Thursday, March 23, 2023

வாட்ஸ் அப்பில் வந்த வாத்தியாரின் புலம்பல்

 *இப்படி ஒரு கவிதையை ஒரு ஆசிரியராக படிப்பேன் என்று கனவிலும் நினைக்கவில்லை*

👇👇👇


*பள்ளிக்கூட* 

வகுப்பறையில்

*சல்லித்தனம்* 

நடக்குது!


*சொல்லித்தரும்* 

வாத்தியார

*சுள்ளானெல்லாம்* 

அடக்குது!


*வீணைன்னு* 

நெனச்சதெல்லாம்

*விசிலடிச்சுத்* 

திரியிது!


*தூணுன்னு* 

நெனச்சதெல்லாம்

*துருப்பிடிச்சு* 

உரியுது!


*முத்தலாக* 

விளையும் பயிர்

*முளையிலயே* 

தெரியுது!


*பெத்தவங்க* 

அடிவயிறு

*பெட்ரோலா* 

எரியுது!


*குத்து விளக்கு*

எல்லாம்

*கூட்டம் சேர்ந்து* 

குடிக்குது!


*கத்துத் தரும்* 

வாத்தியார

*சுத்தி கும்மி* 

அடிக்குது!


*முடி வெட்ட* 

சொன்னதுக்கே

*முறுக்கிக்கிட்டு* 

மொறைக்குது!


*அடிபட்ட* 

நாயப்போல

*ஆத்திரத்தில்* 

குறைக்குது!


*தேர்வெழுத போகும்* 

கையில்

*பீர் பாட்டில்* 

நுரைக்குது!


*போற பாத* 

தெரியாம

*போத கண்ண* 

மறைக்குது!


*வால் இல்லா* 

வானரங்க

*வகுப்பறைய* 

கெடுக்குது!


*மேல்நிலைப் பள்ளி* 

மேசைகள

*மேல ஏறி* 

ஒடைக்குது!


*பாடம் வகுப்பில்* 

நடக்கும்போதே

*பாட்டுப்பாடி* 

ஆடுது!


*தோரணையா* 

படுத்துத் தூங்க

*தோழி மடியத்* 

தேடுது!


*படிக்கச் சொன்ன*

வாத்தியார

*அடிக்க கைய* 

ஓங்குது!


*மாணவ* 

சமுதாயத்தோட

*மானத்தையே* 

வாங்குது!


*சமுத்திரமா* 

நினைச்சதிப்போ

*சாக்கடையா* 

தேங்குது!


*சமுதாய* 

நலன்களுக்கு

*மிகப்பெரிய* 

தீங்கிது!


*வருங்காலத்* 

தூண்களெல்லாம்

*வளஞ்சு போயி* 

கெடக்குது!


*பெரம்பெடுத்து* 

திருத்தலாம்னா

*சட்டம் வந்து* 

தடுக்குது!


படித்ததில் பிடித்தது....

2 comments:

Post a Comment