Saturday, February 18, 2017

"மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ ? "....

கூவத்தூர் ரிசார்ட்டை
சீரமைப்பதற்காக
மூன்று நாள்தான் மூடி இருக்கிறார்கள்

தவறுக்கு பிராயச்சித்தமாக
ஹோமங்கள் செய்து
மீண்டும் கூட
அதைத் திறக்கச் சாத்தியம் உண்டு

மக்கள்
தங்கள் மனக்கதவை
உங்களுக்கு எதிராக
நிரந்தரமாக மூடிவைத்துவிட்டார்களே

என்ன செய்யப் போகிறீர்கள் ?

"மக்கள் தீர்ப்புக்கு
எதிராக அரசாளவோ ? "
என்கிற புரட்சித்தலைவரின்
பாடல் அடிக்கடி
நினைவில் வந்து
எங்களுக்கு நம்பிக்கை தந்து போகிறது

அதே பாடல்
உங்கள் அடிவயிற்றைக்
கலக்கிப் போகும் என்பதில் எங்களுக்குத்
துளியும் சந்தேகமில்லை

பார்ப்போம்....

7 comments:

Unknown said...

மக்களின் எண்ணங்களை வார்த்தைகளாக வடித்திருக்கிறீர்கள்!

K. ASOKAN said...

நல்ல கருத்து

இராய செல்லப்பா said...

ஒன்றும் புண்ணியமில்லை. மீதியிருக்கும் ஆண்டுகளை அனுபவித்துத்தான் கழிக்கவேண்டும் - அவர்களும், நாமும். அதற்கு நடுவில், பெங்களூரில் இருந்து புழலுக்கு ரிக்வெஸ்ட் டிரான்ஸ்பர் கொடுக்கப் போகிறார்களாமே!

அன்பே சிவம் said...

நம்மை காக்க அல்ல நன்மையை காக்க சற்று
பொறுமை காப்போம்.
பொறுமை ந(ன்)ம்மை காக்கும்.

Yarlpavanan said...

மக்கள் தீர்ப்புக்கு எதிராக அரசாளவோ?
காலமே பதிலைச் சொல்லு!

கரந்தை ஜெயக்குமார் said...

காலம் பதில் சொல்லும்
பார்ப்போம் ஐயா
தம +1

சிகரம் பாரதி said...

இதற்கொரு மெரீனா புரட்சி வந்தால் வழியுண்டு.... https://www.sigaram.co/

Post a Comment