நற்குண மாந்தர் இந்த
மாநிலம் எங்கும் ஓங்கி
நற்செயல் பெருகி இந்தப்
பூமியே சொர்க்கம் ஆகும்
அற்புதம் நிகழ்த்த வந்த
அதிசய ஆண்டே வாராய்
துர்முக ஆண்டே வாராய்
தீந்தமிழ் ஆண்டே வாராய்
இத்தரை வாழும் யாரும்
இனிவரும் காலம் யாவும்
எச்சிறு குறையு மின்றி
இனிதென வாழ வென்றே
புத்தொளிப் பரவும் காலை
பிறந்திடும் எழிலே வாராய்
சித்திரை மகளே வாராய்
செந்தமிழ் அழகே வாராய்
மனமது நிறைவு கொள்ள
வாழ்வதும் நிறைவு கொள்ளும்
மனமதில் இந்த உண்மை
நிலைத்திட வேண்டும் என்றே
ஜனகரின் மைந்தன் தந்த
மகிழ்வுறு நாளே வாராய்
புனர்வசு நாளே வாராய்
பைந்தமிழ் நாளே வாராய்
இட்டமாய்ச் செய்யும் எல்லாம்
இனிமையே நல்கும் என்று
திட்டமாய் சொல்லி மாந்தர்
தெளிந்திட வென்றே கீதைத்
தந்தவன் தன்னை ஈந்த
திருமிகுத் திதியே வாராய்
அட்டமித் திதியே வாராய்
அருந்தமிழ்த் திதியே வாராய்
( துர்முக ஆண்டு, சித்திரை மாதம், புனர்பூஷ
நட்சத்திரத்தில்,அஸ்டமி திதியில் பிறக்கிறது
ஞாபகம் வைத்துக் கொள்ள அவசியப்படுவோர்
நினைவில் வைத்துக் கொள்வதற்காக )
மாநிலம் எங்கும் ஓங்கி
நற்செயல் பெருகி இந்தப்
பூமியே சொர்க்கம் ஆகும்
அற்புதம் நிகழ்த்த வந்த
அதிசய ஆண்டே வாராய்
துர்முக ஆண்டே வாராய்
தீந்தமிழ் ஆண்டே வாராய்
இத்தரை வாழும் யாரும்
இனிவரும் காலம் யாவும்
எச்சிறு குறையு மின்றி
இனிதென வாழ வென்றே
புத்தொளிப் பரவும் காலை
பிறந்திடும் எழிலே வாராய்
சித்திரை மகளே வாராய்
செந்தமிழ் அழகே வாராய்
மனமது நிறைவு கொள்ள
வாழ்வதும் நிறைவு கொள்ளும்
மனமதில் இந்த உண்மை
நிலைத்திட வேண்டும் என்றே
ஜனகரின் மைந்தன் தந்த
மகிழ்வுறு நாளே வாராய்
புனர்வசு நாளே வாராய்
பைந்தமிழ் நாளே வாராய்
இட்டமாய்ச் செய்யும் எல்லாம்
இனிமையே நல்கும் என்று
திட்டமாய் சொல்லி மாந்தர்
தெளிந்திட வென்றே கீதைத்
தந்தவன் தன்னை ஈந்த
திருமிகுத் திதியே வாராய்
அட்டமித் திதியே வாராய்
அருந்தமிழ்த் திதியே வாராய்
( துர்முக ஆண்டு, சித்திரை மாதம், புனர்பூஷ
நட்சத்திரத்தில்,அஸ்டமி திதியில் பிறக்கிறது
ஞாபகம் வைத்துக் கொள்ள அவசியப்படுவோர்
நினைவில் வைத்துக் கொள்வதற்காக )