Sunday, February 12, 2023

சுருக்கமாக எனினும் நறுக்..

 (அர்த்தமுள்ள வாழ்க்கையை அழகாகச் சொல்கிறது இந்தச் சிறிய கட்டுரை)


நீங்கள் ஒரு கப் காபியைக் கையில் வைத்திருக்கிறீர்கள்.


_அந்த நேரத்தில் அங்கு வரும் ஒருவர் உங்கள் மீது மோதி, உங்கள் கைகளைத் தட்டி விடுகிறார். காபி வெளியே சிதறிவிடுகிறது._


_நீங்கள் ஏன் காபியைச் சிந்தினீர்கள்?_


_“ஒருவர் தட்டிவிட்டதால் காபி சிந்திவிட்டது” என்பது உங்கள் பதிலாக இருக்கலாம்._


_ஆனால் அந்தப் பதில் ஒருவகையில் தவறானது._ _அப்படியென்றால் என்ன காரணம்?_


உங்கள் கப்பில் காபி இருந்தது. அதனால் காபி சிதறிவிட்டது. _ஒருவேளை அந்தக் கப்பில் தேநீர் இருந்திருக்குமானால் தேநீர்தான் சிதறியிருக்கும்._

_கப்பின் உள்ளே என்ன இருக்கிறதோ அதுதானே சிதறும்._


_இதை வாழ்க்கையில் பொருத்திப் பார்ப்போம்._ 


_வெளியிலிருந்து ஏதேனும் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம் உள்ளே என்ன இருக்கிறதோ அதுவே வெளியே சிந்திச் சிதறும்._

_இதைச் சொல்வது எளிது, கடைப்பிடிப்பது கடினம்தான்._ 

_ஆனாலும் நம்மால் முடிந்தவரை முயற்சித்துப் பார்க்கலாம்._


_வாழ்க்கையின் கடின நிகழ்வுகள் நம்மை அசைத்துப் பார்க்கும்போது, நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறவேண்டியது என்னென்ன?_


_கோபம், மோசமான வார்த்தைகள், கசப்புணர்ச்சி, பயம் இவைகளா? நிச்சயம் இல்லை._


_வாழ்க்கை நமக்கான கோப்பையை நம்மிடம் தந்திருக்கிறது._ அதில் நன்றி, மன்னிப்பு, மகிழ்ச்சி, கருணை, அன்பு, இங்கிதமான வார்த்தைகள்…

_இவற்றை நிரப்பி வைத்திருந்தால், எந்த கடின சூழல் நம்மை அசைத்துப் பார்க்கும்போதும் நம்மிடமிருந்து வெளியே சிந்திச் சிதறுவது எல்லாம் நல்லவையாகத்தானே இருக்கும்!_


நல்லவற்றை நமக்குள் 

நிரப்பி வைப்போம்!

_வாழ்க்கை நமக்கு  கிடைத்த வரம்... அதை அனுபவித்து வாழ்வோம்..

2 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

எடுத்துக்காட்டு வேறு விதமாக இருந்திருக்கலாம்... (வழியில் இருந்த பள்ளத்தால்...)

ஸ்ரீராம். said...

அருமை.

Post a Comment