Wednesday, March 30, 2016

கவிக்கு அதுதான் உயிர்ச்சேர்க்கும்..

உப்பும் உரப்பும்
சரியா இருந்தாலும்
சத்தும் இருக்கணும் தம்பி-உடம்புக்கு
அதுதான் உரம் சேர்க்கும் தம்பி

நிறமும் அழகும்
நிறைஞ்சு இருந்தாலும்
மணமும் அவசியம் தம்பி-பூவை
அதுதான் சிறப்பாக்கும் தம்பி

தாளமும் இராகமும்
ஒத்து இருந்தாலும்
பாவமும் சேரணும் தம்பி-பாட்டை
அதுதான் அமுதாக்கும் தம்பி

எடுப்பும் தொடுப்பும்
இதமா இருந்தாலும்
முடிப்பதும்  அமையணும்  தம்பி-எதையும்
அதுதான்  நிறைவாக்கும் தம்பி 

எதுகையும் மோனையும்
அழகா இணைஞ்சாலும்
கருவும் அவசியம் தம்பி-கவிக்கு
அதுதான் உயிர்ச்சேர்க்கும் தம்பி

2 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

அழகான அறிவுரைகளை (தம்பிக்கு) அற்புதமாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள். வாழ்த்துகள். பகிர்வுக்கு நன்றிகள்.

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான அறிவுரைகள்......

த.ம. +1

Post a Comment