Sunday, December 6, 2020

ரஜினி ஒரு கிரியா ஊக்கி மட்டுமே

 நான் பள்ளியில் படித்த கிரியா ஊக்கிக் குறித்த

விளக்கம் இன்னும் பசுமையாய் நினைவில் இருக்கிறது.


"தான் எவ்வித மாறுதலையும் அடையாமல்

தான் பக்கத்தில் இருப்பதாலேயே

மாறுதலைத் தூண்டும் பொருளுக்கு

கிரியா ஊக்கி எனப் பெயர்."


நிச்சயமாக தேர்தல் முடிந்தபின்னும்

தான் சார்ந்த அணிகள் ஜெயித்தால்

அது மக்களின் வெற்றி எனவும்.


தோற்றால் அது மக்களின் தோல்வி எனவும்

பேட்டிக் கொடுத்துவிட்டு இப்போது இருப்பது

போலவே....


அரசியலில் இருப்பது போலவும்

தமிழக மக்கள் வாழ்வில் அதீத அக்கறை

உள்ளவர் போலவும் காட்டிக் கொண்டபடியே


சினிமாவில் நடிக்கக் கிளம்பிவிடுவார்..


அதன் காரணமாகவே எந்தக் கட்சியையும்

எதிர்த்து அரசியல் செய்யாதபடி தான்

ஆட்சிக்கு வந்தால் இதை இதைச் செய்வேன்

என மட்டும் பிரச்சாரம் செய்துவிட்டு....


அதை ஆன்மீக அரசியல்

காந்தீய அரசியல் எனவும் 

புதுக் கதை விட்டு விட்டு..


தன் ரசிகர்களை மீண்டும் இரசிகர்களாகவே

இருக்கவிட்டு விட்டு அரசியலுக்கு நிச்சயம்

முழுக்குப் போட்டுவிடுவார்..


அதன் காரணமாகவே தன் இரசிகர்கள்

யாரையும் ஒருங்கிணைப்பாளராகவோ

ஆலோசகராகவோ நியமிக்காது சில நூறு

பேருக்கு மட்டும் தெரிந்தவர்களை அந்தப்

பதவிகளில் சாமர்த்தியமாக நியமித்திருக்கிறார்.


இந்த விசயம் அவர்களுக்குத் தெரியாததில்லை

அவர்களைப் பொருத்தவரை அவர்களுக்கு முன்னால்

ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருக்கும்

கண்கொள்ளாக் காட்சியினை வாழ்வில் 

ஒருமுறை பார்த்த திருப்தி ஒன்றே 

அவர்களுக்குப் போதும்

ஆம் அதுவே அவர்கள் வாழ்நாள் சாதனை

ஆகிப் போகும்.


(ஒரு வகையில் புரட்சித் தலைவருடன் 

தோழர் கல்யாணசுந்தரம்

அவர்கள் அனுபவித்த சுகத்தைப் போல )


மற்றபடி இரஜினி அவர்கள் அரசியல் கட்சித்

துவங்குவதால் தமிழக அரசியலில் பெரும்

மாறுதல் ஏதும் ஏற்பட்டு விடப் போவதில்லை

அது அவருக்கும் தெரியும்...


அவர் வருகையால் சில லட்சம் ஓட்டுகள்

இடம் மாறி சில கணக்குகள் மாறும்.


கொள்கை கூட்டணி என சொல்லிக் கொண்டு

தான் எதிர்பார்த்தது கிடைக்காத கட்சிகள் சில

இருந்த இடம் விட்டு மாறும்...ஆம் நிறம் மாறும்


தன்னை இயக்குபவர்கள் எதிர்பார்ப்புக்கு

ஏற்றார்ப்போல இந்த மாறுதல்களுக்கெல்லாம்

தான் அரசியல் கட்சி ஆரம்பிப்பதன் மூலம்

அவரே முழு முதற்காரணமாய் இருந்துவிட்டு...

...

தான் எவ்வித மாறுதலும் அடையாது...


ஆம் கிரியா ஊக்கிபோல்..பழைய இரஜினியாய்

இயமலைக்கும்...பண்ணைவீட்டுக்கும்...

ஸ்டுடியோவுக்கும்..இடையிடையே பயணித்தபடி...

 

இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக

முக்கியப் பிரச்சனைகளுக்கு சிறு சிறு

சுவாரஸ்யப்பேட்டிக் கொடுத்துக் கொண்டும்

அதன் காரணமாக தன் பிராண்ட் வேல்யூ

குறைந்துவிடாது சினிமாவில் தொடர்வார்

என்பதே என் கருத்து...


ஆம் இரஜினி ஒரு கிரியா ஊக்கி மட்டுமே

என்பது என் ஆணித்தரமான கருத்து...

4 comments:

ஸ்ரீராம். said...

காலங்கள் கடந்து செல்வதில் நிறைய விஷயங்கள் மதிப்பிழந்து விடுகின்றன.

கரந்தை ஜெயக்குமார் said...

இருப்பைக் காட்டிக் கொள்வதற்காக

முக்கியப் பிரச்சனைகளுக்கு சிறு சிறு

சுவாரஸ்யப்பேட்டிக் கொடுத்துக் கொண்டும்

அதன் காரணமாக தன் பிராண்ட் வேல்யூ

குறைந்துவிடாது சினிமாவில் தொடர்வார்

என்பதே என் கருத்து...

உண்மை
நோக்கம் வணிகம்

திண்டுக்கல் தனபாலன் said...

25 வருடங்களாக... ம்...

அவரின் வெறியர்களே அரசியல் வேண்டாம் என்கிறார்கள்...!

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான அலசல். விதம் விதமாக அரசியல் விளையாட்டுக்கள் இங்கே நடத்தப்படுகின்றன. இதுவும் அப்படியே.

Post a Comment