Thursday, November 1, 2018

சர்க்காருக்கும் இதற்கும் எவ்வித சம்பந்தமுமில்லை

எதைச் சொல்வது என அறியாது
எப்படிச் சொல்வது என்பதறிந்து
என்ன செய்வது என அறியாது
உப்பரிகையில் உலாத்தியபடி சிலர்

எதைச் சொல்வது என்பதறிந்து
எங்கு எப்படிச் சொல்வதென அறியாது
என்ன செய்யலாம் என பிதற்றியபடி
வீதியில் திரிந்தபடிப் பலர்

எதை எப்படி என இரண்டுமறிந்தவர்
முன்புபோல் ஏன் இல்லை என
விசனப்பட்டு இருவருக்குமிடையில்
அனாதைகளாய் கதைகளுக்கான கவிதைகளுக்கான
பல அற்புதக் கனவுகளும் கற்பனைகளும்....

19 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படியே காலம் செல்வதாய்...!

வை.கோபாலகிருஷ்ணன் said...

:) ஆஹா ! அருமை.

மனோ சாமிநாதன் said...

இப்படித்தான் எத்தனையோ விடியல் இல்லாத கதைகளும் கற்பனைகளும் கனவுகளாய் மிதந்து கொண்டிருக்கின்றன!

ஆக்கம் அருமை!

G.M Balasubramaniam said...

பலரது பதிவின் ஆரம்பங்களே இப்படித்தானோ

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

சம்பந்தமில்லை என்று கூறும்போதே ஏதோ சம்பந்தம் இருப்பதைப்போலத் தெரிகிறதே?

Thulasidharan V Thillaiakathu said...

இறுதி வரிகள் அருமை அண்ணா..

மனோ அக்கா சொல்லியிருப்பது போல் எத்தனையோ கனவுகளாய் மிதந்தும் வெளிவர இயலாதோ என்று காத்துக் கொண்டிருக்கின்றன

கீதா

K. ASOKAN said...

ஆதங்க பதிவு அருமை வாழ்த்துகள்

ஸ்ரீராம். said...

அருமை.

Yaathoramani.blogspot.com said...

ஆரம்பம் என் போன்றோருக்கு இப்போது கூட அப்படித்தான்

Yaathoramani.blogspot.com said...

முதல் வரவுக்கும் உணர்ந்து நறுக்காய் பின்னூட்டமிட்டமைக்கும் நல்வாழ்த்துக்ககள்

Yaathoramani.blogspot.com said...

மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

விடியல் இல்லாத..அற்புதமான வார்த்தைப் பிரயோகம் வாழ்த்துக்கள்

Yaathoramani.blogspot.com said...

அட மாட்டிக்கிட்டேனா.

Yaathoramani.blogspot.com said...

ஆம் அனுபவித்ததை எழுதுபவர்கள் அதிகம் இருந்தார்கள். இப்போது படித்து அறிந்ததை எழுதுபவர்கள் அதிகமாகிவிட்டார்கள்

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி

Yaathoramani.blogspot.com said...

வாழ்த்துக்கு மிக்க நன்றி

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

வெங்கட் நாகராஜ் said...

அருமை ஐயா.

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்களுக்கே உரித்தான பூடகக் கவிதை அருமை

Post a Comment