Friday, February 17, 2017

இனியேனும் வாக்களிக்கையில் விழித்திருக்க முயலுங்கள்...

இதற்கு மேல்
நிச்சயம் எங்களுக்கு
உயர்வில்லை
உயர்வதற்கான தகுதியும்
எங்களுக்கில்லை

இதை நழுவ விட்டால்
மீண்டும் இதுகிடைக்க
நிச்சயம் வாய்ப்புமில்லை

செலவழித்ததை இனி
இருந்து சம்பாதிப்பதும்
அதற்குத் தோதாய்
பதவி பறிபோகாது
காத்துக் கொள்வதற்கும்

கூடுதலாய்க் கிடைக்கிற
பரிசுகளை
உல்லாசங்களை
விடாது அனுபவிப்பதற்கு
என்ன செய்ய வேண்டும் என்பதே
எங்களின் இன்றைய நிலைப்பாடு

எங்களிடத்தில் துளியும்
குழப்பமில்லை

உங்களைச் சந்தித்து
கெஞ்சிக் கூத்தாடி
மீண்டும் வெற்றி கொள்ளும்
எண்ணம் ஏதும் எங்களுக்கில்லை

அதற்கான வாய்ப்பும் இல்லை என்பது
எங்களுக்கு மிகத் தெளிவாய்த் தெரியும்

காரணம்
கொள்கைக் கோட்பாடு
கச்சடாக்கள் எல்லாம்
எங்களிடத்து அறவே இல்லை

எங்களைப் பொருத்தவரை
அது தேவையுமில்லை

துண்டுக்காக
வேட்டியை இழப்பது
அப்படியொன்றும்
கேவலமான விஷயமாக
எங்களுக்குத் தோன்றியதே இல்லை

நாங்கள் உங்களை மிகச் சரியாப்
புரிந்து கொண்டுள்ளோம்

நீங்கள்தான் எங்களை மிகச் சரியாய்ப்
புரிந்து கொள்ளாது அவதிப்படுகிறீர்கள்

நாங்கள் சுதந்திரமாய்
இல்லையென்றாலு கூட
உல்லாசமாகச் சந்தோஷமாகத்தான் உள்ளோம்

நீங்கள் சுதந்திரமாய்
இருந்தாலும் கூட
வேதனையில்தான் வெந்து கொண்டிருக்கிறீர்கள்

இதற்குமேல் எப்படி
மனம் திறப்பது ?

இப்போது நொந்து விழித்திருந்துப் பயனில்லை

இனியேனும்
வாக்களிக்கையில் விழித்திருக்க முயலுங்கள்

4 comments:

வை.கோபாலகிருஷ்ணன் said...

//இனியேனும் வாக்களிக்கையில் விழித்திருக்க முயலுங்கள்//

விரைவில் வாக்களிக்கும் சந்தர்ப்பங்கள் நமக்கு வருமா இல்லையா என்பது நாளை நடுப்பகலில் தெரிந்துவிடும். ?????

அன்பே சிவம் said...

ரௌத்திரம் அழகு

திண்டுக்கல் தனபாலன் said...

என்ன நடக்கப் போகின்றதோ...?

கரந்தை ஜெயக்குமார் said...

இனியேனும் விழித்திருப்போம்
அருமை

Post a Comment