Thursday, June 9, 2016

வாழ்வே நிச்சயம் சொர்க்கம் தானே

புன்னகை முகத்தில் என்றும்
பொங்கியே ஜொலிக்கக் கூடின்
பொன்நகை ஜொலிப்பு கொஞ்சம்
மங்கிடத் தானே செய்யும் ?

நன்மனை வாய்க்கப் பெற்று
நலமுடன் வாழ்ந்து வந்தால்
அரண்மனை சுகங்கள் கூட
அலுப்பினைத் தானே கூட்டும் ?

இருப்பதைக் கொண்டு வாழும்
இலக்கணம் அறிந்து கொண்டால்
பறப்பதைப் பிடிக்கும் மோகம்
மறைந்திடத் தானே செய்யும் ?

ஆசையது போடும் ஆட்டம்
அடங்கிடக்  கூடும் ஆயின்
தேவையின் சுமைகள் கூட
குறைந்திடத் தானே வேண்டும் ?

சுகமதை நிலைக்கச் செய்யும்
சூட்சுமம் வெளியில் இல்லை
நிதமிதை உணர்ந்தால் வாழ்வே
நிச்சயம் சொர்க்கம் தானே 

6 comments:

ஸ்ரீராம். said...

மனத்தைப் பொறுத்தே வாழ்வு. அருமை.

KILLERGEE Devakottai said...

போதும் என்ற மனமே பொன் செய்யும் மருந்து
த.ம.3

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

அவரவர் மனதைப் பொறுத்தே. அருமை.

ஸ்ரீமலையப்பன் said...

அருமை https://ethilumpudhumai.blogspot.in

கரந்தை ஜெயக்குமார் said...

மனம் போல் வாழ்வு

”தளிர் சுரேஷ்” said...

அருமை! வாழ்த்துக்கள்!

Post a Comment