Sunday, January 29, 2017

நேர்மறையும் எதிர்மறையும்

"எங்கும் இல்லை
 எதிலும் இல்லை
 எப்போதும் இல்லை
 எனவே
 நம்பிக்கைக் கொள்ளல்
 மடத்தனம் " என்றான் இவன்

"சரி " என்றேன் நான்

" எங்கும் இருக்கிறது
  எதிலும் இருக்கிறது
  எப்போதும் இருக்கிறது
  எனவே
  நம்பிக்கை கொள்வதே
  அறிவுடமை" என்றான் இவன்

"அதுவும் சரி " என்றேன் நான்

 உடன்
 முரண் கருத்துக் கொண்ட
 இருவரும் ஒன்றாகி
 என்னுடன் முரண்படத் துவங்கினர்

" இரண்டும் சரியாய் இருக்க
 எப்படிச் சாத்தியம்  ?
 ஒன்று மட்டுமே
 நிச்சயம் சாத்தியம்
 அது எது ? " என
 இருவரும் முகம் சுழிக்கத் துவங்கினர்

 இது எதிர்பார்த்ததுதான்
 எனவே நான் சங்கடப்படவில்லை

 இருவரையும் இமை மூடச் சொல்லி
 "இப்போது என்ன தெரிகிறது " என்றேன்

 முன்னவன்
 மெல்லச் சிரித்தபடி
 "எதுவும் இல்லை " என்றான்

 பின்னவன்
 "இருள் தெரிகிறது " என்றான்

 இப்போது
 நான் மெல்லச் சிரித்தேன்

 இருவரில் ஒருவன்
தெளிந்துச்  சிரிக்க

மற்றவன்  வழக்கம்போல்
குழம்பித் தவித்தான்  

4 comments:

கரந்தை ஜெயக்குமார் said...

ஆகா
தங்களால் மட்டுமே முடியும் ஐயா
இதுபோல் எழுத
அருமை
தம +1

தி.தமிழ் இளங்கோ said...

ஆகா ... நானும் குழம்பித் தவிக்கிறேன்.

வெங்கட் நாகராஜ் said...

ம்ம்ம்....

G.M Balasubramaniam said...

எப்போதும் இருமைகள் உண்டே

Post a Comment