Thursday, November 10, 2022

அழகு..

 


பூமிக்கு நீர்நதி அழகு
பூவைக்கு நளினமே அழகு
சாமிக்கு மௌனமே அழகு
செல்வர்க்கு கருணையே அழகு

மலருக்கு வண்ணமே அழகு
மன்னருக்கு வீரமே அழகு
நிலவுக்கு வெண்பனி அழகு
நினைவுக்கு நல்லதே அழகு

வயலுக்கு விளைச்சலேஅழகு
வார்த்தைக்கு வாய்மையே அழகு
யுவதிக்குப் பருவமே அழகு
தமிழுக்குத் தொன்மையே அழகு

முதுமைக்கு நிதானமே அழகு
முயற்சிக்கு தொடரலே அழகு
பதுமைக்கு இருப்பிடம் அழகு
புலமைக்கு சொற்திறம் அழகு

வீணைக்கு நாதமே அழகு
விருந்துக்கு இன்முகம் அழகு
யானைக்குத் தந்தமே அழகு
கவிதைக்குச் சந்தமே அழகு

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

ஆகா...!

கரந்தை ஜெயக்குமார் said...

அருமை
வலைப்பூவிற்குத்
தங்கள் ‘கவி அழகு

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

பதிவு அருமை. தங்கள் எண்ணங்களால் விளைந்த இக்கவிதையும் மிக அழகாக இருக்கிறது. ஒவ்வொரு வரிகளையும் ரசித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment