Monday, July 13, 2015

ஆண்டவன் குறித்த அரிச்சுவடி

அடுத்து அடுத்து இருக்கிற
வீடுகள்தான் ஆயினும்

சுப்ரமணி வீடு
வரும் கண்ணன்
காதர் வீட்டையோ

காதர் வீடு வரும் அல்லா
சுப்ரமணி வீட்டையோ
எட்டிப்பார்பதே இல்லை

இதில்
எட்வெர்ட் வீடு வரும்
ஏசுவும் விதிவிலக்கானவர் இல்லை

ஏனெனில்
அவரும் எதிர் வீட்டுக் காதரையோ
பக்கத்து வீட்டு சுப்ரமணியையோ
கண்டு கொள்வதே இல்லை

காரணம்
ஆண்டவர்கள் எல்லாம்
ஒரு சார்புடையவர்கள் என்பது
நிச்சயமாக இல்லை

வீரிய மருந்துதான்
எனினும் அது
உயிரற்ற உடலில்
தன் வீரியம் காட்ட இயலாது
கொண்ட நோய் தீர்க்க உதவாது

சக்தி மிக்கவர்தான்
ஆண்டவன் ஆயினும்
தன்மீது நம்பிக்கை
கொண்டவர்களையல்லாது
மற்றவருக்கு அருள் வழங்க இயலாது

இது
"எல்லா  "ஆண்டவர்களுக்கும்
தெள்ளத் தெளிவாய்த் தெரியும்

நாம்தான் குழம்பிப்
பிரிந்துத் திரிகிறோம்

பலகூராய்ப் பிரிந்து...
அவர்களையும் நம் நோக்கில்
அற்பத்தனமாய்ப் பிரித்து...

8 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சரியே...

vimalanperali said...

வீதிகளும்,ஆண்டவர்களும் எப்போதுமே பிரித்துப்பார்ப்பதில்லை மனிதர்களை/

balaamagi said...

ஆம்
அவர்களையும் நம் நோக்கில் பிரித்து,
அருமை, வாழ்த்துக்கள்.
நன்றி.

G.M Balasubramaniam said...

ஆண்டவன் எங்கே பேதம் பார்க்கிறார். நாம்தான் பேதப்படுத்தி ஆண்டவர்களைப் படைத்திருக்கிறோம் பேதமும் பாராட்டுகிறோம்

Unknown said...

ஆண்டவன் ஒருவனே! என்பதை உணர்தும் பா!

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை.

நமக்கு மேற்பட்ட ஒரு சக்தி - அதற்கு எத்தனை எத்தனை பெயர் வைத்து விட்டோம்.....

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா.

அருமையாக சொல்லியுள்ளீர்கள் வாழ்த்துக்கள் த.ம 5
-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Thulasidharan V Thillaiakathu said...

ந்ல்லதொரு கவிதை...ஆண்டவன் எல்லோருக்கும் பொது ஒரு வர்தான் நாம் மனித வர்கம் தான் எல்லாவற்றையும் பிரித்து பேதம் பார்க்கின்றோம்....பல பெயர்கள்ம் பல கதைகள் சொல்லி..

Post a Comment