Thursday, December 22, 2022

கணித நாளில்...

 



*இன்றைய சிந்தனை*

.......................................................

*"கணிதத்தின் அடிப்படை மெய்யியல்''*

..................................

தலைசிறந்த  மெய்யியல் கற்றறிந்தவரும், கணிதப் பேராசிரியராகவும் சமூகப் போராளியாகவும் திகழ்ந்த பெர்ட்ரண்ட் ரஸ்ஸல் கூறினார்:  


''கணிதம் உண்மையைக் கூறுவது மட்டுமல்ல, அளவிலா அழகு படைத்தது, ஓர் ஒப்புயர்வற்ற சிற்பம் போலக் கணிதம் அழகுமிக்கது." - என்று


மற்றொரு கணித அறிஞர் ஹார்டி கூறினார்: 


'கணிதம் அழகின் உருவம். அழகிலா கணிதம் என்று ஒன்றில்லை என்று...!"


கணிதம் என்பது எல்லோருக்கும் பொதுவானதொரு மொழியாகும்...!


"நாம் அன்றாட வாழ்வில் சந்திப்பவர்களின் நடவடிக்கைகளை சற்று ஆராய்ந்து பார்த்தால் அவர்கள் ஏதோ ஒன்றில் திறைமைசாலியாகவே, அல்லது., ஏதேனும் ஒரு கலையில் சிறிதளவாயினும் திறைமையாக இருப்பதை நன்கு காணலாம்..


ஆனால், பொதுவாக கணிதக் கலையானது எல்லோருடைய அன்றாட வாழ்வில் இணைபிரியாதாக இருக்கிறது...!


கணிதத்தின் அடிப்படைத் தத்துவமானது...


+ கூட்டல், - கழித்தல், × பெருக்கல், % வகுத்தல்

இந்த நான்கு மெய்யியலை விழிப்புடன் பயன்படுத்த

வேண்டும்...!


அப்படிப் பயன்படுத்தினால் வாழ்க்கையில் துன்பத்தை எட்டாக் கனியாகவே வைத்துக் கொள்ளலாம்...


வாழ்வில் அன்பை கூட்டிக் கொள்ள வேண்டும்...!

அந்த (+)கூட்டல்கள் ஈட்டித் தரும் மகிழ்ச்சியை நமக்கு...


வாழ்வில் நட்புகளைப் பெருக்கிக் கொள்ள வேண்டும்...!

அந்த (× )பெருக்கல்கள் நம் வாழ்வு முடிந்த பின்பும் வாழும் அவர்கள் மனதில்...


வாழ்வில் வாழும் முறைகளை (÷ )வகுத்துக் கொள்ள வேண்டும்...!

அந்த வகுத்தல்கள் நம் வாழ்வை வளர்பிறை ஆக்கும்...


வாழ்வில் சோகத்தை கழித்துக் கொள்ள வேண்டும்...!

அந்த (-)கழித்தல்கள் நம்மை அழித்தல்கள் இல்லாத ஓவியமாய்க் காட்டும்...


வாழும் வாழ்வினை நிகராக்கிக்(சமம்) கொள்ள வேண்டும்...!

(=) அது வேறுபாடு இல்லாத சமூகம் வேரில்

கிளை தழைக்க அது பயன்படும்...


வாழ்வின் ஏற்ற இறக்கங்களைக் கண்டுகொள்ள வேண்டும்...!

(< >) அது நம்மை வார்த்தெடுத்த பொன்னாய்

மாற்றியமைக்கும்...


வாழ்வின் குறைநிறைகளைக் கண்டு அறிந்து கொள்ள வேண்டும்..!

(+-)அது வசந்தமாய், நம் வாழ்வு மாற அது வகை செய்யும்...


*ஆம் நண்பர்களே...!*


மேலே கண்ட கணித இலக்கணத்தை நன்கு திட்டமிட்டு வாழப் பழகிக் கொண்டால், எந்நாளும் பொன்நாளாக மாற்றிக் கொள்ளலாம்...


ஆக, கணிதம் எனும் அழகினை வழிபடுங்கள். கணிதம் இனிக்கும், ஆனால் தெவிட்டாது...


நன்றி...தகவல் உலா..

1 comment:

Post a Comment