Saturday, June 25, 2022

"பகுத்து அறிய வேண்டி.."

 ❇️⚡⭕⭕


*⭕"மதுவை" ஊற்றிக்கொடுக்கும் வேலைக்கு டிகிரி படிப்பை தகுதியாக வைத்தபோது உங்களுக்கு ரோஷம் மானம் எதுவும் பொ த்துக்கொண்டு வரவில்லை...!*


ஒப்பந்த அடிப்படையில் கல்லூரி விரிவுரையாளர் பணிக்கு வெறும் 15000 சம்பளத்திற்கு Phd படிப்பை தகுதியாக வைத்தபோது உங்களுக்கு வெட்கம் சூடு சொரணை எதுவுமே வரவில்லை


ஒப்பந்த அடிப்படையில் 10000 ம் சம்பளத்திற்கு பாலிடெக்னிக் ஆசிரியர் வேலைக்கு ஆள் எடுத்தபோது எரியவில்லை. 


பென்ஷன் திட்டத்தை ரத்து செய்தபோது வருத்தப்படவில்லை நீங்கள்


ஓய்வு வயதை கடந்தும் சிலருக்கு பணிநீட்டிப்பு செய்தபோது எரியவில்லை. 


தமிழகத்தில்  வேலைவாய்ப்பு அலுவலகத்தில் பதிவு செய்த பட்டதாரிகளே 1 கோடி பேருக்குமேல் வேலையின்றி இருப்பதை அறிந்தபோதும் எரியவில்லை.


வெறும் 10000 ம் சம்பளத்திற்கு இளைஞர்களை கோயில் பூசாரி வேலைக்கு அனுப்பும்போது எரியவில்லை.


ஆனால், 21 வயதுக்குள்ளாகவே ஒரு இளைஞனை மாதம் 30000 ம் ஊதியம் பெறவைத்து, 4 ஆண்டு முடிவில் 21 லட்சத்திற்கு அதிபதியாக்கி, உடல் மற்றும் மனவலிமையோடு வாழ்வின் அடுத்தகட்டத்திற்கு முன்னெடுத்துச் செல்லக்கூடிய அக்னிபத் திட்டம் வரப்போகிறது என்றதுமே உங்களின் அடிவயிறெல்லாம் பற்றி எரிகிறதென்றால் நீங்கள்தான் இந்த நாட்டின் முதல் எதிரி.


உங்களுக்கு படித்தவர்களுக்கெல்லாம் வேலை கிடைக்கவில்லை என்றாலும் கவலையில்லை.


டிகிரி முடித்தும் வேலை கிடைக்கவில்லையே என்று மாதம் 3000 ம் ரூபாய்க்கு உதவித்தொகை விண்ணப்பத்தை பூர்த்திசெய்து கொண்டிருப்பவனைப் பற்றியும் கவலையில்லை.


BE படித்தும் கரும்பு_வெட்டும் கூலியாக போகும் இளைஞனைப்பற்றிய கவலையும் இல்லை.


படித்த படிப்புக்கேற்ற வேலையின்றி வறுமையில் தற்கொலை செய்துகொள்ளும் இளைஞர்களைப் பற்றியும் கவலையில்லை.


ஆனால் தேசப்பற்று மிக்க வீரர்களாக பொருளாதார வலிமையோடு வரும் அக்னிவீரர்களை பற்றி நினைக்கும்போதே உங்களுக்கு கவலை தொற்றிக்கொள்கிறது என்றால், உங்களின் இளைஞர்கள் மீதான அக்கறை தெரியவில்லை. உங்களுக்குள் உண்டான பயமே தெரிகிறது.


நீங்கள் எதிர்பார்க்கும் ஆமாம்சாமி இளைஞர்களாக அக்னிவீரர்கள் ஒருபோதும் இருக்கமாட்டார்கள். உங்களுக்காக அவர்கள் கொடி  பிடிக்கமாட்டார்கள். உங்களுக்காக அவர்கள் கலவரம் செய்யமாட்டார்கள்...


*அக்னிபாத்_திட்டத்தை வரவேற்போம்..🇮🇳💪💪*

6 comments:

ஸ்ரீராம். said...

இதுவும் ஒரு பார்வை.

நெல்லைத்தமிழன் said...

இந்த மாதிரி பார்வைகளையே வெறுக்கும் மங்கிகள் கூட்டம் இங்கு அதிகமே

திண்டுக்கல் தனபாலன் said...

கலவரத்தை ஏற்படுத்தி அதற்கு பயன்படுத்த செய்யும் முன்னேற்பாடு...

Yarlpavanan said...

அருமையான வழிகாட்டல்

மாதேவி said...

'உங்களுக்குள் உண்டான பயமே தெரிகிறது ' நன்றாக சொன்னீர்கள் .

துரை செல்வராஜூ said...

//உங்களுக்காக அவர்கள் கொடி பிடிக்கமாட்டார்கள். உங்களுக்காக அவர்கள் கலவரம் செய்யமாட்டார்கள்..//

Post a Comment