Wednesday, January 4, 2023

வரம் வேண்டா தவம்..

  என்மூலம் வந்ததெல்லாம்

என்னால்தான் வந்ததெனும்
எண்ணமில்லை என்பதனால்-என்
எண்ணத்தில் வறட்சியில்லை

போற்றுதலைத் தூற்றுதலை
ஓர்கணக்கில் வைப்பதனால்
வாட்டமுற வழியுமில்லை-சிந்தனைத்
தேக்கமுற வாய்ப்புமில்லை

தேடியோடி அலைதலையே
நாடிமனம் திரிவதனால்
பாடுபொருள் பஞ்சமில்லை-வார்த்தைத்
தேடுகிற துயருமில்லை

உணர்வோடு கருவினையும்
இணக்கமாக இணைப்பதினால்
இலக்கணமும் பகைப்பதில்லை-என்னைக்
கலங்கவிட்டு ரசிப்பதில்லை

வழிகாட்டும் ஒளிவிளக்காய்
எழுத்திருக்க நினைப்பதனால்
அணிதேடி அலைவதில்லை-அணிகளும்
எனைப்பகையாய்  நினைப்பதில்லை

 வரம்வேண்டா தவமாக
தினமெழுத முயல்வதனால்
நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

7 comments:

Anonymous said...

மிகவும் சிறப்பு

திண்டுக்கல் தனபாலன் said...

அருமை ஐயா...

Anonymous said...

"நிறைவுக்கும் குறைவில்லை
கலைவாணி அருளுக்கும் குறைவில்லை."

அருமை.... அருமை...💐💐🙏🙏

Anonymous said...

நிறைவுக்கும் குறைவில்லை-கலைவாணி
அருளுக்கும் குறைவில்லை

அருமை... அருமை. .💐💐🙏🙏

ஸ்ரீராம். said...

தொடரட்டும் எழுத்துப்பணி...

Anonymous said...

ஆஹா😃👍 🙏🏻🕉

Kamala Hariharan said...

வணக்கம் சகோதரரே

அருமையான கவிதை. ஒவ்வொரு வரிகளையும் மிகவும் ரசித்து படித்தேன். பகிர்வுக்கு மிக்க நன்றி.

நன்றியுடன்
கமலா ஹரிஹரன்.

Post a Comment