Friday, November 4, 2022

வாழையடி வாழையாய்...

 முட்டாள் தொண்டர்களுக்கு

தலைவான அரைமுட்டாள்..


தொண்டர்கள் தொடர்ந்து

முட்டாளாக இருப்பதுவே

தன் தலைமைக்குப் பாதுகாப்பு

என்பதில் கவனமாகவே இருக்கிறான்..


அதன் காரணாமாகவே

காலங்காலமாய்..


அரைமுட்டாளாக

அவனும்...


முழுமுட்டாள்களாக

அவனைத் தொடரும் தொண்டர்களும்.....


புத்திசாலி தொண்டர்களுக்கு

தலைவனான அதீத புத்திசாலி...


தொண்டர்கள் தொடர்ந்து

தகுதி வளர்ப்பதுவே

தன் தகுதி வளர்க்கத் தூண்டுகோல்

என்பதில் கருத்தாய் இருக்கிறான்


அதன் காரணமாகவே

காலங்காலமாய்....


அதீத புத்திசாலியாய்

அவனும்...


புத்திசாலிகளாய்

அவனைத் தொடரும் தொண்டர்களும்.

2 comments:

Post a Comment