Monday, September 13, 2021

பாரதி போல் ...புறக்கணிக்க இயலா உச்சம் தொடுவோம்..

 நீட் தேர்வை வைத்து இன்றைய நிலையில் அரசியல் கட்சிகள் அரசியல் செய்து கொண்டிருக்கும் நிலையில்  பிராமண சமூகத்தை சேர்ந்த ஒரு பெண்மணியின் பின் வரும் சுய வாக்குமூலம்... அனைத்து தரப்பினருக்கும் பொதுவான ஒரு கருத்தாய் நினைத்து

மிக கவனமாக படியுங்கள்.. சிந்தியுங்கள்.. செயல்படுங்கள்.!

👇👇👇


95% மார்க் வாங்கியும், பிராமணன் என்பதனால் வாய்ப்பு மறுக்கப்பட்ட எந்த பிராமண இளைஞனும் இளைஞியும் தற்கொலையை நாடியதில்லை! 


மெடிக்கல், என்ஜினீரிங், வேலை வாய்ப்பு எதுவானாலும் 'மெரிட்'டால் வெல்ல முயற்சிப்பான்!  


95/96/97% மதிப்பெண் பெற்றும் அந்த இடம் தனக்குக் கிடைக்கவில்லை என்றால் அடுத்த வாய்ப்பைத் தேடிப் போய்க்கொண்டே இருப்பான்! 


அயல் மாநிலமா, அயல் நாடா, எதுவும் அந்த பிராமண இளைஞன்/ இளைஞிக்குப் பொருட்டில்லை! 


எனவே அது 'நீட்' டோ, JEE யோ... 


கிடைத்தால் தர்ம வினை - கிடைக்காவிட்டால் கர்மவினை!  


சர்வம் கிருஷ்ணார்ப்பணம்! அதிக பட்சம் தனக்கு மெரிட் இருந்தும் வாய்ப்பு மறுத்த அரசுகளின் மீது ஒரு பிடி சாபம்! 


அத்துடன் பிராமண இளைஞன் அடுத்த வாய்ப்பைப் பார்க்கப் போய்கிட்டே இருப்பான்! 


படிப்பு மட்டுமின்றி பல்வேறு தேர்வுகளில் நாங்கள் வாங்கின 90+ % மதிப்பெண்களுக்கு...  


எத்தனையோ நுழைவுத் தேர்வு, அரசு வேலைத் தேர்வுகளில் நாங்கள் பெற்ற பாராட்டத்தக்க ரேங்குகளுக்கு...


பிராமணனாகப் பிறந்த ஒரே காரணத்தால் எமக்கு மறுக்கப்பட்ட வாய்ப்புகளுக்கு... 


தூக்கில் தொங்குவது என்று நாங்கள் முடிவெடுத்திருந்தால் கொத்துக் கொத்தாக நூற்றுக் கணக்கில் தொங்கி இருக்க வேண்டியிருக்கும்! 


"பகவான் எதையும் காரணமில்லாமல் மறுக்கவும் மாட்டான் - கொடுக்கவும் மாட்டான்"- என்று மனதைத் தேற்றிக் கொண்டுதான் எமது இளைஞர்கள் இத்தனை தலைமுறைகளைக் கடந்துள்ளோம்! 


ஒருவேளை சாப்பாட்டுக்கே கஷ்டம் மற்றும் தந்தையை இழந்த 8 வயது பிராம்ண ஆண் குழந்தை தந்தைக்கு அம்மாவாசை தர்ப்பணம் செய்ய 5 ருபாய் பணம் கிடையாது, குடும்ப பொறுப்புடன் மிக கடினமாக  Oriental Syllabus Sanskrit படித்து உழைத்து,  உழைத்த வருமானத்தில் IIT entrance clear பண்ணி படித்து, 17 வருடமாக படிப்படியாக முன்னேறி இன்றைக்கு ஒரு நல்ல பதவியில் 1 கோடி ரூபாய் சம்பளத்தில் இந்தியாவிலேயே வேலை செய்யும் தலை சிறந்த நிர்வாகத்தையும் பார்த்து இருக்கிறேன், இது வேறு யாரும் அல்ல, எனது கணவர் தான், in a public limited. 


Also Service to the nation, India Smart Cities Project - IT Enterprise Architect since last 3 years for country.


எந்த ஒரு சூழ்நிலையிலும் பணத்துக்காக  துரோகமிழைத்தில்லை.  இவை அனைத்தும்  ஓரு சிறிய Oriental பள்ளியில் RSS சொல்லி கொடுத்த பாடம்.


வெளியே சொல்வதில்லை, முடிந்த உதவிகளை கொண்டு ஒரு வருடத்திற்கு 5 குழந்தைகளுக்கான கல்வி செலவை ஏற்றும் படிக்கவும் வைக்கிறோம்.


My husband Quote:


தொழிலில் இந்தியா இரும்பு அடிக்கிற இடம், இங்கு ஈ க்கு வேலை கிடையாது. There are many opportunities for right profiles on red carpet.


இலக்கை நோக்கி தேடி போகதே, இலக்கை உருவாக்கு.


ஓரு நல்ல 15 வருட தொழில் அனுபவத்திற்கு பிறகு, வேலையை தேடாதே, மொத்த Industry யும் உன்னை தேட வேண்டும், அதற்கான தகுதியை வளர்த்துக்கொள்.....


Thanks : Lakshmanan Sankarasubramanian 

Courtesy : Gayathri Sampathkumar

2 comments:

நெல்லைத் தமிழன் said...

தற்கொலை எண்ணம் உள்ளவர்கள், NEET எழுதாமல் இருப்பதே நல்லது. நாளை தன் patientக்கு சரியாகவில்லை என்றால், அவர்களுக்கும் இதனையே suggest செய்வார்கள்

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு பகிர்வு.

Post a Comment