Wednesday, December 16, 2015

நிலையான முகவரி

கடலுக்கு அலையது முகவரி
நிலவுக்கு பனியது முகவரி
மலருக்கு  மணமது முகவரி-என்
மகிழ்விற்கு "அவள்தான்" முகவரி

கொடையதற்கு கருணையே முகவரி
காதலுக்கு அன்பதே முகவரி
படையதற்கு தலைவனே முகவரி-என்
புகழுக்கு "அவள்தான் " முகவரி

மனதுக்கு நினைவதே   முகவரி
நினைவுக்கு மொழியதே  முகவரி
பகலுக்கு ஒளியதே  முகவரி-என்
உயர்வுக்கு  "அவள்தான்" முகவரி

கடவுளுக்கு கோவிலே முகவரி
கனியினுக்கு சுவையதே   முகவரி
உடலுக்கு முகமதே  முகவரி-ஆம் 
எனக்கென்றும் "கவிதையே   " முகவரி

12 comments:

சீராளன்.வீ said...
This comment has been removed by the author.
சீராளன்.வீ said...

வணக்கம் ஐயா !

முகவரிகள் கூறும் முகையவளின் அன்பில்
அகவரிகள் பூத்த அழகு !

மிகவும் ரசித்தேன் அருமை ஐயா தொடர வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் !
தம +1

வை.கோபாலகிருஷ்ணன் said...

முகவரிகள் பற்றி அனைத்தும் வரிக்கு வரி மிக அழகாகச் சொல்லியுள்ளீர்கள். பாராட்டுகள்.

இராஜராஜேஸ்வரி said...

முகவரிகளின் முத்தான தொகுப்புகள்..
சத்தான பகிர்வுகளுக்குப் பாராட்டுக்கள்..

மீரா செல்வக்குமார் said...

முகவரி சொன்ன உம் கவி வரி
அருமை

balaamagi said...

தங்கள் முகவரி அழகு.

G.M Balasubramaniam said...

/எனக்கென்றும் நீதான் முகவரி/ நானா...... !

”தளிர் சுரேஷ்” said...

முகவரி சொன்ன கவி வரிகள் கவர்ந்தன! அருமை! இப்போதுதான் கணிணி சீரடைந்து இணையம் பக்கம் வர முடிந்தது! நண்பர்களின் பதிவுகளை பார்க்க வேண்டும். நேரம் கிடைக்கையில் பழைய பதிவுகளை வாசிக்கிறேன்! நன்றி!

டி.என்.முரளிதரன் -மூங்கில் காற்று said...

உங்கள் கவிதைக்கு முகவரி எளிமை இனிமை.

கவிஞர்.த.ரூபன் said...

வணக்கம்
ஐயா

முகவரிக் கவிதை அற்புதம் ஐயா... படித்து மகிழ்ந்தேன் வாழ்த்துக்கள் த.ம 4

-நன்றி-
-அன்புடன்-
-ரூபன்-

Ilakkuvanar Thiruvalluvan said...

நன்று.

Thulasidharan V Thillaiakathu said...

அனைத்து முகவரிகளும் அழகு! உங்கள் முகவரியும் கவிதைகள் அன்றோ!

Post a Comment