Saturday, August 1, 2015

இன்பம் கொள்ளும் சூட்சுமம்

எங்கும் ஜாலி எதிலும் ஜாலி
என்றும் ஜாலி ஜாலி-அதனால்
எங்கள் வழியில் என்றும் இல்லை-
கவலை அதற்குச் ஜோலி

விடிதல் வேண்டி வீணே நிற்கும்
எண்ணம் கடந்து விட்டோம் -அதனால்
முடியும் மட்டும் ஒளியைக் கூட்டி
இருளை நடுங்க வைத்தோம்

உணர வருவதே மகிழ்வு என்பதை
தெளிவாய்ப் புரிந்து கொண்டோம்-அதனால்
தினமும் வெளியில் தேடி அலையும்
அவலம் கடந்து விட்டோம்

பெறுதல் கொடுக்கும் இன்பம் சிறுமை
உணர்ந்து தெளிவு கொண்டோம்-அதனால்
கொடுக்க முடிந்த அளவு கொடுக்கும்
குணத்தைப் பெருக்கிக் கொண்டோம்

எத்தனைக் கோடி இன்பம் வைத்தாய்
என்று மகிழ்ந்த ஒருவன்-இங்கே
மெத்தச் செல்வம் கொண்டு வாழ்ந்த
மனிதன் இல்லை தோழா

இதனை மட்டும் மனதில் கொண்டால்
போதும் அன்புத் தோழா-உனக்கும்
நிதமும் மகிழ்ந்து வாழும் தெளிவு
உன்னுள் பரவும் தானா

7 comments:

G.M Balasubramaniam said...

நித்தம்நித்தம் புதிய சிந்தனை கவிதை வடிவில் அதுவும் சும்மா ஜாலிக்கு என்றால்.... பாராட்டுக்கள்.

Yaathoramani.blogspot.com said...

G.M Balasubramaniam //

.நண்பர்கள் எனில் ஜாலிதான்
நண்பர்கள் தின கவிதையும்
ஜாலிகுறித்து இருந்தால் ஜாலிதானே

இளமதி said...

உண்மைதான் ஐயா!
மனத்தின் அன்பினைக் கொடுத்து வாங்குவதே
பெரிய இன்பம்தான்!
மொத்தத்தில் ஜாலி கவிதை ஜாலிதான்!

வாழ்த்துக்கள் ஐயா!

திண்டுக்கல் தனபாலன் said...

மகிழ்ச்சி ஐயா...

balaamagi said...

வணக்கம் ,
இருளை நடுங்க வைத்தோம்,,,,,,,,,
அனைத்தும் அருமை,
வாழ்த்துக்கள், நன்றி.

KILLERGEE Devakottai said...

நல்ல கவிதை ஜாலியாகவே இருந்தது.
த.ம. 5

Thulasidharan V Thillaiakathu said...

உன்மைதான் நண்பரே! //அதனால்
கொடுக்க முடிந்த அளவு கொடுக்கும்
குணத்தைப் பெருக்கிக் கொண்டோம்// பொருளாக இல்லாவிடினும் நம் அன்பினைக் கொடுக்கக் கொடுக்க அது இன்பம்தான்....ரசித்தோம் வரிகளை...

Post a Comment