சங்கர பாஷ்யத்திற்கு அர்த்தம் அத்துப்படி
பிரம்ம ரகசியம் என்பதெல்லாம் எனக்கு வெறும் ஜுஜுபி
என்பவர்களையெல்லாம் அழைத்து
தமிழ்மணத் தர வரிசைப் பட்டியல் எப்படி
தீர்மானிக்கப்படுகிறது எனக் கேட்டால்
நிச்சயம் தலையைப் பிய்த்துக்
கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்
அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்
மறுமொழிகள் ,வாசகர் பரிந்துரை, வாக்குகள்
என வருகிறதா எனப் பல நாள் தொடர்ந்து
கவனித்துக் குழம்பிப் போன பலருள் நானுமொருவன்
சரி அது எப்படியோ போகட்டும்
அது அவர்கள் விதிப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
போட்டி என்றால்
தனி நபருக்கும் தனி நபருக்கும்
இருப்பதைப் பார்த்திருக்கிறோம்
குழுக்களுக்கும் குழுக்களுக்கும்
நடப்பதைப் பார்த்திருக்கிறோம்
தனி நபருக்கும் குழுக்களுக்கும்
குழுக்களுக்கும் தனி நபருக்கும் இருப்பதை
எங்காவது பார்த்திருக்கிறோமா ?
அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர்
என்றாவது முதலாவதாக வரச் சாத்தியம் உண்டா ?
தமிழ்மணத் தர வரிசைப் பட்டியலில்
பதிவர்களைப் பொருத்துப் பட்டியலிடுவது சரி
அதற்குள் திரட்டிகளையும் ஒரு பதிவர் கணக்கில்
எடுத்து பட்டியலிடுவது எப்படிச் சரி ?
தமிழ் நியூஸ்,புரட்சி நியூஸ் மற்றும்
வலைச்சரத்தையெல்லாம் ஒரு பதிவாகக் கொண்டு
பட்டியலிடுதல் எந்த வகையில் சரியென எனக்கு
விளங்கவே இல்லை
இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்
திரட்டிகளைத் தவிர தனிப்பதிவர்கள் என்றேனும்
வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா ?
எனக்குப் புரியவில்லை
இது குறித்துப் புரிந்தவர்கள் பதிவிட்டால்
மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்
பிரம்ம ரகசியம் என்பதெல்லாம் எனக்கு வெறும் ஜுஜுபி
என்பவர்களையெல்லாம் அழைத்து
தமிழ்மணத் தர வரிசைப் பட்டியல் எப்படி
தீர்மானிக்கப்படுகிறது எனக் கேட்டால்
நிச்சயம் தலையைப் பிய்த்துக்
கொள்ள ஆரம்பித்துவிடுவார்கள்
அவர்கள் குறிப்பிட்டிருக்கிறபடி பார்வைகள்
மறுமொழிகள் ,வாசகர் பரிந்துரை, வாக்குகள்
என வருகிறதா எனப் பல நாள் தொடர்ந்து
கவனித்துக் குழம்பிப் போன பலருள் நானுமொருவன்
சரி அது எப்படியோ போகட்டும்
அது அவர்கள் விதிப்படியே இருந்துவிட்டுப் போகட்டும்
போட்டி என்றால்
தனி நபருக்கும் தனி நபருக்கும்
இருப்பதைப் பார்த்திருக்கிறோம்
குழுக்களுக்கும் குழுக்களுக்கும்
நடப்பதைப் பார்த்திருக்கிறோம்
தனி நபருக்கும் குழுக்களுக்கும்
குழுக்களுக்கும் தனி நபருக்கும் இருப்பதை
எங்காவது பார்த்திருக்கிறோமா ?
அப்படி ஒருவேளை நடந்தால் தனிநபர்
என்றாவது முதலாவதாக வரச் சாத்தியம் உண்டா ?
தமிழ்மணத் தர வரிசைப் பட்டியலில்
பதிவர்களைப் பொருத்துப் பட்டியலிடுவது சரி
அதற்குள் திரட்டிகளையும் ஒரு பதிவர் கணக்கில்
எடுத்து பட்டியலிடுவது எப்படிச் சரி ?
தமிழ் நியூஸ்,புரட்சி நியூஸ் மற்றும்
வலைச்சரத்தையெல்லாம் ஒரு பதிவாகக் கொண்டு
பட்டியலிடுதல் எந்த வகையில் சரியென எனக்கு
விளங்கவே இல்லை
இப்படித் தேர்ந்தெடுக்கும் பட்சத்தில்
திரட்டிகளைத் தவிர தனிப்பதிவர்கள் என்றேனும்
வெற்றிபெற வாய்ப்பிருக்கிறதா ?
எனக்குப் புரியவில்லை
இது குறித்துப் புரிந்தவர்கள் பதிவிட்டால்
மிகவும் மகிழ்ச்சி கொள்வேன்