Monday, March 13, 2023

பெற்றோர்களின் கவனத்திற்கு...

அன்பார்ந்த பெற்றோர்களே!*


*உங்களுடைய பிள்ளைகளுக்கான பரீட்சை விரைவில் ஆரம்பமாகவுள்ளது.*


*பிள்ளைகள் சிறப்பாக பரீட்சையை எழுத வேண்டும் என்பதில் ஆர்வமாய் இருப்பீர்கள் என நம்புகின்றோம்.*


*எனினும் இந்த விஷயங்களையும் கவனத்திற் கொள்ளுமாறு பணிவாய்க் கேட்டுக் கொள்கின்றோம்.*


*தேர்வில் குறைந்த மதிப்பெண் எடுக்கும் மாணவர்களில்*

*ஒரு கலைஞன் இருப்பான்*


*அவனுக்கு கணிதம் தேவைப்படாது.* *அங்கே ஒரு தொழிலதிபர் இருப்பான்* *அவனுக்கு வரலாறு / இலக்கியம் முக்கியமில்லை.*


*ஒரு இசைஞானி இருப்பான்* *அவனுக்கு இரசாயனவியல் அவசியமிராது.*


*ஒரு விளையாட்டு வீரனிருப்பான்* *அவனது உடல் நலனே முக்கியமன்றி* *பெளதீகவியல் புள்ளி முக்கியமில்லை.*


*பரீட்சையில் அதிக மதிப்பெண் எடுத்தால் சிறந்த பிள்ளை..* 


*எடுக்காவிட்டால்  தரம் குறைந்த மாணவன என்று*


*தயவு செய்து அவர்களது தன்னம்பிக்கையை ஒருபோதும் பறித்து விடாதீர்கள்.*


*அவர்களுக்கு சொல்லுங்கள் இது வெறும் ஒரு பரீட்சை மட்டுமே.* 


*நீ வாழ்க்கையில் வெற்றி கொள்ள இதை விட பெரிய சவால்கள் நிறைய உள்ளன.*


*உன் மீதுள்ள என் அன்பு நீ பரீட்சையில் எடுக்கும் மதிப்பெண்ணை வைத்து தீர்மானிப்பதில்லை.*


*என்றும் நீ என் பிள்ளை என் உயிர். இப்படி சொல்லி பாருங்கள். பரீட்சையில் வெல்லாத உங்கள் பிள்ளை ஒரு நாள் உலகை வெல்வான்.*


*வெறுமனே ஒரு பரீட்சை, அதன் மதிப்பெண் உங்கள் பிள்ளையின் கனவை, திறமைகளை அழித்து விடக்கூடாது.*


*மருத்துவர்களும், பொறியாளர்களும் மட்டுமே உலகில் சிறந்தவர்கள், மகிழ்ச்சியாய் இருப்பவர்கள் என தயவு செய்து நினைக்காதீர்கள்.*

 

மாணவச் செல்வங்கள் அனைவருக்கும் எமது மனமார்ந்த வாழ்த்துகள்..

3 comments:

திண்டுக்கல் தனபாலன் said...

சிறப்பான அறிவுரை...

வெங்கட் நாகராஜ் said...

சிறப்பான வழிகாட்டல்..... பலருக்கும் தேவையானதும் கூட.

மாதேவி said...

நன்றாக எடுத்துச் சொன்னீர்கள். மாணவச் செல்வங்களை வாழ்த்துவோம்.

Post a Comment