Monday, February 13, 2023

இனியேனும் அளவுகோலை மாற்றாதிருப்போம்

 முன்பெல்லாம்

குடிகாரன் தீயவனாகத் தெரிந்தான்


இப்போது எல்லோரும் குடிப்பதால்

குடித்து கலாட்டா செய்பவன் மட்டுமே

தீயவனாகத் தெரிகிறான்


குடித்தும் அமைதியாக இருப்பவன்

நல்லவனாகத் தெரிகிறான்


எனவே இந்த நல்லவன் பட்டியலில்

குடிக்காதவனுக்கு இடமே இல்லை


முன்பெல்லாம்

கையூட்டுப் பெறுபவன் 

மோசமானவனாகத் தெரிந்தான்


இப்போது எல்லோரும் கையூட்டுப் பெறுவதால்

கையூட்டுப் பெற்றும் காரியம் முடிக்காதவனே

மோசமானவனாகத் தெரிகிறான்


கையூட்டுப் பெற்று காரியம் முடிப்பவன்

சிறந்த நிர்வாகி ஆகிப் போகிறான்


இந்தச் சிறந்தவன் பட்டியலில்

கையூட்டுப்பெறாதவனுக்கு வாய்ப்பே இல்லை


முன்பெல்லாம்

அரசியலில் ஊழல் செய்பவன் மட்டுமே

மோசமானவனாகத் தெரிந்தான்


இப்போது அரசியலுக்கு வருபவர்கள் எல்லாருமே

ஊழல் வாதிகளாக இருப்பதால்

பிடிபடுபவன் மட்டுமே

மோசமானவனாகத் தெரிகிறான்


பிடிபடாது ஊழல் செய்பவன்

அரசியல் சாணக்கியன் ஆகிப் போகிறான்


இந்த சாணக்கியன் பட்டியலில்

ஊழலற்ற அரசியவாதிக்கு சம்பந்தமே இல்லை


அளவுகோலை நிலையானதாக வைத்து

பொருட்களை எடைபோட்ட காலம் மாறி


பொருளுக்கு ஏற்றார்ப்போல

அளவுகோலை மாற்றும் நம் மனோபாவம்

தொடர்கிறவரையில்.......


இனி வரும்காலங்களில்

குடிக்காதவன் தீயவனாகிப் போகவும்

கையூட்டுப் பெறாதவன் மோசமானவனாகிப் போகவும்

ஊழல் செய்யாதவன் அரசியலுக்கு

இலாயக்கற்றுப் போகவுமே

அதிகச் சாத்தியம் ....


எனவே இனியேனும்

அளவுகோலை நிலையானதாகக் கொள்வோம்


பொருட்களை இனியேனும்

அளவுகோலை மாற்றாது எடை போடப் பயில்வோம்


6 comments:

நெல்லைத் தமிழன் said...

சிகரெட் குடிப்பவனுடன் சேர்ந்து நடக்காமலிருந்த (கல்லூரியில் படிக்கும்போது) அந்தக் காலம் நினைவுக்கு வருது. 'குடி'யா? அப்படிப் பட்ட அபூர்வ ஆட்களை, சமூகம் ஒரு மாதிரியாகப் பார்த்த காலம்.

Anonymous said...

நல்லவனாக வாழ்வதை விட, வல்லவனாக வாழ்வதே மேல்!

என்று ஏற்கனவே, பழ மொழி சொல்லி வச்சுட்டாங்க..

ஸ்ரீராம். said...

படிக்கப் படிக்க 'உண்மை... உண்மை' என்று தலை தானாய் ஆடுகிறது!

திண்டுக்கல் தனபாலன் said...

இப்படித்தான் இருக்கு... மாற்ற குறள் வழி மட்டுமே உண்டு...

Jayakumar Chandrasekaran said...

அளவுகோல் மாறுவது சகஜம். புலி மானைக் கொன்றால் அது உணவுக்காக. மனிதன் மானை கொன்றால் அது சட்டங்களுக்கு எதிர். இப்படி பல கூறலாம். நன்மை தீமை என்பது அவரவர் எண்ணங்களில் தான். 
Jayakumar

மாதேவி said...

நன்றாக சொன்னீர்கள் காலம் இப்படித்தான் இருக்கிறது.

Post a Comment