Showing posts with label புதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 ). Show all posts
Showing posts with label புதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 ). Show all posts

Friday, August 21, 2015

புதுகை பதிவர் திருவிழா 2015 ( 1 )

ஒரு பேச்சாளர் மேடையேறி
மைக் பிடிக்கும் தன்னம்பிக்கையை வைத்தே
இவர் சிறந்த பேச்சாளரா இல்லையா என்பதை
பெரும்பாலும் அனுமானித்துவிடமுடியும்

அதைப்போலவே ஒரு பெரும் நிகழ்ச்சிக்கு
பொறுப்பேற்கிறவர் நிச்சயம் அவர் மிகச் சிறப்பாகச்
செய்து முடித்துவிடுவார் என்பதை அவர்
செய்கின்ற பூர்வாங்க ஏற்பாடுகளை வைத்தே
மிகச் சரியாக அனுமானித்துவிடமுடியும்

அந்த வகையில் முத்து நிலவன் ஐயா அவர்கள்
தலைமையில் புதுகை பதிவர் திருவிழா
ஏற்பாடுகளைச்செய்யத் துவங்கி இருக்கிற
புதுகை பதிவர்கள் பதிவர் சந்திப்பினை
மிகச் சிறப்பாகச் செய்து முடிக்க பல்வேறு
புதிய முயற்சியினை மேற்கொண்டுவருகிறார்கள்

இருந்தாலும் கூட பதிவர்கள் இதுவரை முடிந்த
பதிவர் சந்திப்பை விட இந்தச் சந்திப்பை
மிகச் சிறப்பான சந்திப்பாக்க ஏதேனும் ஆலோசனைகள்
இருப்பின் அதைத் தெரிவித்தால் நலமாக இருக்கும்
என்கிற எண்ணத்தில் இருக்கிறார்கள் என்பது
இன்று மதுரையில் அந்தத் துடிப்பு மிக்க பதிவர்கள்
சிலரைப் பார்த்துப் பேசுகையில் புரிந்தது

முதலாவதாக

எப்போதும் பதிவர் சந்திப்பில் மிகச் சரியாகவும்
முறையாகவும் விரைவாகவும் பதிவர்கள்
அனைவரையும் அறிமுகம் செய்வது
ஒரு சவாலான விசயமாகவே இருக்கிறது

என்னுடைய ஆலோசனையாக பதிவர்கள்
தங்களைக் குறித்து அவர்களே அறிமுகம் செய்யாது
மாவட்ட வாரியாக பதிவர்களை மேடையேற்றி
மாவட்டத்தின் சார்பாக யாரேனும் ஒருவர் வரிசையாக
அறிமுகம் செய்தால் சரியாக இருக்கும் என்பது
என்னுடைய கருத்து

ஏனெனில் எப்படித்தான் வலியுறுத்திச் சொல்லியும்
மிக நன்றாகப் பேசவும் தெரிந்த பதிவர்கள்
அவர்களையும் அறியாது கொஞ்சம் கூடுதல் நேரம்
எடுத்துக் கொண்டுவிடுகிறார்கள்

அது குறித்து பதிவர்கள் தங்கள் கருத்துக்களைப்
பதிவு செய்தால் அவர்களுக்கு உதவியாக இருக்கும்
என நினைக்கிறேன்

தொடர்புக்கு
bloggersmeet2015@gmail.com

(தொடரும் )