'ஒரு' (ஏக )பத்தினி விரதனாகி
'இரண்டு' புதல்வர்களுக்குத்
தந்தையாகி
'மூன்று'
அன்னையர்களின்
மடியில் தவழ்ந்து
'நான்கு'
சகோதரர்களில்
ஒருவராகி
'ஐந்து' என
உடன்பிறப்பாகக்
குகனை ஏற்று
'ஆறு' எழுத்தாம்
இராமாயணம்
எனும் காவியத்தை
'ஏழு' காண்டங்களாக
இயற்றவைத்து
'எட்டு' எழுத்தாம்
சுந்தரகாண்டம்
நாயகனைத்
தன் பக்தனாக்கி
'ஒன்பது' எனும்
திதியாம்
நவமியில் அவதரித்து
'பத்து' தலை
இராவணணை
வதம் செய்த
இராமபிரானை
ராமநவமி தினமான
இன்று
பக்தியுடன்
போற்றி வணங்கிடுவோம்!
அனைவருக்கும் இனிய ராமநவமி
நல்வாழ்த்துக்கள்!
No comments:
Post a Comment