Sunday, September 22, 2019

மனச்சாட்சியும் அறிவும்

"மன்னராட்சியின் நீட்சியாய்
வாரீசுக்கு பட்டம் சூட்டிய
மேடையிலேயே
ஜனநாயகத்தின் சிறப்புக் குறித்து
எப்படிப் ,பேசுவது "

கடைசிச் சொட்டு இரத்தம் போல
கடைசி முயற்சியாய்
மெல்ல முனகியது மனச்சாட்சி..

"குவாட்டருக்கும்
நூறு ரூபாய் பணத்திற்கும்
காத்திருக்கும் கூட்டத்தில்
இதை மட்டுமல்ல
 எதையும் பேசலாம்
 எப்படியும் பேசலாம் "
என எக்காளமிட்டது
அரசியல் அறிவு

4 comments:

Avargal Unmaigal said...

//என எக்காளமிட்டது
அரசியல் அறிவு..

என எக்காளமிட்டது 'களவாணி பயல்களின்' அரசியல் அறிவு

KILLERGEE Devakottai said...

சவுக்கடி வார்த்தைகள் கவிஞரே...

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்....

Dr B Jambulingam, Assistant Registrar (Retd), Tamil University said...

யதார்த்தம்.

Post a Comment