட்டாவிட்டாலும் கூட நாம் கடவுளசி அடையாளம் காணலாம்.நல்ல படைப்பு, நன்றி. வாழ்த்துக்கள். //

!தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

சந்திரகௌரி //

சிரிப்பாக இருக்கின்றது . ரமணி சார். நீங்கள் எது எழுதினாலும் அதில் உள்ளார்ந்த சிந்தனை இருக்கும் //

!தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

T.N.MURALIDHARAN //

.
கவிதைக்கேற்ற நச்சுன்னு ஒரு தலைப்பு./

!தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Yaathoramani.blogspot.com said...

இராஜராஜேஸ்வரி //

அப்படித்தான் அனைத்துக் கடவுள்களையும் எத்துணையும் பேதமுறாது வணங்கி அருள்பெறவேண்டும்..//

!தங்கள் வரவுக்கும் வாழ்த்துக்கும் அருமையான
பின்னூட்டத்திற்கும் மனமார்ந்த நன்றி

Post a Comment