Monday, October 10, 2022

அன்றும் இன்றும்

அன்று

பசிக்கு உணவின்றி

ஒவ்வொரு பொழுதும்

ஏங்கி ஏங்கித் தவித்தவர்களே

சபிக்கப்பட்டவனாய்த் தெரிந்தார்கள்


இன்று

உண்ண உணவிருந்தும்

உண்ணமுடியாது

பார்த்துப் பார்த்துத் தவிப்பவர்களே

பாவியாய்த் தெரிகிறார்கள்


அன்று

அதீதத் திறனிருந்தும்

பதவி அடைய முடியாது

பரிதவித்துப் புலம்பியவர்களே

பரிதாபமாய்த் தெரிந்தார்கள்


இன்று

போதியத் திறனுமின்றி

எதனாலோ பதவியடைந்தவர்கள்

அன்றாடம் படும்பாடே

பரிதாபமாய்ப் படுகிறது


அன்று

அன்றாட வாழ்வுக்காக

ஒவ்வொரு நாளும்

செத்துத் செத்துப் பிழைத்தவர்களே

பாவியாய்த் தெரிந்தார்கள்


இன்று

மரணப் படுக்கையில்

ஒவ்வொரு நொடியும்

சாகமுடியாது பிழைத்திருப்வர்களே..

பாவியாய்ப் படுகிறான். 

1 comment:

Post a Comment