Tuesday, July 12, 2016

காலமானவர் பட்டியலில் நீயா ? காவியமானவர் பட்டியலில் நீயா ?

அப்போது....

இலக்கற்றத்  தொடரோட்டத்தில்
நான் தனியனாய் ஓடிக் கொண்டிருந்தேன்

காலமும்
உடன் இணைந்தே  ஓடி வந்தது

இருமுனைப் போட்டியாளர்கள் போல்
இருவருமே ஓடிக் கொண்டிருந்தோம்

எப்படியும் அதுதான் வெல்லும் என்ற
நினைப்பின் சோர்வில்
நானும் இருந்தேன்

எப்படியும்
தான்தான் வெல்வோம் என்ற
அதீத மிதப்பில்
அதுவும் இருந்தது

அதனால்..

எங்கள் ஓட்டத்தில்
வேகமுமில்லை
போட்டியில்
சுவாரஸ்யமுமில்லை

பின்னொரு நாளில்..

இலக்கிருந்தால் நான் வெல்லச்
சாத்தியமிருக்கும் எண்ணம் வர...

இலக்கை நிர்ணயித்துக் கொண்டு
சட்டென ஓடத் துவங்கினேன்

இதுவரை நான் கண்டிராத
சக்தி என் உடலில் ஏற

இதுவரை நான் ஓடியிராத
வேகம் என் ஓட்டத்தில் கூட

அலட்சிமாய் வந்த காலமும்
வேகமெடுத்து உடன் தொடர

இப்போது...

எங்கள் ஓட்டத்தில்
இதுவரை இல்லாத வேகம்
எங்கள் போட்டியில்
இதுவரை இல்லாத சுவாரஸ்யம்

"காலத்திடம் தோற்றுக்
காலமானவர் பட்டியலில் நீயா ?
அல்லது
காலத்தை  வென்று
காவியமானவர் பட்டியலில் நீயா ? " என
உள்ளொலி ஓங்கி ஒலிக்க

நான் இன்னும் வேகமெடுக்கிறேன்
காலம் கொஞ்சம் திணறியபடித்தான் தொடர்கிறது 

10 comments:

வெங்கட் நாகராஜ் said...

திணறும் காலம்..... நல்ல கற்பனை.

த.ம. +1

KILLERGEE Devakottai said...

கவிதையோட்டம் அருமை கவிஞரே ரசித்தேன்

VVR said...

அருமை

VVR said...

அருமை

koilpillai said...

தலைப்போ பிரமாதம் அதன் தகவலோ எமக்கு வெகுமானம்.

கோ

அறம் செய் said...

அருமை

அறம் செய் said...

அருமை

K. ASOKAN said...

ஆழமான கரு...அழகான கவிதை நன்று

K. ASOKAN said...
This comment has been removed by the author.
K. ASOKAN said...
This comment has been removed by the author.

Post a Comment