Thursday, September 9, 2021

உலக தற்கொலை தடுப்புத் தினம்.


 இன்று செப்டம்பர் 10


உலக தற்கொலை தடுப்பு தினம்.


     தற்கொலை எண்ணம் தோன்றினால் அதிலிருந்து எவ்வாறு விடுபடுவது என்பது குறித்த விழிப்புணர்வு ஊட்டவும், உணர்ச்சிகளின் சாராம்சங்களில் சிக்கிக் கொண்டு, தற்கொலை முடிவை தேர்ந்தெடுப்பவர்களை தடுக்கும் நோக்கிலும், செப்டம்பர் 10ஆம் தேதி உலக தற்கொலை தடுப்பு தினமாக அறிவிக்கப்பட்டு, உலக சுகாதார நிறுவனம் மற்றும் உலக தற்கொலைத் தடுப்பு சங்கம் இணைந்து செயல்படுத்தி வருகின்றன.

      உலக சுகாதார நிறுவனத்தின் அறிக்கை படி உலகம் முழுவதும் ஆண்டுக்கு 10 லட்சம் மக்கள் தற்கொலை செய்துகொள்கின்றனர்.

       இன்றும் 40 வினாடிகளுக்கு ஒருவர் தற்கொலை முடிவை தேர்ந்தெடுக்கின்றார் என்கிறது ஆய்வு.

      தமிழகத்தைப் பொருத்தவரை தற்கொலை விகிதம் 11.8 சதவீதமாக உள்ளது. 

      15 முதல் 30 வயதிற்குள்ளான

வர்களுக்கு பரவலாக ஏற்படும் மனச்சோர்வு, தேவையற்ற குழப்பம், சமூகத்தில் பிரச்சனைகளை கண்டு பயப்படுவது, பிரச்சனைகளை எதிர்கொள்ளும் மனப்பான்மையை இழந்தவர்களுக்கு தற்கொலை எண்ணமே முதலில் தோன்றுவதாக அறிவியலாளர்கள் கருத்து தெரிவிக்கின்றனர்.

      தற்கொலை உணர்வோடு யாரேனும் இருக்கும்போதோ அல்லது தங்களது உணர்வை வெளிப்படுத்தும்

போதோ அவர்களை அலட்சியப்படுத்தாமல், மருத்துவர் உதவியுடன் அல்லது பரிந்துரையாளர்கள் மூலமாக உரிய சிகிச்சையளித்து அவர்களின் மனதை மாற்ற முடியும் என்கின்றனர் மருத்துவர்கள்.

     வாழ்வில் பிரச்சனைகள் இல்லாத மனிதரே இல்லை, அதை  கண்களுக்கு அருகில் வைத்து பார்க்கும் போது அது உலகத்தையே மறைத்துவிடும், அதையே சற்று தள்ளிவைத்து பாருங்கள் அது என்ன என்பது நம் மனதிற்கு விளங்கும்.அதை தூக்கி கால்களுக்கு கீழே எறிந்துவிடுங்கள்.   

கஷ்டங்களையும் கவலைகளையும் மறந்து சிரிப்புடன் சிறப்பாக வாழ்வீர்கள்.

2 comments:

ராமலக்ஷ்மி said...

தற்கொலைகளைத் தடுப்பதற்கென ஒரு தினம் அனுசரிக்கப்படுவது அவசியமானதும் விழிப்புணர்வை ஏற்படுத்தக் கூடியதுமாகும். நல்ல பதிவு.

வெங்கட் நாகராஜ் said...

நல்லதொரு விஷயம். விழிப்புணர்வு தரவேண்டியது மிக அவசியம். 40 வினாடிக்கு ஒரு தற்கொலை - அடடா... என்னவொரு வேதனை.

Post a Comment