Friday, May 27, 2022

தேனி இரயில் நினைவுகள்..(உறவுகள்.)

 என்பதின் துவக்கம் அப்போது நான்  உசிலம்பட்டியில் வேலைபார்த்துக் கொண்டிருந்தேன்.இன்றைக்கும் அனறைக்கும் காலக்கணக்கில்

முப்பது ஆண்டுகள்தான் இடைவெளி என்றாலும் கூட
உண்மையில் இன்றைய உசிலம்பட்டிக்கு அனறைய
உசிலம்பட்டிக்கும் அனைத்து நிலைகளிலும்
ஒரு நூற்றாண்டு வித்தியாசம் இருக்கும்

தாலுகாவாக உசிலம்பட்டியை தரம் உயர்த்திஇருந்தார்களே ஒழிய ஊழியர்கள் அங்கு தங்கிவேலை பார்ப்பதற்குரிய எந்த ஒரு வசதி வாய்ப்பும்
இருக்காது.வீடுகள் வாடகைக்கு இருக்காதுஇருந்தாலும் கழிப்பறை வசதி இருக்காதுநல்ல ஹோட்டலகள் இருக்காது.

உயர் அதிகாரிகள்யாரும் ஆய்வுக்கு வந்தால் கூட மதியம் திரும்பி
மதுரைக்கோஅல்லதுதேனிக்கோசாப்பாட்டுக்குசென்றுவிடுவார்கள்,
மொத்தத்தில் அரசு பணியாளகளைப்பொருத்தமட்டில் அனைத்து துறைகளிலும் அதைஒரு தண்டணை ஏரியாவாகத்தான் வைத்திருந்தார்கள்

எனவே அங்கு வேலை பார்க்கும் ஊழியர்களும்பொதுமக்களின் ஒத்துழைப்பு அதிகம் இருக்காதுஎன்பதாலும் மாறுதல் என்பது முயன்றுபெற்றால்தானே ஒழியஅவர்களாகமாற்றமாட்டார்கள்என்பதாலும்கொஞ்சம்
தெனாவெட்டாகத்தான்வேலை பார்ப்பார்கள்

அலுவகப் பணி நேரம்குறித்தெல்லாம் அதிகம் அலட்டிக் கொள்ளமாட்டர்கள்
.
அவர்களுக்கெல்லாம் ஏதுவாக வித்தியாசமாக
அந்த புகைவண்டியும் இருந்தது

மதுரையில் இருந்து போடிக்குச் செல்லும்படியாகமதுரை நிலையத்தில் காலை ஒன்பது மணிக்குஒரு புகைவண்டி கிளம்பும்.அந்த வழித்தடத்தில்
அது ஒன்றுதான்பயணிகள் வண்டி.

அது பல்கலைக் கழக மாணவர்கள் வசதிக்காகஅவர்கள் நேரத்திற்கு ஏற்றார்ப்போல புறப்படும்அதில் சென்றால உசிலம்பட்டி பணிக்கு செல்பவர்களுக்குகொஞ்சம் தாமதமாகத்தான் போகும்

ரயில் நிலையத்தில் இறங்கி அலுவலகம் வயல்வெளியில்நடந்துபோய்ச் சேர எப்படியும் தினமும் ஒருமணி நேரம்தாமதமாகத்தான் ஆகும் என்றாலும் அந்த ஊர் மக்களும்அதிகாரிகளும் அதற்கு அனுசரித்து இருக்க
பழகிக் கொண்டார்கள்.

அதைப் போல மாலையிலும்ஐந்து மணிக்கு அலுவலக்ம் முடியும் என்றாலும்
நாலு மணிக்கு அதே புகைவண்டி  வந்து விடும் என்பதாலும்
எல்லோரும் மூன்று நாற்பதிற்கே  அலுவலக்ம் விட்டுபுறப்பட்டுவிடுவார்கள்.இது அங்கு பழகிப் போன  ஒன்று

எல்லோரும் புகைவண்டிக்கு பாஸ் என்பதாலும்தினமும்செல்பவர்கள் என்பதாலும் மாணவர்களும் சரிஅலுவலகப்பணியாளர்களும் சரி.தினமுமே
ஒரு குறிப்பிட்ட பெட்டியில்தான்ஏறிக் கொள்வார்கள்.மாறி ஏறமாட்டார்கள்

கல்லூரி மாணவர்கள் வண்டியில் பாட்டும் கூத்தும்தூள் பறக்கும் என்றால் ஊழியர்கள் பெட்டியில்செட்டு செட்டாகசீட்டுக் கச்சேரி நடக்கும்.
ஒன்பது மணிக்கு ஏறி சீட்டில் அமர்ந்தால்உசிலம்பட்டி வரும் வரையில்
வேறு எதிலும் கவனம் போகாது

இப்படிஒருநாள்புகைவண்டிகிளம்பிக்கொண்டிருக்கையில்
எதிர்பாராதவிதமாகஎங்கள் பெட்டியில்  மாணவர்கள் கூட்டம்
கொஞ்சம் அதிகமாகத் தெரிந்தது.எங்களுக்கு காரணம் தெரியவில்லை
பல்கலைகழகம்வரும்வரையில்நாங்களும்கண்டுகொள்ளவில்லை

பல்கலைக் கழகத்தில்கூட்டம் இறங்கியதும் எனக்கு எதிரில் இருந்த
நண்பர் சீட்டு விளையாட்டில் அதிகம்கவனம் செலுத்தாமல்முன்புறம் ஒரே பார்வையாகப்பார்ப்பதுவும் அடிக்கடி சீட்டைக் கவிழ்த்துவிட்டு
எதையோ வெறித்துப் பார்ப்பதுமாக இருந்தார்அப்படி என்னதான் இருக்கிறது என நான் முழுவதுமாகத் திரும்பிப் பார்க்கையில்
அங்கே ஒரு இளம் வயது பெண் இருந்தாள்

முதல் பார்வையிலேயே அவள் அப்படிப்பட்ட பெண்தான் எனத் தெரிந்த போதும் வயதும் முக  லட்சணமும்எதோ ஒரு தவிர்க்க முடியாத சூழலில்
அப்படிஆகிஇருக்கக்கூடும்என்கிறஎண்ணத்தைபார்ப்பவர்களுக்கு
தோன்றும்படியாகத்தான்அவள்  இருந்தாள்

எங்கள் பெட்டியில் அதிகமான மாணவர்கள் இருந்ததுஏன் எனவும்எனது எதிர்  இருக்கை நண்பர் ஏன் அடிக்கடிஅந்தப் பார்வை பார்த்தார் என்பதும் எனக்குஇப்போதுதான் புரிந்தது நாங்கள் தொடர்ந்துஆடத்துவங்க
எதிர் சீட்டு நண்பரோ எழுந்து போய்அந்தப் பெண் அருகிலேயே மிக நெருக்கமாகஅமர்ந்து கொண்டுகொஞ்சம் சில்மிசம்செய்யத் துவங்கிவிட்டார். எனக்கு மிகவும் சங்கடமாகப் போய்விட்டது

சீட் ஆட்டத்தின் இடையில் பொழுதுபோகஅனைவரும்பல்வேறு விஷயங்களைப் பற்றிகாரசாரமாக விவாதித்து வருவோம்
சமூக அவலங்களும்  அரசியல்வாதிகளின்அசிங்கமானபக்கங்கள் குறித்தெல்லாம் மிக ஆழமாக ஆராய்ந்து பேசுவோம்

இவையெல்லாம் குறித்து அந்த எதிர் சீட் நண்பர்எல்லோரையும் விட மிக தெளிவாகவும்ஆணித்தரமாகவும்உணர்வு பூர்வமாகவும் பேசுவார்.
நாங்கள் எல்லாம் அவர்பேச்சில் உள்ளதார்மீகக் கோபம் குறித்து  அவர் இல்லாத போது பெருமையாகப் பேசிக் கொள்வோம்.
இப்போது அவரது செய்கைஎன்னுள் என்னவோ செய்தது.
சந்தர்ப்பம்கிடைக்காத வரையில்தான் நல்லவர்கள் என்றால்
அது எந்த வகையில் சேர்த்தி ?

நான்சடாரென எழுந்து அந்தப் பெண் அருகில் போனேன்
அவள் முகத் தளர்ச்சி நிச்சயம் சாப்பிட்டு இருக்கமாட்டாள்
எனத் தோன்றியது

அவள் பெயரைக் கேட்டுவிட்டு "சாப்பிட்டாயா " என்றேன்

"இல்லையண்ணே நேற்று பகலில் சாப்பிட்டது " என்றாள்
"எங்கே போகிறாய் " என்றேன்

" போடி " என்றாள்

உடனடியாக என் இருக்கைக்கு வந்து என் பையில் இருந்தமூன்று அடுக்கு டிபன் பாக்ஸ் மற்றும் தண்ணீர் பாட்டிலைஅவளிடம் கொடுத்து
"இன்னும்  இன்னும் இருபது நிமிடத்தில்உசிலம்பட்டி வந்து விடும் நாங்கள் இறங்கிவிடுவோம்அதற்குள் சாப்பிட்டு விட்டு டிபன் பாக்ஸை
கழுவிக் கொடுத்துவிடு"எனச் சொல்லிக் கொடுத்தேன்.

அவள் பசியின் காரணமோ என்னவோசம்பிரதாயத்துக் கூட மறுக்கவில்லை.எனக்கும்  சாப்பிடக்கொடுத்ததின் மூலம் நண்பனின் சில்மிஷ சேஷ்டைகளைசெயய முடியாமல் போகச் செய்யவும் பசியில் இருந்த ஒருபெண்ணுக்கு உதவிய திருப்தியும் கிடைக்க இருக்கையில்
வந்து அமர்ந்து விட்டேன்.நண்பனும் எரிச்சலுடன் என்எதிரிலேயே வந்து விட்டான் .அந்தப் பெண்ணும்அவதி அவதியாகச் சாப்பிட்டுவிட்டு  நாங்கள்
இறங்குவதற்குமுன்பாகவே  டிபன் பாக்ஸைமிக நன்றாகக் கழுவியும் கொடுத்துவிட்டுஎங்கள் அருகிலேயே அமர்ந்து கொண்டாள்

நாங்கள் இறங்க்கும் வரை ஏதோ பெரிய உதவியைச்
செய்தது போலநிறையத் தடவை நன்றி சொன்னாள்.

நாங்கள் இறங்கி நடக்கத் துவஙகஎல்லோருக்கும் ஜன்னலோரம் உட்கார்ந்து நாங்கள்மறைகிறவரை கைகாட்டிக் கொண்டே இருந்தாள்
அதற்குப் பின் நான் அவளை என்றும் நினைத்ததும் இல்லை
எங்கும் பார்த்ததும் இல்லை

ஒரு ஐந்து ஆண்டுகளுக்குப் பின்னால் ஒரு நாள்அரசு ஆஸ்பத்திரியில் எனது உறவினர் ஒருவர்உடல் நலமில்லாமல்சேர்த்திருக்க அவரைப் பார்த்து
 நலம் விசாரித்துவிட்டுஊருக்குச் செல்வதற்காகபஸ் ஸ்டாப்பில் நின்று கொண்டிருக்கையில்ஒரு கைக் குழந்தையுடன் யாரோ ஒரு பெண் என்னை
முறைத்துப் பார்த்துக் கொண்டிருப்பதைப் போல இருந்தது
எனக்கு உண்மையில் யாரெனத் தெரியவில்லை

சிறிது நேரத்தில் அந்தப் பெண்ணே என்னருகில் வந்து "என்னைத் தெரிகிறதா " என்றாள்

உண்மையில் அதுவரை எனக்குத் தெரியவில்லை
பின் அவளே "உசிலம்பட்டி ட்ரெய்னில் ஒரு நாள்
சாப்பாடு கொடுத்தீர்களே ஞாபகம் இருக்கா அண்ணே " என்றாள்

அவளா இவள் என எனக்கு மிகவும் ஆச்சரியமாக இருந்தது
ஒரு நல்ல  ந்டுத்தரகுடும்பத்தைச் சேர்ந்த பெண் போலவே
 முற்றாக  மாறி இருந்தாள் .குழந்தையும் மிக அழகாக இருந்தது

பின் அவளே தொடர்ந்து பேசினாள்
"அன்னைக்கு அப்புறம் போடி போய் கொஞ்ச நாளிலேகேஸிலே மாட்டி கோர்ட்டுக்கு வந்தேன்அப்போஇவங்க அப்பாவும் ஏதோ செய்யாத குத்தத்திலேபிடிபட்டு கோர்ட்டுக்கு வந்திருந்தாங்க
இரண்டு  மூன்று முறை ஒரே நாளில் வாய்தா வந்தது
அடிக்கடி பாக்கிறது நாள இரண்டு பேரும் மனசு விட்டுபேசிக்கிட்டோம்.அப்புறம் அவர்தான் ஒரு நாள்
நாம இரண்டு பேரும் சேர்ந்து இருப்போமான்னு கேட்டாங்க
எனக்கும் ஒரு ஆதரவு வேண்டி இருந்ததுநானும்  சரின்னுசொன்னேன்.

வீரபாண்டி கோவிலிலேஇந்தத் தாலியைக் கட்டினாங்க.இப்ப சின்னமனூரில்
ரோட்டோரம் ஒரு டீக்கடை போட்டு நல்லா இருக்கோம்
வந்தா அவசியம் வாங்க "என்றாள்

அவள்சொல்வதைகேட்கக்கேட்கஎனக்குமிகுந்தசந்தோஷமாக இருந்தது.
ஆனாலும் நம்மிடம் ஏன்இவ்வளவையும் மன்ம் திறந்து கொட்டுகிறாள் என
ஆச்சரியமாகவும் இருந்தது

பின் அவளே கண்களில் லேசாகக் கசிய்த் துவங்கியநீரைத் துடைத்தபடி "எனக்கென்னவோ என்னைக்காவதுஉங்களைப் பாத்து இதையெல்லாம் சொல்லனும்னுதோணிச்சு சொன்னா நீங்க ரொம்ப
சந்தோஷப் படுவீங்கன்னு தோணிச்சு இரண்டு மூணூதடவை
ட்ரெயினுக்கு கூட வந்து பாத்தேன் " என்றாள்

எனக்கும் மனதில் லேசாக நீர் கசியத் துவங்கியது

ஒரு நாள் அன்புடன் கொடுத்த சாப்பாட்டைத் தவிரநானேதும் அவளுக்கு செய்தததில்லை.அது அவளுள்இத்தனை பெரிய பாதிப்பினை ஏற்படுத்தி இருக்கிறதென்றால்அவள் அரவணைப்பு இன்றி  அது நாள்வரை
எப்படி அவதிப்படிருப்பாள் என  எண்ண எண்ண
என் கண்களும் லேசாக கலங்கத் துவங்கின

பேச்சை மாற்றும் நோக்கில் "பையனுக்கு என்ன பெயர் "என்றேன்

"அவங்க தாத்தா பேர்தான் வைத்திருக்கிறோம்.விருமாண்டி "என்றாள்

"சரி விருமாண்டிக்கு பிஸ்கெட் எதுவும் வாங்கிக் கொடு "என
கையில் கிடைத்த ரூபாயை எடுத்துக் கொடுத்தேன்

வெகு நேரம் வாங்க மறுத்து பின் வாங்கி கொண்டாள்
பின் தன் பையனின் இரு கைகளையும் சேர்த்துப் பிடித்து
"சாருக்கு வணக்கம் சொல்லு " என்றாள்

"சாரு என்ன சாரு மாமான்னு சொல்லு " என்றேன்

என்ன நினைத்தலோ இடுப்பில் சேலையை
இழுத்துச் சொருகிக் கொண்டு பையனை என் காலடியில் போட்டு
அவளும் தரையில் வீழ்ந்து கும்பிட ஆரம்பித்துவிட்டாள்

நான் விக்கித்துப் போனேன்

பஸ் ஸ்டாப்பில் நின்றிருந்த கூட்டம் எங்களை
ஒருமாதிரி பார்க்கத் துவங்கியது

அவர்கள் கண்களில்  மட்டும்  ஏனோ இவர்கள்
என்ன உறவாயிருக்கும்
என்கிற கேள்வி ஆறாய்ப் பெருகிக்கொண்டிருந்தது

7 comments:

bandhu said...

எவ்வளவு பெரிய காரியம் செய்திருக்கிறீர்கள்! அந்த பெண்ணின் மன நிலையை உணரமுடிகிறது. அந்த நேரத்தில் நீங்கள் செய்த உதவி, மிகப் பெரிய ஒன்று. எல்லாவற்றையும் விட, அந்த நேரத்தில் அவளை நீங்கள் ஒரு மனுஷியாக நடத்தியது மிகப்பெரிய விஷயம்!

கண்கள் குளமானது!

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

நல்ல செயல் செய்துள்ளீர்கள். பெண்களை மதிக்கும் நல்ல மனதோடு அந்தப் பெண்ணின் அப்போதைய தேவையறிந்து நீங்கள் அந்த சமயத்தில் செய்த உதவி அவளை நல்வழிப்படுத்தி அவளுக்கு நல்லதொரு வாழ்க்கையை தந்திருப்பது கண்டு படிக்கும் போதே என் கண்களும் குளமாயின. பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

நெல்லைத் தமிழன் said...

சின்ன விஷயம் எவ்வளவு பெரிய மாற்றத்தை ஒவ்வொருவரிடத்தில் ஏற்படுத்துகிறது.. பாராட்டுகள்

Anonymous said...

அந்த நாள் ஞாபகம் வந்ததோ நண்பரே நண்பரே

ஸ்ரீராம். said...

நெகிழ்வு.

வெங்கட் நாகராஜ் said...

நெகிழ்ச்சி. மீள் பதிவு தானே? முன்னரே படித்திருக்கிறேன்.

மாதேவி said...

நீங்கள் செய்த உதவி பெரியது. அதை மறக்காமல் இருக்கும் அப் பெண்ணும் உயர்ந்து நிற்கிறாள்.

Post a Comment