Friday, January 13, 2017

தமிழர் திரு நாளிதன் உட்பொருள் அறிந்து...

விதைத்த  ஒன்றை
நூறாய் ஆயிரமாய்
பெருக்கித் தரும்
பூமித் தாய்க்கு
நன்றி சொல்லும் நாளிது

எதிர்பார்ப்பு ஏதுமின்றி
உடனுழைத்து
நம் உயிர்  வளர்க்க உதவும்
விலங்கினங்களுக்கு
நன்றி சொல்லும் நாளிது

இணைந்து இயைந்து
 இருப்பதாலேயே
வாழ்விற்கு அர்த்தம் சேர்க்கும்
உறவுகளுக்கு
நன்றி சொல்லும் நாளிது

அனைத்து இயக்கங்களுக்கும்
 மூல காரணமாகி
உலகைக் காக்கும்
கதிரவனுக்கு
நன்றி சொல்லும் நாளிது

நம்மிருப்புக்கு காரணமான
அனைத்திற்கும்
நன்றிசொல்வதன் மூலமே
மனிதராக  நம்மை நாம்
நிலை நிறுத்திக் கொள்ளும் நாளிது

ஜாதி மதம் கடந்து
உழைப்பின் பெருமை  சாற்றும்
 தமிழர் திரு நாளிதன்
உட்பொருள் அறிந்து  மகிழ்வோம்
அதன் உன்னதம் காத்து உயர்வோம்

( பதிவர்கள் அனைவருக்கும்
பொங்கல்  திரு நாள்
நல்வாழ்த்துக்கள்  )

12 comments:

மனோ சாமிநாதன் said...

இனிய பொங்கல் நல்வாழ்த்துக்கள்!!

வை.கோபாலகிருஷ்ணன் said...

தமிழர் திருநாளின் உட்பொருள் அறிந்து மகிழ்ந்தோம். பகிர்வுக்கு நன்றிகள்.

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தாருக்கும், அனைத்து நண்பர்களுக்கும், இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துக்கள்

திண்டுக்கல் தனபாலன் said...

இனிய தித்திக்கும் பொங்கல் நல்வாழ்த்துகள்...

G.M Balasubramaniam said...

வீட்டில் பொங்கல் பொங்கியாயிற்றா வாழ்த்துகள்

கரந்தை ஜெயக்குமார் said...

தமிழர் திருநாள் வாழ்த்துக்கள்

Unknown said...

பொங்கல் நல்வாழ்த்துகள்..

வெங்கட் நாகராஜ் said...

நல்ல பகிர்வு.....

தங்களுக்கும் தங்கள் குடும்பத்தினருக்கும் இனிய பொங்கல் திருநாள் நல்வாழ்த்துகள்.

Yarlpavanan said...


நான்கு கால் செல்வங்களுக்கு
நம்மாளுங்க நன்றிக்கடன் செலுத்தும்
பட்டிப் (மாட்டுப்) பொங்கல்
பகலவனுக்கு (சூரியனுக்கு) நன்றிக்கடன் செலுத்தும்
தைப்பொங்கல் வாழ்த்துகள்!

ஸ்ரீராம். said...

நன்றி சொல்லக் கற்றுக் கொள்வோம்.

ஜீவி said...

உட்பொருள் அறியவிடாமல்
மயங்க வைக்கும்
உட்பொருள் அறிவோம்.

நிஷா said...

பொங்கல் நல்வாழ்த்துகள்...

Unknown said...

Nalvazhthukkal jee

Post a Comment