Thursday, April 2, 2020

அதிகாரமும் சுதந்திரமும்

பகலும் இரவும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பகலில் இரவில்
எதைச் செய்வது என்பது மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

பருவமும் காலமும்
நம் கட்டுப்பாட்டில் இல்லை
பருவத்திற்கும் காலத்திற்கும்
தகுந்தார்ப்போல நம்மை
தகவமைத்துக் கொள்ளும்
அதிகாரம் மட்டுமே
நம் கட்டுப்பாட்டில் உள்ளது

ஆயுளும் முடிவும்
நம் கட்டுப்பாட்டில் நிச்சயம் இல்லை
ஆயுள் முடிவதற்குள்
எதைச் செய்து முடிப்பது என்பதை
முடிவு செய்யும்
அதிகாரம் மட்டுமே
நம் வசம் உள்ளது

வார்த்தைகளும் அதற்கான
அர்த்தங்களும் நம் கட்டுப்பாடில் இல்லை
அதனை முழுமையாகப் புரிந்து
மிகச் சிறந்த படைப்பைத் தருவது மட்டுமே
நம் அதிகாரத்தில் இருப்பதைப் போலவும்....

11 comments:

வெங்கட் நாகராஜ் said...

நல்ல கவிதை.

உங்கள் கவிதை வழி சொல்லும் ஒப்பீடுகள் எப்போதும் சிறப்பு.

G.M Balasubramaniam said...

அருமையான் புதிய விளக்கம் நன்றி

நெல்லைத் தமிழன் said...

உண்மைதான். ஆனால் இப்போ பகலில் இரவில் என்ன செய்யணும் என்பதுகூட அரசாங்கக் கட்டுப்பாட்டில் இருக்கிறதே...

திண்டுக்கல் தனபாலன் said...

கை தட்டிய நாம், வரும் ஞாயிறு அன்று விளக்கேற்றுவோம்...

அருட்பெருஞ்சோதி...!

சிகரம் பாரதி said...

சிறப்பு.

சிகரம் பாரதி said...

தமிழ் வலைப்பூக்களுக்கு ஆதரவு வழங்க, புதிய வலைத்திரட்டியை உருவாக்கும் புதிய முயற்சி. உருவாகியது புதிய இணையத்தளம்: வலை ஓலை . நமது, வலை ஓலை இணையத்தளத்தில் பரீட்சார்த்தமாக 22 வலைத்தளங்கள் இணைக்கப்பட்டுள்ளன.

தற்போது, தங்களது அதிகாரமும் சுதந்திரமும் பதிவும் எமது தளத்தில் இணைக்கப்பட்டுள்ளது. அத்துடன், அனைத்து வலைத்தளங்களையும் எமது வலைத்திரட்டியில் இணைக்கவும் நடவடிக்கை எடுத்துள்ளோம்.

உங்கள் மேலான ஆதரவை வழங்க கேட்டுக் கொள்கிறேன். உரிய ஆதரவின்றி இழுத்து மூடப்பட்ட வலைத் திரட்டிகளின் நிலை எமது தளத்துக்கு ஏற்படாது என நம்புகிறோம்.

உங்கள் வலைப்பதிவை அறிமுகப்படுத்த ஒரு சந்தர்ப்பம். விபரம் இங்கே: நீங்களும் எழுதலாம்

எமது வலைப் பட்டியலில் இணைக்கப்பட்டுள்ள வலைத்தளங்களின் வலைப்பட்டியலைக் காண: வலைப் பட்டியல்

உமா said...

நன்று

Jayakumar Chandrasekaran said...

ஆட்சியில் இருப்பவரும் அவரது செயல்களும் நம் கட்டுப்பாட்டில் இல்லை. ஆனால் அவரை ஆட்சியில் அமர்த்துவது நம் கட்டுப்பாட்டில் உள்ளது. 

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

கவிதை அருமை.
எது எது நமக்கு கட்டுப்படுகிறது, நம்மால் கட்டுப்படுத்த முடிகிறது என்பதை தெளிவாக புரிய வைத்து விட்டீர்கள். ஆழமான அழகான வரிகளை ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

ஸ்ரீராம். said...

நல்ல கருத்தை நயமுடன் சொல்லி இருக்கிறீர்கள்.

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை

Post a Comment