Monday, December 18, 2017

To R K nagar voters

R K நகர் வாக்காளர் பெருமக்களுக்கு

காட்டிக் கொடுத்தல் தவறே        
ஆயினும்                            
குற்றவாளியைக் காட்டிக்கொடுத்தல் பாராட்டுக்குரியதே

                          
துரோகம் வெறுக்கத்தக்கதே      
ஆயினும்                                    
துரோகிக்குத் துரோகம் போற்றத்தக்கதே
                        
ஏமாற்றுதல் அருவருக்கத்தக்கதே
ஆயினும்                                
 நயவஞ்சகனை ஏமாற்றுதல்    செய்யத் தக்கதே
                                  
பணம் பெற்றபின் மாறிச் செயல்படுதல்
நம்பிக்கைத் துரோகமே 
                           
ஆயினும்                                        
கொள்ளை அடித்த நம் பணத்தை
மீண்டும் கொள்ளை அடிப்பபதற்கே தருபவனுக்கு                                      
 மாறாக வாக்களிப்பது                      
நிச்சயம் நியாயமே
                        
இன்றைய நிலையில்                      
அதுவே அரசியல் தர்மமே

5 comments:

G.M Balasubramaniam said...

பணம் கொடுப்பவனுக்கு வாக்களிக்காதே என்கிறீர்கள்

ஸ்ரீராம். said...

நன்று.

வெங்கட் நாகராஜ் said...

அரசியல்.... ரொம்பவே அசிங்கமாகப் போய்க் கொண்டிருக்கிறது. என்ன செய்யப் போகிறார்கள் மக்கள் என்ற காத்திருப்பில் நானும்....

இராய செல்லப்பா said...

இப்படி உண்மைகளை மட்டுமே அடிக்கடி உதிர்ப்பதும் இலக்கிய தர்மமே!
-இராய செல்லப்பா சென்னை

Yarlpavanan said...

2018 பல வெற்றிகளைத் தருமென நம்புவோம்.
எல்லோருக்கும்
ஆங்கிலப் புத்தாண்டு வாழ்த்துகள்!

Post a Comment